நீங்கள் ஏன் எளிமையாக இருக்கிறீர்கள்..? 2.0 விழாவில் ரஜினியின் சூப்பர் பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இப்படி ஒரு எளிமையான சூப்பர் ஸ்டாரை இந்திய சினிமா பார்த்திருக்குமா? என்பது தெரியாது.

அந்த எளிமைக்கு சொந்தக்காரர் நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான் என்று சொன்னால் அது துளியளவும் மிகையாகாது.

ரஜினியை பற்றி உங்கள் அபிப்ராயம் என்று எந்த பிரபலத்திடம் கேட்டாலும் அவர்கள் கூறும் பதில் அவரது எளிமை என்னை கவர்ந்தது என்பார்கள்.

இதே கேள்வியை இன்று துபாயில் நடைபெற்ற 2.0 படத்தின் பிரஸ் மீட்டிலும் கேட்டுள்ளனர்.

நிஜ வாழ்க்கையில் நான் நடிப்பது இல்லை. வாழ்க்கையில் நடிப்பதற்கு நான் சம்பளம் எதையும் பெறுவதில்லை. என்று தனக்கே உரிய புன்னகையுடன் பதில் சொன்னாராம் சூப்பர் ஸ்டார்.

மெர்சல் ரிலீஸாக தயாரிப்பாளருக்கு பணம் கொடுத்து உதவிய விஜய்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான மெர்சல் படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தன் 100வது படைப்பாக தயாரித்தது.

இப்படம் வெளியாகும் சமயத்தில் பல பிரச்சினைகளை சந்தித்தது.

தலைப்பு பிரச்சினை, சென்சார் பிரச்சினை, விலங்குகள் நல வாரியம் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளால் படம் தீபாவளிக்கு வெளியாகுமா? என்ற சந்தேகமும் எழுந்தது.

இதனால் படத்தை வெளியிட முடியாத சூழ்நிலையில் தவித்து வந்தாராம் தயாரிப்பாளர் முரளி.

இதனையறிந்த விஜய் ரூ. 5 கோடி தொகையை கொடுத்து, படத்தை வெளியிட உதவி செய்தாராம்.

நவம்பர் 7-ல் கமல்ஹாசனின் அரசியல் அவதாரம் ஆரம்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நான் பல வருடங்களாக அரசியலில் இருக்கிறேன் என கமல் சொன்னாலும் அது அண்மைகாலமாகத்தான் உறுதியாகி வருகிறது.

ட்விட்டர் தளத்தில் கருத்து சொல்லும் கமல் அரசியல் களத்திற்கு வரட்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் அவரை அழைக்க ஆரம்பித்து விட்டனர்.

ஆனால் தன் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிடாமல் தன் ரசிகர் மன்றத்தினருடன் ஆலோசனை நடத்தி வந்தார்.

இந்நிலையில், ஆட்சியாளர்கள் மக்களுக்காக உழைப்பார்கள் என்று நாம் நம்பியது போதும், நாமே களத்தில் இறங்குவோம் என ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதில்… ’செயலில் ஈடுபடுவார்கள் என்று பொருத்தது போதும், நம்மால் முடியும்.

நவம்பர் 7 ம் தேதி அதற்கான அறிவிப்பை வெளியிடுவேன்.

நம் இயக்கத்தார் என்னுடனும், மக்களுடனும் தொடர்பு கொள்ள வசதியாக ஏற்பாடுகள் நடக்கின்றன.

தமிழகத்திற்கு கடமையாற்ற நினைப்பவர்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன்.

தியாகமாக நினைத்து முன்வருபவர்கள் ஒதுங்கிக் கொள்ளுங்கள். அவர்கள் என்னை கடன்பட செய்வார்கள்.

இளைஞர்களை ஒருங்கிணைக்க வேண்டிய கடமையும் தேவையும் எனக்கு வந்து விட்டது.

நமது இயக்கத்துடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோருடன் சேர்ந்து தமிழகத்துக்கு பலம் சேர்ப்போம். இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தன் அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பை வருகிற நவம்பர் 7ஆம் தேதி அவரது பிறந்தநாளில் வெளியிடுவார் என எதிர்பார்க்கலாம்.

நாளை ஆந்திராவை அதிர வைக்கும் விஜய்; பாஜக-வுக்கு ரகசிய கட்டளை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஒரு வாரமாக (அதாவது தீபாவளி அக். 18) விஜய்யின் மெர்சல் புயல் தமிழக அரசியல் உலகை கலக்கியது.

மெர்சல் படம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த காரணம் பாஜக. தலைவர்கள்தான் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

இதனால் டெல்லி கட்சி தலைமையில் சில பிரச்சினைகள் எழுந்ததாம்.

தற்போது அது தமிழகத்தில் தணிந்துள்ள நிலையில் இந்த புயல் #adirindhi அடிரிந்தி என்ற பெயரில் தெலுங்கில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு நாளை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரிலீஸ் ஆகிறது.

தமிழக பிரச்சினை ஆந்திராவில் தொடரக்கூடாது என்பதால், தெலுங்கு தேசத்தில் உள்ள பாஜக.வினரை எதுவும் பேச வேண்டாம் என கட்சித் தலைமை கேட்டுக் கொண்டுள்ளதாம்.

2.0 இசை வெளியீட்டு விழாவிற்கு ரஜினியுடன் துபாய் பறந்தார் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 பட ஆடியோ வெளியீட்டு விழா நாளை துபாய் நாட்டில் நடைபெறுகிறது.

அங்கு இப்படத்திற்கான உலகளாவிய பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெறுகிறது.

இந்த இசை வெளியீடு பியுரிஜ் பார்க்கில் வருகிற 27-ந்தேதி வெள்ளிக்கிழமை (நாளை) நடைபெறுகிறது.

முதன் முறையாக இதற்கு துபாய் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

இதற்காக மிகப்பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

துபாயில் உள்ள பெரிய மால்களில் ரூபாய் 2 கோடி செலவில் பிரம்மாண்ட எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு இந்நிகழ்ச்சியை நேரலையாகக் காண்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாம்.

இதன் மூலம் ஒன்றறை லட்சம் பேர் பார்க்கக்கூடும் என கூறப்படுகிறது.

விழா தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி டிரெண்டாகி வருகிறது.

இந்தப் பிரம்மாண்ட நிகழ்வில் துபாய் அரசர் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விழாவில் கலந்துக் கொள்ள ரஜினிகாந்த் துபாய் செல்ல சென்னை விமான நிலையம் வந்துள்ளார்.

அவரை கண்ட ரசிகர்கள் கோஷமிட்டு உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.

ரஜினியுடன் அவரது மனைவி லதா ரஜினிகாந்த், மருமகனும் நடிகருமான தனுஷும் துபாய் சென்றுள்ளனர்.

Rajini and Dhanush fly to Dubai for 2point0 movie audio launch

மெர்சல் வெற்றி; மெகா கொண்டாட்டத்திற்கு தயாராகும் தளபதி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்யின் மெர்சல் பட வெற்றியை பார்த்து தமிழ் திரையுலகமே மெர்சலாகி வருகிறது.

எனவே இந்த வெற்றியை ரசிகர்களுடன் இணைந்து நெல்லையை சேர்ந்த ராம் சினிமாஸ் தியேட்டர் கொண்டாடவுள்ளது.

அதற்கான அறிவிப்பை அந்த நிறுவனம் தங்கள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

வருகிற அக்டோபர் 29 ம் தேதி, ஞாயிறு காலை 8.30 மணிக்கு மெர்சல் படத்தின் சிறப்புக்காட்சியை ஏற்பாடு செய்துள்ளார்கள்.

இந்த வெற்றி விழாவை விஜய் மக்கள் இயக்கங்கள் இணைந்து நடத்திகிறார்களாம்.

இதை முதல் நாள் முதல் காட்சி போல வாடிப்பட்டி மேளத்தாளத்துடன் கொண்டாடுங்கள் என குறிப்பிட்டுள்ளனர்.

Vijay fans plans to celebrate Mersal success on 29th Oct 2017

 

 

More Articles
Follows