தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
தற்போது மாரிசன் என்று தன் பெயரை மாற்றி, சங்கு சக்கரம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
புன்னகை பூ கீதா, திலீப் சுப்பராயன் மற்றும் 10 குழந்தைகள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
சினிமாவாலா மற்றும் லியோ விஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.
இப்படம் வருகிற டிசம்பர் 29ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இன்று சற்றுமுன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.
பொதுவாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர், நடிகைகள், கலைஞர்கள் படம் பற்றி பேசுவார்கள். இது வழக்கமான ஒன்றுதான்.
ஆனால் இன்று நடைபெற்ற நிகழ்வில் மோனிகா, தேஜா உள்ளிட்ட படத்தில் நடித்த குழந்தைகள் அனைவரும் பேசினார்கள்.
பகலில் பள்ளிக்கு சென்று இரவில் சூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றதையும், அங்கு உறங்க வேண்டும் என்று அடம் பிடித்ததையும் பகிர்ந்து கொண்டார்கள்.
மேலும் 2 மணி நேரம் மேக்கஅப் போட்டு அதை அழிக்க ஒரு மணி நேரம் ஆகும் என்பதையும் குழந்தை மோனிகா பகிர்ந்துக கொண்டார்.
தயாரிப்பாளர் சதீஷ் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும்போது எங்களுக்கு கிண்டர் ஜாய் மற்றும் சாக்லேட்டுக்கள் வாங்கி தருவார் என்றும் பேசினார்கள்.
ஒவ்வொருவரும் தங்கள் மழலை மொழி மாறாமல் அதே சமயம் நாமே வியக்கும் அளவுக்கு தெளிவாக பேசி அசத்தினர்.
இது பத்திரிகையாளர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தியது.
அந்த குழந்தைகளை அனைவரும் வாழ்த்தி சென்றனர்.