தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
“சேர்ந்தே மீள்வோம்…” என்று இந்த பாடல் தொடங்குகிறது.
இந்த பாடலுக்கு இசையமைத்து பாடி இருக்கிறார் ரஹ்மமான்.
இவருடன் ஸ்ருதிஹாசன், சித் ஸ்ரீராம், நீதி மோகன், ஜாவே அலி, சாஷா திருபாதி, கதீஜா ரஹ்மான், அபய் ஜோத்புர்கர் உள்ளிட்ட பலரும் பாடி உள்ளனர்.
இந்த புது முயற்சி குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதாவது:
ஒரு நல்ல காரியத்துக்காக இந்தப் பாடலை உருவாக்கியுள்ளோம். இந்த தேசமும் ஒன்று சேர்வதற்கான உந்துதலைக் கொடுக்கும் என்று நம்புகிறோம் என ரஹ்மான் கூறியுள்ளார்.
இந்தப் பாடலை எச்.டி.எப்.சி வங்கி தயாரித்து வெளியிட்டுள்ளது.
இந்த பாடலை ஷேர் செய்தால் ஒரு ஷேருக்கு 500 ரூபாய் வீதம் பிரதமரின் கொரோனா நிதிக்கு சேர எச்.டி.எப்.சி ஏற்பாடு செய்துள்ளது.
HDFC Bank AR Rahman and Prasoon Joshi collaborate for Song of hope