விஷால் திருமணம் எப்போது.? ஜிகே ரெட்டி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சங்கம் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பிறகுதான் தன் திருமணம் என விஷால் அறிவித்திருந்தார்.

அதன்படி விஷாலுக்கும்; பிரபல தொழிலதிபரின் மகளான அனிஷா ரெட்டிக்கும், கடந்த மார்ச் 18ல், நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

ஆனால் விஷாலின் கெட்ட காலமோ என்னவோ? பல மாதங்களுக்கு முன் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் கூட இன்னும் வெளியாகவில்லை.

தேர்தல் முடிவுகள் வந்த பின்னரே சங்க கட்டிட பணிகள் தொடங்கப்படும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில் விஷாலின் திருமணம் பற்றி ஜிகே ரெட்டி பற்றி கூறியதாவது…

“நடிகர் சங்கத் தேர்தல்கள் ஓட்டுக்கள் எப்போது எண்ணப்படும் என தெரியவில்லை. எப்போது இருந்தாலும் விஷால் அணி வெற்றி பெறும்.

அதன்பின்னர் கட்டப்படும் நடிகர் சங்க கட்டிடத்தில் விஷால் திருமணம் பார் போற்ற நடைபெறும். அதுவரை பொறுமை தேவை.” இவ்வாறு ரெட்டி கூறியிருக்கிறார்.

90 வயதிலும் நடிக்கும் சாருஹாசனுக்கு சாதனையாளர் விருது வழங்க விஜய்ஸ்ரீ கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளவர் சாருஹாசன். தேசிய விருதுகளையும் பல மாநில விருதுகளை வென்றிருக்கிறார்.

இவர் நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் என்பது நாம் அறிந்த ஒன்றுதான். இவருக்கு தற்போது 90 வயது ஆகிறது.

சில காலங்களாக நடிப்பதை நிறுத்திக் கொண்ட இவரை தாதா 87 படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு கொண்டு வந்தவர் இயக்குனர் விஜய்ஸ்ரீ.

பெண்களை அனுமதியின்றி தொடுவது குற்றம் என்ற எச்சரிக்கை வாசகம் இந்திய சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக இப்படத்திற்காக பயன்படுத்தப்பட்டது.

இந்த படம் அனைத்து தரப்பு மக்களின் பாராட்டையும் பெற்றது.

இந்த நிலையில் சாருஹாசனுக்கு மத்திய அரசின் உயரிய விருதான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட வேண்டும், அதற்கு தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என விஜய் ஸ்ரீ ஜி தெரிவித்துள்ளார்.

90 வயதிலும் தொடர்ந்து நடிக்கும் அவர் இந்திய சினிமா வரலாற்றில் மிகவும் வயதான நடிகராக வாழ்கிறார்.

அவருக்கு மத்திய அரசின் சாதனையாளர் விருது வழங்க தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என தன் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

DhaDha 87 director Vijaysris request to TN Govt

தளபதி 64 படத்திலிருந்து விலகிய தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிகில் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 நடித்து வருகிறார் விஜய்.

இவருடன் விஜய்சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்டனி வர்க்கீஸ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைக்க விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.

இந்த நிலையில் தயாரிப்பாளர் விலகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

படக்குழுவினருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, படத்தயாரிப்பு பணியில் இருந்து அவர் விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

Producer Xavier Britto is out of Thalapathy 64 movie

மீண்டும் சந்தானத்துடன் இணையும் ‘ஏ1 ஆபாயில்’ மாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சந்தானம் ஹீரேவாக நடித்து இறுதியாக வெளியான படம் ஏ1. இந்த படத்தில் ஹீரோயினாக தாரா அலிஷா நடித்திருந்தார்.

ஒரு காட்சியில் ஆபாயில் சாப்பிட்டால்தான் காதல் என சந்தானம் கண்டிசன் போடுவார். அப்போது ஆபாயில் சாப்பிடவும் தயாராக இருப்பார் இந்த ஐயர் ஆத்து மாமி.

இந்த நிலையில் தற்போது சந்தானம் நடித்து வரும் படத்திற்கும் இந்த நடிகையை சிபாரிசு செய்திருக்கிறாராம்.

ஜெயம்கொண்டான் கண்ணன் இயக்கும் இந்த படத்தில் தாரா அலிஷா தான் நாயகியாம்.

மற்றொரு நாயகியாக சுவாதி என்பவர் நடிக்கிறார்.

டகால்டி, டிக்கிலோனா ஆகிய படங்களும் சந்தானம் நடிப்பில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

A1 fame Tara Alisha again joins with Santhanam

30 வருடங்களாக தேடப்பட்ட கொலையாளி 15 வருடங்களாக சல்மான் கான் வீட்டில்!!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காதல் சர்ச்சைகள், மான் வேட்டை என பல ஆண்டுகளாக பரபரப்பாக பேசப்பட்டவர் பாலிவுட் நடிகர் சல்மான்கான்.

50 வயதைக் கடந்த போதிலும் இவர் இன்னும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை.

இந்த நிலையில் இவரது வீட்டில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சக்தி சித்தேஸ்வர் ராணா என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார்.

30 வருடங்களுக்கு முன் ஒர்லி பகுதியில் பல கொள்ளை வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவராம் இந்த ராணா.

அப்போதே தலைமறைவாகியுள்ளார். தற்போதுதான் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

இது சல்மான் கானுக்கும் பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளதாம்.

Caretaker of Salman Khans bungalow held in 30 year old robbery case

ஓய்வு எடுக்க இமயமலைக்கு சென்றார் சூப்பர் ஸ்டார் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏஆர். முருகதாஸ் இயக்க வரும் தர்பார் பட சூட்டிங்கை முடித்துவிட்டார் ரஜினிகாந்த்.

இந்த படம் 2020 பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளது.

டிசம்பரில் பட டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் தலைவர் 168 படத்தை அறிவித்துள்ளார் ரஜினி.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க சிவா இயக்குகிறார்.

இதன் சூட்டிங் டிசம்பர் 5ஆம் தொடங்கப்பட உள்ளது.

இந்த நிலையில் வழக்கம்போல இமயமலை சென்று 10 நாட்கள் ஓய்வெடுக்க திட்டமிட்டு இமயமலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார் ரஜினி.

Actor Rajinikanth on Himalaya spiritual tour for 10 days

More Articles
Follows