தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
கட்டணங்களை குறைக்கும் வரை புதுப்படங்களை ரிலீஸ் செய்ய மாட்டோம் என கூறி கடந்த 42 நாட்களாக திரையுலகினர் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.
இந்த வேலை நிறுத்தத்தால் இதுவரை சுமார் 50க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகவில்லையாம்.
தமிழ் சினிமா தோன்றிய காலத்திலிருந்து இப்படி ஒரு ஸ்டிரைக்கை திரையுலகினர் கண்டதில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் க்யூப் இல்லாத வேறு சில டிஜிட்டல் சேவை நிறுவனங்களுடன் தயாரிப்பாளர் சங்கம் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகிறது.
இதனால் ஸ்டிரைக் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் முழுவதுமாக எல்லா பிரச்சினைகளையும் தீர்த்துவிட்டு சில சட்டச் சிக்கல்களை முடித்து விட்டுத்தான் ஸ்டிரைக் தயாரிப்பாளர்கள் சங்கம் வாபஸ் பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுபோன்ற சின்ன சின்ன ஸ்டிரைக்குகளை சினிமா உலகம் பார்த்துள்ளது.
ஆனால் பண்டிகை நாட்களில் எப்படியாவது படங்கள் வெளியாகிவிடும்
ஆனால் இந்தாண்டுதான் முதன்முறையாக தமிழ்ப் புத்தாண்டுக்கு ஒரு படங்கள் கூட வெளியாகாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே ஸ்டிரைக் முடியும்போது கோடை விடுமுறையை கணக்கில் கொண்டு மே மாதம் நிறைய படங்களை வெளியிடுவார்கள் என கூறப்படுகிறது.
ஆனால் அவையனைத்தையும் மக்கள் ஒரே மாதத்தில் பார்ப்பார்களா? பார்க்கத்தான் முடியுமா? என்பதுதான் தற்போதைய கேள்வி.
For the first time No Tamil movie is release on Tamil new Year