சாமி ஸ்கொயர் படத்திற்காக காத்திருக்கும் தேவி ஸ்ரீபிரசாத் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே ரங்கஸ்தலம், பரத் அனே நேனு ஆகிய இரண்டு வெற்றிப்படங்களுடன் தன் இசை பயணத்தை வெற்றிக்கரமாகத் தொடர்கிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்.

இவரது இசை ப்ரியர்கள் இவரை டிஎஸ்பி என்று அன்பாக அழைத்து வருகின்றனர்.

இவை தெலுங்கு படங்களாக இருந்தாலும் தமிழகம் முழுவதும் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது.

இதைத் தொடர்ந்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்தின் இசையில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகும் ‘சாமி ஸ்கொயர் ’ என்ற படமும் விரைவில் வெளியாகவிருக்கிறது.

அண்மையில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற ‘சாமி ஸ்கொயர் ’ படத்தின் மோஷன் போஸ்டரை பார்த்த விக்ரம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களும் மோஷன் போஸ்டருக்கான இசையைக் கேட்டு ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள்.

தேவிஸ்ரீபிரசாத்தின் வித்தியாசமான இந்த இசைக்காக அவருக்கு திரையுலகினர் மட்டுமல்லாமல் இசை ஆர்வலர்களிடமிருந்தும் பாராட்டுகள் குவிகிறது.

அதிலும் ‘சாமி ஸ்கொயர் ’ போன்ற மாஸ் படத்தின் மோஷன் போஸ்டரிலேயே காயத்ரி மந்திரத்தையும், தீம் மியூசிக்கையும் சிம்பொனிக் ஸ்டைலில் இசையமைத்துள்ளார்.

சீயான் படம் என்றாலே மாஸ் தான். அதிலும் அவரின் டிஃபரென்ட் கெட்டப்க்கு ஒரு ரசிகர் பட்டாளமே காத்துக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் விக்ரமின் எடுப்பான போலீஸ் கெட்டப்புக்கு துடிப்பான பின்னணி இசையமைத்து சாமி ஸ்கொயர் படத்தின் மோஷன் போஸ்டரிலேயே தன் புதுமையான முயற்சியை கையாண்டிருக்கும் தேவி ஸ்ரீ பிரசாத், 26 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் இப்படத்தின் டிரைலரையும் தன் ஸ்டைலில் மிரட்டியிருப்பார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே ஏற்பட்டிருக்கிறது.

விக்ரம் = ஹரி கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் இசை வெளியீடு அடுத்தமாதம் இருக்கும் என்றும், அதற்கு முன்னதாக இப்படத்தில் இடம்பெறும் சிங்கிள் ட்ராக் வெளியாகக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சமுத்திரக்கனி – ஜிவி. பிரகாஷ் கூட்டணியில் சரத்குமார் – அமலாபால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாகன் பிக்சர்ஸ் கே.நாகன் பிள்ளை தயாரிக்கும் படம் “ வேலன் எட்டுத்திக்கும்“ என்று பெயரிட்டுள்ளார்.

இந்த படத்தில் சரத்குமார், நானி இருவரும் நாயகர்களாக நடிக்கிறார்கள். அமலாபால் நாயகியாக நடிக்கிறார். மற்றும் நாசர் பஞ்சுசுப்பு, சித்ரா, லட்சுமனன், சமுத்திரக்கனி,சிவபாலாஜி, பார்வதி நாயர், ராகினி திவேதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

வேலன் எட்டு திக்கும் என்ன மாதிரியான படம்..

இன்று ஊழல், லஞ்சம் என்கிற சாத்தான் இல்லாத நாடே இல்லை. எவ்வளவு பெரிய குற்றங்களுக்கும் ஒரு விலை நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. விலை கொடுத்தால் குற்றவாளி நிரபராதியாகவும், நிரபராதி குற்றவாளியாகவும் மாற்றப் படுகிறான். இப்படி உள்ள சூழ் நிலையை மாற்றப் போராடும் அரவிந்த் இதில் ஜெயித்தானா என்பது கதை.

இதில் ஆக்‌ஷன் மற்றும் பரபரப்பான காட்சிகள் ரசிகனை பரவசப் படுத்தும் .

ஒளிப்பதிவு – எம்.சுகுமார்

இசை – ஜி.வி.பிரகாஷ் குமார்

பாடல்கள் – கானாபாலா, கவிதா தண்டபாணி

எடிட்டிங் – எஸ்.என்.பாசில்

கதை, திரைக்கதை,வசனம், இயக்கம் பி.சமுத்திரக்கனி

தமிழ்நாடே எரியுது; டைரக்டர் ஷங்கர் செய்த காரியத்தை பார்த்தீர்களா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தூத்துக்குடியில் நடைபெற்று வரும் கலவரத்தால் தமிழ்நாடே கொந்தளிப்பில் உள்ளது.

போலீசுக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட மோதலில் அப்பாவி மக்கள் 10 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர்.

ரஜினி, கமல் முதல் பல்வேறு தலைவர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தன் படங்களில் மிகப்பெரிய சோஷியல் மெசேஜ் சொல்லும் டைரக்டர் ஷங்கர் அவர்கள் இன்று நடைபெற்ற ஐபிஎல் மேட்ச் & சிஎஸ்கே அணி பற்றி புகழ்ந்துள்ளார்.

இதற்கு பெரும்பாலோனோர் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

ஊருக்கு மட்டும் சினிமாவில் உபதேசம் பண்ற லட்சணம் இதுதானா என கேட்டு வருகின்றனர்.

பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வந்ததால் சில மணி நேரங்களுக்கு பிறகு ஷங்கர் அந்த பதிவை நீக்கி விட்டார்.

அதன்பின்னர் கலவரத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி என பதிவிட்டுள்ளார்.

முதன்முறையாக ரஜினியுடன் இணையும் தல-தளபதியின் ராசி ஹீரோயின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியின் நடிப்பில் காலா மற்றும் 2.0 படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த்.

இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க, அனிருத் இசையமைக்க, ரஜினியுடன் விஜய்சேதுபதி நடிக்கிறார்.

ரஜினிக்கு ஜோடியாக நடிப்பது யார்? என்று பல யூகங்கள் தோன்றின. அதாவது அஞ்சலி, திரிஷா, நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நாயகிகளின் பெயர்கள் அடிபட்டன.

ஆனால் காலா பட இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது லிங்கா படத்தில் ‘என் மகள் வயது பெண்ணுடன் நான் டூயட் ஆடியிருக்க கூடாது’ என ரஜினிகாந்த் பேசினார்.

எனவே இனி அதுபோன்ற சின்ன வயது பெண்களுடன் ரஜினி நடிக்க மாட்டார் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியுடன் சிம்ரன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

சந்திரமுகி படத்தில் ஜோதிகா வேடத்தில் முதலிலி நடித்திருக்க வேண்டியவர் சிம்ரன்தான்.

அப்போது சிம்ரன் கர்ப்பமாக இருந்ததால் வாய்ப்பு பறிபோனது.

தற்போது சிம்ரன் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சிம்ரன் புகழின் உச்சத்தில் இருந்த போது, விஜய் மற்றும் அஜித் படங்களுக்கு ராசியான நாயகியாக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Simran likely to teams up with Rajini for Karthik Subbaraj movie

மனோஜ் பீதா இயக்கத்தில் ஜோக்கர் நாயகன் நடிக்கும் வஞ்சகர் உலகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மனோஜ் பீதா இயக்குநராக அறிமுகமாகும் படம் `வஞ்சகர் உலகம்’.

காதல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில் புதுமுகம் சிபி நாயகனாகவும், அனிஷா ஆம்ப்ரோஸ் மற்றும் சாந்தினி தமிழரசன் நாயகிகளாகவும் நடித்துள்ளனர்.

நடிகர் குரு சோமசுந்தரம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கேங்ஸ்டராக நடித்திருக்கிறார்.

கேங்ஸ்டர் அம்சங்களுடன் காதல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில் விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விநாயக் கதையாசிரியராக பணியாற்றி இருக்கிறார்.

மெக்ஸிகோ நாட்டை சேர்ந்த ராட்ரிகோ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ். இசையமைத்திருக்கிறார்.

படத்தில் இருந்து `கண்ணனின் லீலை’ என்ற முதல் சிங்கிள் ஒன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தை இயக்குநர் மஞ்சுளா பீதாவே தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kannanin leelai single from Vanjagar Ulagam goes viral

சுவாதி கொலை வழக்கு படத்தலைப்பை மாற்றியதற்கு விஷால் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவம், திரைப்படமாக எடுக்கப்படுகிறது.

ரமேஷ் செல்வன் இயக்கும் இந்த படத்தில் சுவாதி கதாபாத்திரத்தில் ஆயிரா நடித்துள்ளார். நுங்கம்பாக்கம் இன்ஸ்பெக்டர் வேடத்தில் அஜ்மல் நடிக்கிறார்.

‘சுவாதி கொலை வழக்கு’ என முதலில் தலைப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் பெயரை நுங்கம்பாக்கம் என படக்குழுவினர் மாற்றினர். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இதில் நடிகர் விஷால், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்குனர் விக்ரமன், அஜ்மல், சினேகன், கதிரேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதில் விஷால் பேசும் போது, இந்த படத்தின் முந்தைய டைட்டிலான சுவாதி கொலை வழக்கு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் கலந்து கொண்டேன்..

புத்திரை படத்துக்கு போராட்டம் நடத்தி இரண்டு காட்சிகளை கேன்சல் செய்த கொடுமையையும் சந்தித்தேன். டிஜிட்டல் இந்தியா ஆதார் கார்டு பற்றி சொல்லப்பட்டதால் நானும் பிரச்சனையை சந்தித்தேன். பிரச்சனையை சந்திப்போம் என்றார்

படத்தின் இயக்குனர் எஸ்.டி.ரமேஷ் செல்வன் பேசும் போது…

ஒரு கொலை பற்றிய கதையை படமாக எடுத்துவிட்டு நான் ஊர் ஊராக ஓடி ஒளிய வேண்டியதாகிவிட்டது. ஜெயிலுக்கு மட்டும் தான் போகல.. அந்தளவுக்கு பிரச்சனைகளை சந்தித்து விட்டேன்.

எனக்கு வேற வேலை தெரியாது, சினிமா மட்டும் தான் தெரியும். அதுக்காக தான் போராடிக் கொண்டிருக்கிறேன் நிச்சயம் நுங்கம்பாக்கம் நல்ல படமாக வரும்” என்றார்

More Articles
Follows