ரஜினி-கமலுக்கு நடுவில் நான்… தேவி ஸ்ரீபிரசாத்தின் நெகிழ்ச்சி அனுபவம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர கலைவிழாவில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துள்ளார் தேவி ஸ்ரீபிரசாத்.

தென்னிந்திய நடிகர் சங்கம் மலேசியாவில் நடத்திய நட்சத்திரக் கலை விழாவில் நான் மேடையில் பாட்டுப் பாடிக் கொண்டே நடனமாடினேன்.

விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நடைபெற்ற என்னுடைய நிகழ்ச்சியை, அனைத்துத் திரையுலக நட்சத்திரங்களுடன் முன் வரிசையில் அமர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும், உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் ரசித்துக் கேட்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் பலரும் எழுந்து நின்று மகிழ்ச்சியுடன் கரவொலி எழுப்பினர். இது என்னுள் நெகிழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது.

அப்போது நான் மேடையிலிருந்து இறங்கி சூப்பர் ஸ்டார் மற்றும் உலகநாயகனின் பாராட்டிற்கு நன்றி தெரிவித்த போது, அவர்கள் தங்களுடைய மத்தியில் என்னை அமர வைத்துக் கொண்டனர்.

புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொள்ளும் அற்புதமான வாய்ப்பும் கிடைத்தது. இது என்னுடைய வாழ்நாளில் இது வரை கிடைக்காத சந்தோஷம். அது கிடைத்தபோது பரவசமானேன்.

இந்த இரண்டு பேருடைய பாராட்டும் ஒரே நேரத்தில் கிடைத்தது வாழ்க்கையில் மறக்க முடியாத விசயமாகிவிட்டது” என்றார் இன்ப வெள்ளத்தில் மிதக்கும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.

இதனிடையே கடந்த 2017 ஆம் ஆண்டில் தெலுங்கில் கைதி நம்பர் 150, நேனு லோக்கல், ராரண்டோய் வேடுக சூதம், துவ்வாட ஜெகந்நாதம், ஜெய ஜானகி நாயகா, ஜெய் லவ குசா, உந்நாதி ஒகட்ட ஜிந்தகி, மிடில் கிளாஸ் அப்பாயி என எட்டு படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

இந்த எட்டுப் படங்களும், அந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகியிருக்கின்றன. ‘ஒரே ஆண்டில் எட்டுப் படங்களுக்கு இசையமைத்து எட்டுப் படங்களின் பாடல்களையும் ஹிட்டாகிய ஒரே இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்” என்று தெலுங்ககு ஊடகங்கள் அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளன.

அதே போல் ஒரு திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களைப் பட வெளியீட்டிற்கு முன் வாரந்தோறும் சிங்கிள் சிங்கிள் ட்ராக்காக வெளியிடும் உத்தியைத் தெலுங்கில் ‘கைதி நம்பர் 150’ மூலம் தொடங்கி வைத்ததும் இவர் தான்.

இன்று அது அனைத்து மொழி திரைப்படங்களிலும் பிரபலமாகிவிட்டது. லிரிக் வீடியோஸில் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்களின் புகைப்படத்தையும், கான்செப்ட்டையும், கிராஃபிக்ஸையும் இணைத்து வெளியிடுவதையும் தேவிஸ்ரீபிரசாத் தான் அறிமுகப்படுத்தினார் என்பதும் கவனிக்கத்தக்கது.

தற்போது இவர் தமிழில் ‘சாமி ஸ்கொயர்’ என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார். பாடல்கள் அனைத்து மிக நன்றாக வந்திருக்கின்றன.

படப்பிடிப்புத் தளத்தில் படத்தின் பாடலைக் கேட்ட படக்குழுவினர், இந்த ஆண்டின் ஹிட் ஆல்பங்களில், ‘சாமி ஸ்கொயர்’ கண்டிப்பாக இடம்பெறுமென்ற மகிழ்ச்சியில் உள்ளனர்

அரசியல் அப்டேட்ஸ்; ரசிகர்களை நற்பணி நாயகர்களாக மாற்றிய கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று சென்னையில் உள்ள தனது அலுவலகத்தில் மதுரை, ‌திண்டுக்கல், சிவ‌கங்கை,‌ ராமநாதபு‌ரம் ஆகி‌ய 4 மாவட்ட நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு வடசென்னை மற்றும் தென்சென்னை ரசிகர்களை அவர் சந்திக்கவுள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

அப்போது அவர் பேசியதாவது…

35 வருடங்களாக ரசிகர்களாக இருந்தீர்கள்;

இனி நீங்கள் நற்பணி நாயகர்கள் அடுத்த கட்டத்துக்கு செல்ல தேவையான நேரம், தேவை ஏற்பட்டுள்ளது.

நாம் மக்களை நோக்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.” என்று பேசினார்.

நாளை புதுக்கோட்டை, நாகை, தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்சேதுபதியின் சீதக்காதி படத்தலைப்புக்கு சிக்கல்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்சேதுபதி நடிப்பில் 25-வது படமாக உருவாகி வருகிறது’சீதக்காதி’.

பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படதை தயாரித்து வருகிறது.

இப்படம் மேடைக் கலைஞர் ஒருவரின் வாழ்க்கைப் பயணமாக இக்கதை அமைந்திருக்கும் எனச் சொல்லப்பட்டது.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் இப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் இயக்குநர் மகேந்திரன், அர்ச்சனா, மெளலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்கள்.

இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

இந்நிலையில் இப்பட தலைப்பு குறித்து சேதுபதி-சீதக்காதி உறவின்முறை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அஜ்மல் தீன் கூறியதாவது:

”ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வணிகர் சேகு அப்துல் காதர் என்பவரின் பெயர்தான் சீதக்காதியாய் மருவியது.

ராமநாதபுரத்தை ஆண்ட மன்னன் கிழவன் சேதுபதி, சீதக்காதிக்கு விஜயரகுநாத என்ற பட்டத்தையும், மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி கடற்கரைகளில் முத்து குளிப்பதற்கான வரி வசூலிக்கும் அதிகாரத்தையும் வழங்கியதோடு மட்டுமின்றி தனது ஆலோசகராகவும் பணியமர்த்திக் கொண்டார்.

உமறுப் புலவர் சீறாப்புராணத்தை இயற்றுவதற்கும் நிதி அளித்தவர் சீதக்காதி,.

கர்ணனைப் போல கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர் சீதக்காதி என்று சைவப் புலவர் பொற்களந்தை படிக்காசுத் தம்பிரான் பாடியுள்ளார்.

சீதக்காதி என்றால் தமிழர்கள் அனைவருக்கும் நினைவிற்கு வருவது வள்ளல் சீதக்காதிதான்.

வள்ளல் சீதக்காதியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாமல் காட்சிகளை அமைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார் அஜ்மல் தீன்.

வெற்றிமாறன்-சமுத்திரக்கனி கூட்டணியில் ஜவுளித்துறை கதை படமாகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜவுளித்துறையை சார்ந்து தறியில் நடக்கும் அவலநிலையை மையமாக ‘தறி’ என்ற நாவலை பாரதிநாதன் என்பவர் எழுதியிருந்தார்.

இந்நிலையில் இதை மையப்படுத்தை ஒரு திரைப்படம் உருவாகிறது.

‘உதயம் NH4’, ‘புகழ்’ ஆகிய படங்களை இயக்கிய மணிமாறன் ‘சங்கத் தலைவன்’ என்ற பெயரில் உருவாகவுள்ள படத்தை இயக்குகிறார்.

வெற்றிமாறனின் ‘கிராஸ்ரூட் பிலிம் நிறுவனம்’ தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி 22-ம் தேதி தொடங்குகிறது.

சமுத்திரக்கனி, கருணாஸ், ஆகியோர் இதில் நடிக்கவுள்ளனர்.

மேலும் அறம் படத்தில் நடித்த சுனுலட்சுமி மற்றும் விஜய் TV தொகுப்பாளினி ரம்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இம்மாதம் 22 ந்தேதி இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது.

விஜய் படத்திற்கு 100 படகுகளை வைத்து படமாக்கிய முருகதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெர்சல் படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், நாயகியாக கீர்த்தி சுரேஷ், ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரன் மற்றும் எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி 19-ம் தேதி அன்று எளிமையான பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விட்டது.

தற்போது ஈசிஆரில் 100 படகுகளைக் கொண்டு சில காட்சிகளை படமாக்கியுள்ளனர்.

விரைவில் இப்படக்குழு மும்பை பறக்கவுள்ளதாம்.

இப்படத்தின் வசனங்களை ஜெயமோகன் எழுதியுள்ளார்.

இவர் ‘அங்காடித் தெரு’, ‘நீர்ப்பறவை’, ‘2.0’ உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி-வைரமுத்து கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்த இளையராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசையமைப்பாளர் இளையராஜா நேற்றுமுன்தினம் திருமலையில் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

அங்கிருந்த தேவஸ்தான அதிகாரிகள், தீர்த்த பிரசாதங்கள் வழங்கி இளையராஜாவை கவுரவித்தனர்.

இதனை தொடர்ந்து அவர் கோயிலை விட்டு வெளியே வந்தபோது அவரிடம் ரஜினி அரசியல், ஆண்டாள் குறித்த கவிஞர் வைரமுத்துவின் சர்ச்சை பேச்சு ஆகியவை குறித்து செய்திகாளர்கள் கேள்வி கேட்டனர்.

ஆனால் அவர் எந்த கேள்விக்கும் பதில் அளிக்காமல் அங்கிருந்து சென்று விட்டார்.

More Articles
Follows