BREAKING கமல் பேசுறது புரியலையா? சூப்பர் ஸ்டார் ரஜினி சூப்பர் பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசனின் 60 ஆண்டுகால சினிமா பயணத்தை கௌரவிக்கும் வகையில் கமல் 60 விழா சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் இந்நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல்ஹாசன் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற பாடலை முதல்பாடலாக பாடி அசத்தினார்.

இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது…

எங்கள் (கமல்) நட்பை யாராலும் பிரிக்க முடியாது, வேறு துறைக்கு சென்றாலும், சித்தாந்தம், கொள்கை வேறாக இருந்தாலும் நட்பு மாறாது.

கமல் பேசுவது புரியவில்லை என்கிறார்கள். தூங்குபவர்களை எழுப்பலாம். ஆனால் தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. கமல் பேசுவது எனக்கே புரிகிறது. மற்றவர்களுக்கு புரியவில்லையா?

இவ்வாறு ரஜினி பேசினார்.

Dont you understand Kamal Speech Rajini superb speech at Kamal 60

BREAKING அரசியலில் ரஜினி கமல் இணையனும் : SAC செம பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகநாயகனின் கமல்ஹாசனின் 60 ஆண்டுகால சினிமா பயணத்தை கொண்டாடும் வகையில் ‘உங்கள் நான்’ என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டு அரங்கில் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது.

கமலை கௌரவிக்க நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய்சேதுபதி உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டுள்ளனர்.

இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் கமல் குறித்து பேசியதாவது…

“சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்ற பேச்சு எப்போதும் இருக்கிறது.

யார் வேண்டுமானாலும் வரலாம் என இருக்கும்போது சினிமாக்காரர் ஏன் வரக்கூடாது ?

ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என நான் மட்டுமல்ல, ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.

கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார். கமல், ரஜினி எனும் இரண்டு ஜாம்பவான்கள். அவர்கள் இருவரும் இணைந்தால் தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் நல்லது.

அரசியலில் அடுத்த தலைமுறைக்கு மூத்தவர்கள் வழிவிட வேண்டும் நல்லாட்சி தந்த நீங்கள், உங்களின் தம்பிகள் வரும்போது அவர்களுக்கு வழிவிடுங்கள்” என எஸ்ஏசி பேசினார்.

Director SAC talks about Rajini Kamal and Vijay politics

பெரிய நட்சத்திரங்கள் இணையும் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிக்கும் காமெடி சரவெடி படம் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்தில் வெற்றிகொடிநாட்டிய “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” படத்தின் மூலம் பிரபலமாகியுள்ள நாயகன் ரியோ ராஜ் தனது அடுத்த படத்தில் காமெடியில் கலக்க உள்ளார். ரம்யா நம்பீசன் நாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் மேலும் பல பெரிய நட்சத்திரங்கள் இணைவதாக படக்குழு அறிவித்துள்ளது. தற்போது இணைந்திருக்கும் பெரும் நட்சத்திர பட்டாளம் இப்படம் காமெடிக்கு எந்த பஞ்சமும் வைக்கப் போவதில்லை என்பதை உறுதி செய்கிறது.

M S பாஸ்கர், சந்தான பாரதி, பால சரவணன், ரேகா, லிவிங்ஸ்டன், விஜி சந்திரசேகர், ரோபோ சங்கர், முனீஸ்காந்த், ஆடுகளம் நரேன், பழைய ஜோக் தங்கதுரை, மதுரை சுஜாதா ஆகியோருடன் மேலும் பலர் இப்படத்தில் இணைகிறார்கள். எல்லாதரப்பையும் கவரும் பல தரப்பட்ட நட்சத்திரங்கள் இணைவது படத்தின் வெற்றியை உறுதி செய்வதுடன் 90 கிட்ஸ் மற்றும் 2K கிட்ஸ் என இரு சந்ததியையும் ஒருங்கே கவரும் என்பதை அழுத்தி சொல்கிறது.

தயாரிப்பாளர்கள் ராஜேஷ்குமார், L சிந்தன் Positive Print Studios சார்பில் இப்படத்தினை தயாரிக்கிறார்கள். அவர்கள் தற்போதைய காலகட்டத்தில் மக்கள் இருக்கும் அதீத அழுத்தமிக்க மனநிலையிலிருந்து விடுதலை பெற, பொழுதுபோக்க காமெடி படங்களே அருமருந்து என நம்புகிறார்கள். முழுமையான காமெடி என முடிவான பிறகு A C கருணாமூர்த்தி மிக அழகான கதையை தந்துள்ளார். இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் காமெடி தெறிக்கும் பரபர திரைக்கதையை உருவாக்கியுள்ளார். புன்னகை தவழும் வசனங்களை எழுதியுள்ளார் RK. தயாரிப்பாளர்கள் ராஜேஷ்குமார், L சிந்தன் படத்தின் படப்பிடிப்பை மிக நேர்த்தியாக திட்டமிட்டுள்ளார்கள்.

படத்தின் மிகப்பெரிய பலமாக உள்ளங்களை கொள்ளை கொள்ளும் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். முதல் முறையாக முழு காமெடி படத்திற்கு அவர் இசையமைக்கவுள்ளார். B ராஜசேஜர் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் RDX எடிட்டிங் செய்கிறார். ஸ்டன்னர் சாம் சண்டைப்பயிற்சியை கவனிக்க, சரவணன் கலை இயக்கம் செய்கிறார்.

உண்மைச்சம்பவங்களால் உருவான “ தண்டுபாளையம்“

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக வெங்கட் கதை, திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் படம் ” தண்டுபாளையம் ”

சுமன்ரங்கநாத், முமைத்கான், பேனர்ஜி, D.S.ராவ், ராக்லைன் சுதாகர், புல்லட் சோமு, அருண் பச்சன், சஞ்சீவ்குமார், ஜீவா, விட்டல், சினேகா, ரிச்சா சாஸ்திரி, சந்தோஷ்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் மேடை நாடக கலைஞர்கள் என்பது கூடுதல் சிறப்பு. இவர்களுடன் தயாரிப்பாளர் வெங்கட் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

ஒளிப்பதிவு – R.கிரி

வசனம் – கிருஷ்ணமூர்த்தி

இசை – ஆனந்த் ராஜா விக்ரம்

பாடல்கள் – மோகன்ராஜ்

கலை – ஆனந்த் குமார்

ஸ்டண்ட் – kunfu சந்துரு

நடனம் – பாபா பாஸ்கர்

எடிட்டிங் – பாபு ஸ்ரீவஸ்தா, பிரீத்தி மோகன்

தயாரிப்பு – வெங்கட்

இயக்கம் – K.T. நாயக்

படத்தை ஸ்ரீ லட்சுமிஜோதி கிரியேஷன்ஸ் ஏ.என்.பாலாஜி உலகமெங்கு டிசம்பர் மாதம் வெளியிடுகிறார்.

படம் பற்றி இயக்குனர் K.T.நாயக் கூறியதாவது..

இது முழுக்க முழுக்க உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப் பட்டுள்ள படம். 1990 களில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள தண்டுபாளையம் என்ற ஊரில் இருந்து உருவான ஒரு கொள்ளை கும்பல் நாளடைவில் ஆசியாவிலேயே அதிக திருட்டு,கொலை, கற்பழிப்பு போன்ற சம்பவங்களை நிகழ்த்திய கொடூர கும்பலாக மாறியது. அந்த கேங்கின் உண்மைச் சம்பவங்களை திரட்டி இந்த திரைக்கதையை உருவாக்கி உள்ளோம்.

இந்த தண்டுபாளையம் ஏற்கனவே தெலுங்கு, கன்னடா ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது. படம் வருகிற டிசம்பர் மாதம் தமிழ், மலையாளம், ஹிந்தி, போஜ்பூரி, மராட்டி என பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.

“கருத்துகளை பதிவு செய்” படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமூக வளைதளங்களில் பெண்கள் சிக்கி எப்பேற்பட்ட வகையில் துன்பங்களை அனுபவிக்கிறார்கள் என்ற மைய கருத்தை முன்வைத்து கருத்துகளை பதிவு செய் என்ற திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.
இந்த படத்தினை ஜித்தன்2 மற்றும் 1am படங்களை இயக்கிய இயக்குநர் ராகுல் பரமகம்சா இயக்கியுள்ளார். பழம்பெரும் நடிகரான SSR.ராஜேந்திரன் அவர்களின் பேரன் SSR.ஆர்யன் இதில் கதாநாயகனாக நடித்துள்ளார்.படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை உபாசனா நடித்துள்ளார்..மேலும்
இப்படத்தில் இணை தயாரிப்பு விநியோகஸ்தர் JSKகோபி மற்றும் இசையமைப்பாளர் கணேஷ்ராகவேந்திரா பின்னணி இசை பரணி என பல்வேறு தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்தில் பணியாற்றி உள்ளனர்.

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் திரு.திருமாவளவன் அவர்கள் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார்…படத்தின் டிரெய்லரை பார்த்த அவர் படக்குழுவையும், இயக்குநர் ராகுலையும் வெகுவாக பாராட்டினர்.இம்மாதிரியான படங்கள் தற்போதுள்ள சமூக சூழ்நிலையில் தேவை என்றார்..
கடந்த வாரம் இத்திரைப்படம் சென்சார்போர்டுக்கு அனுப்பப்பட்டது .படத்தை பார்த்த சென்சார் தலைமை அதிகாரி திருமதி.லீலா மீனாட்சி அவர்களும் படத்தின் இயக்குநரை பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிபிராஜின் “வால்டர்” படத்தின் டப்பிங் தொடங்கியது !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சிபிராஜ் கதை நாயகனாக நடிக்கும் “வால்டர்” படத்தின் டப்பிங் தொடங்கப்பட்டுள்ளது. ஷ்ரின் காஞ்ச்வாலா நாயகியாக இப்படத்தில் நடித்துள்ளார். U. அன்பரசன் இயக்கத்தில் தொடக்கம் முதலே எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் இந்தப்படம் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பில், தமிழர் வரலாற்றில் ஆன்மீக புகழ் கொண்ட கும்பகோணத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. மிக வித்தியாசமான திரில்லராக உருவாகியுள்ள இந்தப்படத்தின் ஷூட்டிங் முழுதும் முடிக்கப்பட்டு தற்போது படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. படத்தின் டப்பிங் பணிகள் தற்போது ஆரம்பித்து நடைபெற்று வருகிறது

11:11 Production சார்பில் இப்படத்தினை தயாரிக்கும் ஸ்ருதி திலக் கூறியதாவது…

இப்படத்தின் ஷூட்டிங் எதிர்பார்த்ததை விட மிக விரைவாக நேர்த்தியாக நடந்து முடிந்துள்ளது. இயக்குநர் அன்பரசன் திரைகதையை சொனனது போலவே எந்த மாற்றமும் இல்லாமல் அழகாக படம்பிடித்துள்ளார். படத்தின் ஷூட்டிங் துவங்குவதற்கு முன் படத்தின் கதையை கேட்டு அதிலுள்ள ஆக்‌ஷன் காட்சிகளின் காரணமாக படத்தின் ஷூட்டிங் தேதிகள் சில நாட்கள் அதிகரிக்க வேண்டியிருக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் அயராது உழைப்பில் எந்த ஒரு தாமதமும் இன்றி திட்டமிட்டபடி ஷூட்டிங் முடிக்கப்பட்டது. இந்த அற்புதமான படக்குழுவே அதற்கு காரணம். படத்தின் டப்பிங் பணிகளை இப்போது துவக்கியுள்ளது பெரும் மகிழ்ச்சியை தந்திருக்கிறது. போஸ்ட் புரடக்‌ஷன் பணிகளையும் தீவிரமாக முடித்து படத்தை திட்டமிட்டபடி திரைக்கு கொண்டுவருவோம் என்றார்.

11:11 Production சார்பில் ஸ்ருதி திலக் “வால்டர்” படத்தினை தயாரிக்கிறார். பரபர திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தில் சிபிராஜ் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். ஷ்ரின் காஞ்ச்வாலா நாயகியாக நடிக்கிறார். சமுத்திரகனி, ஷனம் ஷெட்டி, ரித்விகா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

More Articles
Follows