பதவிக்காக ஓடும் பரதேசி நாய்கள்… அரசியல்வாதிகள் மீது அமீர் தாக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நீட் மருத்துவ தேர்வு முறையால் மாணவி அனிதா தற்கொலை செய்துக் கொண்டது தமிழகத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த நாம் தமிழர் கட்சியின் தலைவரும் இயக்குனருமான சீமான், இயக்குனர் அமீர் நேரில் சென்றனர்.

அதன்பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் இயக்குனர் அமீர்.

அவர் பேசியதாவது…

“அனிதாவின் குடும்பத்தார் கேட்கும் கேள்விக்ளுக்கு பதில் சொல்ல முடியவில்லை.

நீட் தேர்வை எதிர்த்த போது வராதவர்கள், உயிர் போன பின்புதான் வருவீர்களா? எனக் கேட்கிறார்கள்.

டெல்லிக்கு எத்தனை முறை ஓடியிருப்பார்கள் தமிழக அரசியல்வாதிகள்.

ஓட்டுக்காகவும், பதவிக்காக ஓடும் பரதேசி நாய்கள் அவர்கள்.” என ஆவேசமாக பேசினார்.

Directors Seeman and Ameer condolence to Student Anitha death

தற்கொலை செய்த அனிதாவும் என் மகள்தான்; பிக்பாஸிலும் பேசும் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நீட் தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடியவர் பள்ளி மாணவி அனிதா.

மருத்துவ துறையில் நுழைய முடியாது என்பதால் தன் வாழ்வை முடித்துக் கொண்டார்.

இது ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து கமல்ஹாசன் பேசியதாவது…

அனிதா என்ன ஊர், என்ன பெயர் என்றெல்லாம் நான் பார்க்க விரும்பவில்லை. என் பெண்ணாக இருந்தால்தான் நான் கோபப்பட வேண்டுமா? கனவோடு வந்த அனிதாவை மண்ணோடு மண்ணாக அனுப்பிவிட்டோம். கட்சி கடந்து, மாநிலம் கடந்து, இந்த விஷயத்துக்காக வெகுண்டெழ வேண்டும்.

கனவுடன் வாழ்ந்த மாணவியை கண்மூட வைத்து, நல்ல மருத்துவரை இழந்து விட்டோம். இதனால் கண்ணீரோடு கோபமும் வருகிறது.

அக்ஷரா, ஸ்ருதியை போன்று அனிதாவும் எனக்கு மகள்தான்” என்று பேசியிருந்தார்.

மேலும் அவர் தொகுத்து வழங்கும் பிக்பாஸில் பேசும் கமல், இன்றைய நிகழ்ச்சியில் நேற்று நீட் தேர்வுக்கெதிராக போராடி மறைந்த மாணவி அனிதாவின் தற்கொலை பற்றிப் பேசுகிறார்.

‘எதிர்காலத்தைப் பொய்த்துவிட்டு இறந்தகாலமாகிவிட்டது ஒரு இளம் தளிர்…’ என அவர் பேசும் நிகழ்ச்சியின் ப்ரொமோ வெளியாகி இருக்கிறது.

In Bigg Boss show Kamalhassan will talk about NEET issue Anitha death

நயன்தாராவின் அறம் பட போஸ்டரில் அனிதா மரணம் எதிரொலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நீட் தேர்வு முறையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரை சென்ற மாணவி அனிதா, மனவேதனையால் நேற்று தற்கொலை செய்துக் கொண்டார்.

இதனால் தமிழகமே கொந்தளித்து உள்ளது.

இன்று ஆகஸ்ட் 2ஆம் தேதி மாலை வரை அவரது உடலை எடுக்க விடமாட்டோம் என மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீட் தேர்வு ரத்து என்ற அறிவிப்பை உடனடியாக அரசு வெளியிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் நயன்தாரா நடித்துள்ள அறம் பட போஸ்டரில் நீட் தேர்வால் மரணம் அடைந்த அனிதாவின் மரணம் குறித்து அச்சிட்டுள்ளனர்.

Nayantharas Aramm poster designed for Anitha suicide because of NEET

இதோ அந்த போஸ்டர்…

கபாலி-விவேகம் ரிலீஸ் டார்கெட்டில் மெர்சல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் கிட்டதட்ட 1100 தியேட்டர்கள் உள்ளன.

முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியானால் இதில் 850க்கும் அதிகமான தியேட்டர்களில் அவர்களின் படத்தை வெளியிட தயாராக இருப்பார்கள்.

கபாலி, விவேகம் உள்ளிட்ட படங்கள் ரிலீஸின் போது மற்ற படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதால், பெரும்பாலான தியேட்டர்களில் இந்த படங்களே திரையிடப்பட்டன.

இந்நிலையில் வருகிற தீபாவளிக்கு விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் படம் வெளியாகவுள்ளது.

இப்படத்தையும் சுமார் 800 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்களாம் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தினர்.

மெர்சல் படத்தின் தீம் மியூசிக் மற்றும் டீசர் விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mersal movie release plan updates

விஜய்யை தொடர்ந்து அஜித் படத்திலும் ரஜினி பட வில்லன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் ஏஆர் முருகதாஸ் இயக்கிய விஜய்யின் துப்பாக்கி படம் மாபெரும் ஹிட்டடித்தது.

எனவே இப்படத்தை இந்தியில் அக்‌ஷய்குமார் நடிக்க ரீமேக் செய்தார் ஏஆர். முருகதாஸ். ஹாலிடே என்ற பெயரில் 2014ல் இப்படம் ரிலீஸ் ஆனது.

இந்நிலையில் விஜய் படத்தை தொடர்ந்து அஜித் நடித்த வீரம் இந்தி ரீமேக்கிலும் அக்‌ஷய்குமார் நடிக்கவுள்ளாராம்.
இதன் சூட்டிங் அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது.

இப்படத்தை அக்‌ஷய்குமாரின் நெருங்கிய நண்பர் சஜித் இயக்க இருக்கிறார். இவர்கள் இருவரும் இணையும் 9வது படம் இது என கூறப்படுகிறது.

விரைவில் வெளியாகவுள்ள ரஜினியின் 2.0 படத்தில் அக்‌ஷய்குமார் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Akshaykumar doing Ajith role in Veeram Hindi remake

பக்கத்து வீட்டு பெண்ணை கடித்து குதறிய ஜாங்கிரி மதுமிதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானம் ஜோடியாக நடித்தவர் ஜாங்கிரி மதுமிதா.

இவரது வீட்டில் அருகில் ஒரு பெண்ணின் கையை இவர் கடித்து குதறியதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது…

தன் அடுக்குமாடி குடியிருப்பில் பராமரிப்பு கட்டணம் குளறுபடி காரணமாக உஷா உடன் பிரச்சினை ஏற்பட்டது.
மேலும் மற்றவர்களிடம் தன்னை பற்றி குற்றம் சாட்டியிருப்பதாக கூறியுள்ளார்.

இந்த பிரச்சினையின் போது உஷாவின் தொல்லையை தாங்க முடியாமல் லேசாக அவரை கடித்துவிட்டதாக கூறியுள்ளார்.

ஆனால் அந்த பெண் கடித்த இடத்தில் குத்தி குத்தி பெரிதாக்கிவிட்ட்டார்” என்றும் நடிகை மதுமிதா தெரிவித்துள்ளார்.

This is the reason behind why Madhumitha had to bite her neighbour

More Articles
Follows