ரசிகனுக்கு கைகொடுத்த பின் டெட்டாலில் கை கழுவும் விஜய்.. – சாமி (Video)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிந்து சமவெளி, மிருகம், உயிர் உள்ளிட்ட சர்ச்சையான படங்களை இயக்கியவர் சாமி.

இவர் நடிகர் விஜய் மீது பகிரங்க குற்றச்சாட்டை கூறி ஒரு வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

அதில்….

முன்னாள் இளைய தளபதியே என்னை நியாபகம் இருக்கா.? 2000 ஆம் ஆண்டில் உங்களிடம் ஒரு கதை சொன்ன வந்தேன்.

நீங்கள் மேடையில் பேசுவது சரியல்லை. படத்தை பற்றி பேசுங்கள். உங்களின் சாயம் விரைவில் வெளுத்து போகும்.

நீங்கள் ரசிகனிடம் கை குலுக்கி பேசிவிட்டு டெட்டால் போட்டு கை கழுவியிருக்கிறீர்கள். அதை நானே பார்த்து இருக்கிறேன். இதான் உங்கள் நிஜமான நடிப்பு.

சினிமாவை விட நிஜத்தில் நீங்கள் சிறந்த நடிகர்.

60 நாட்கள் சூட்டிங் போறீங்க. ரூ. 50 கோடி சம்பளம் வாங்குறீங்க. அதுவும் கறுப்பு பணம். ஆனால் மேடையில் பொய்யாக கருத்து பேசுகிறீர்கள். எத்தனை நாட்கள் தமிழகத்தை ஏமாத்துவீங்க.

உங்களை விட பெரிய பெரிய ஆட்கள் சினிமாவில் அரசியலில் இருக்கிறார்கள். எனவே சினிமாவில் மட்டும் நடிங்க. என அதிரடியான குற்றச்சாட்டுக்களை கூறியிருக்கிறார்.

Director Saamy slams Vijays acting in real life with his fans

‘மிக மிக அவசரம்’ மட்டும் தள்ளிப்போனது; 3 படங்கள் இன்று ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முதன்முறையாக இயக்கி தயாரித்துள்ள படம் ‘மிக மிக அவசரம்’.

புதுச்சேரியை சேர்ந்த ஸ்ரீபிரியங்கா என்பவர் நாயகியாக நடித்துள்ளார். முக்கிய கேரக்டரில் நாம் தமிழர் சீமான் நடித்துள்ளார்.

விஐபியின் பாதுகாப்பு பணிக்காக ஒரு நாள் முழுவதும் உச்சி வெயிலில் நிற்கும் ஒரு பெண் போலீஸ் கான்ஸ்டபிள் கதைதான் இந்த படம்.

இந்த படத்தை பார்த்த அனைவரும் பாராட்டி வரும் நிலையில் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்திரன் வாங்கியிருந்தார்.

அதன்படி இப்படம் இன்றைக்கு (அக்டோபர் 11ல்) ரிலீஸ் ஆகும் என முன்பே அறிவித்து இருந்தனர்.

ஆனால், போதுமான தியேட்டர்கள் கிடைக்காத காரணத்தால் படத்தை ஒரு வாரம் தள்ளி வைத்துள்ளதாக அறிவித்துள்ளார்கள். அதனால், படம் அடுத்த வெள்ளி அக்டோபர் 18ம் தேதி வெளியாகிறது.

ஆனால் ‘அருவம், பப்பி, பெட்ரோமாக்ஸ்’ ஆகிய மூன்று படங்கள் இன்று சொன்னப்படியே இன்று அக். 11ல் வெளியாகிறது.

Sripriyankas Miga Miga Avasaram movie again postponed

விமல் படத்தில் பிரபல தெலுங்கு நடிகை கார்ரொன்யா கேத்ரின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

களவாணி வெற்றியை தொடர்ந்து விமல் நடிக்கும் புதிய படம் “சோழ நாட்டான்” இதினை பட்டுக்கோட்டை “ரஞ்சித் கண்ணா” இயக்குகிறார் கதாநாயகி கார்ரொன்யா கேத்ரின் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது. இவர் நாயகியாக “Bangari Balaraju” என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானவர் அதை தொடர்ந்து தெலுங்கில் “SD”, ” Itlu Mee SriMathi” மற்றும் “Uttara”, போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

அது போக சிறந்த நடிகை மற்றும் நடனத்திற்கான தேசிய விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படம் பற்றி நாயகியிடம் கேட்ட போது எனக்கு தமிழ்நாடு மற்றும் தமிழ் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும், இயக்குனர் கதை சொல்லும் போதே எனக்கு படம் பிடித்துவிட்டது கதை ரொம்ப நல்ல இருக்கு சார் நான் தான் பண்ணுவேன் என்று உடனே ஒப்புக்கொண்டேன் இந்த படம் எனக்கு நல்ல வரவேற்ப்பை தரும் தமிழில் சிறந்த நாயகியாக வருவேன் என்று நம்புகிறேன் என்று கூறினார்..

ஒளிப்பதிவு “பிரகாஷ்”. பாடல்கள். “கலைக்குமார்”, “மணி அமுதவன்”, “சபரீஷ்”, ஹரிஷ் பிலிம் ப்ரோடுக்ஷன் சார்பாக “பாரிவள்ளல்” தயாரிக்கிறார்.எழுதி இயக்குகிறார் பட்டுக்கோட்டை “ரஞ்சித் கண்ணா””

அன்புள்ள கில்லி படத்துக்காக யுவன் சங்கர் ராஜா பாடிய புதுமையான பாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரைப்பட இயக்குநர் ஸ்ரீநாத்தின் ‘அன்புள்ள கில்லி’ படம் தொடங்கப்பட்ட நாளிலிருந்தே அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, ஆர்வத்தை அதிகப்படுத்தி வருகிறது. காரணம் நாயை மையப்பாத்திரமாகக் கொண்டு வழக்கமாக உருவாக்கப்பட்ட படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட முறையில் இது அமைந்திருப்பதுதான்.

கில்லி என்ற பெயர் கொண்ட லாபர்டார் வகை நாயின் பார்வையிலிருந்து இந்தக் கதை சொல்லப்படுவது மிகவும் புதுமையான அம்சமாகப் பார்க்கப்படுகிறது. படம் வளர்ந்து முழுமையடைந்ததிருப்பது குறித்து ஒட்டுமொத்த படக்குழுவும் முழு திருப்தியடைந்திருக்கும் நிலையில் இப்போது மற்றும் ஒரு கொண்டாட்டமான மனநிலைக்கு வந்திருக்கிறது படக்குழு. ஆம். இந்தப் படத்துக்காக அரோல் கரோலி இசையமைப்பில் யுவன் சங்கர் ராஜா ஒரு பாடலை பாடியிருப்பதுதான் படக்குழுவினரை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்திருக்கிறது.
இது குறித்து இயக்குநர் ஸ்ரீநாத் கூறியதாவது…

யுவன் சாரின் இசையும், அவரது தனித்துவம் மிக்க குரலும் காந்தம் போல் கேட்பவரைக் கட்டிப்போடும். அவர் இந்தப் படத்திற்குள் வந்தது ஒரு மேஜிக் மாதிரிதான் இருந்தது. இந்தப் பாடலுக்கான கம்போஸிங் முடிந்ததும், இசையமைப்பாளர் அரோல் கரோலியும் நானும் யுவன் சார் பாடினால் பிரமாதமாக அமைவதுடன் படத்துக்கும் பலம் சேர்க்கும் என்று நம்பி ட்யூனை அவருக்கு அனுப்பி வைத்தோம். ஆச்சரியமான முறையில், தனது ஒலிப்பதிவுக் கூடத்திலேயே பாடலை பதிவு செய்து கொள்ளும்படி உடனடியாக அவரிடமிருந்து அழைப்பு வந்தது.
ஆண் லாபர்டார் நாய் ஒன்றுக்காக குரல் கொடுத்து யுவன் சார் பாடியிருப்பது இதுவே முதல் முறை. இது ஒரு காதல் பாட்டு.

ஆண் நாய் பெண் நாய் தோன்றும் இந்தக் காதல் பாடலில் இடம் பெறும் மெலிதான நகைச்சுவைக் காட்சிகளும் ரசிக்கும்படி அமைந்திருக்கும். நாங்கள் ரசித்து அனுபவித்த இந்தப் பாடலை ரசிகர்களும் கேட்டு ரசிக்க விரைவில் வெளியிட இருக்கிறோம். காதால் கேட்டதும் இதயத்துக்குள் இடம் பெயரும் அழகான எளிமையான வார்த்தைகளால் பாடலை எழுதியிருக்கும் லவ் குருவுக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்லக கடமைப்பட்டிருக்கிறேன்.

லாபர்டார் நாய் பிரதான வேடத்தில் நடித்திருக்கும் அன்புள்ள கில்லி படத்தில் மைத்ரேயா, துஷாரா, வி.ஜே. ஆஷிக், சாந்தினி, மைம் கோபி, நாஞ்சில் விஜயன், மெளனராகம் புகழ் கிருத்திகா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். தற்போது விஷுவல் எஃபக்ட்ஸ் காட்சிகளை உருவாக்குவதில் படக்குழு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. படத்தின் வெளியீட்டு தேதி குறித்து விரைவில் அதிகார பூர்வமாக அறிவிப்பு வெளியாகும்.

பிறந்த நாளில் ரஜினியை சந்தித்த இசையமைப்பாளர் தரண் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் இளம் திறமைகளுள் ஒருவராக வளர்ந்து வருபவர் இசையமைப்பாளர் தரண். இவர் சமீபத்தில் தன் பிறந்த நாளை கொண்டாடினார். ஆனால் ஆச்சர்யமாக அவருக்கு கிடைத்த ஒரு பிறந்த நாள் பரிசு அவர் வாழ்வில் மறக்கமுடியாத பேரின்பமாக அமைந்தது. இன்னும் அந்த சந்தோஷ அதிர்ச்சியிலிருந்து மீளாதவராக அதனை கொண்டாடி வருகிறார். இசையமைப்பாளர் தரண் தமிழகத்தின் சூப்பர்ஸடார் ரஜினிகாந்தை பிறந்த நாளில் சந்தித்த நிகழ்வு தான் அது.

சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த நிகழ்வு குறித்து இசையமைப்பாளர் தரண் பகிர்ந்துகொண்டது…

இப்போது என்னுள் பரவும் உணர்வுகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை. இன்னும் பிரமை பிடித்த நிலையில் தான் இருக்கிறேன். சூப்பர்ஸ்டாரை சந்திக்க வேண்டுமென்பது என் சிறு வயதுமுதலான கனவு. நானும் என் மனைவியும் அவரது தீவிர ரசிகர்கள். கடந்த 25 வருடங்களாக அவரது படங்களை முதல் நாள், முதல் ஷோ பார்க்கத் தவறியதில்லை. அவரைச் சந்தித்த தருணம் வாழ்வின் உன்னதமான ஒன்றாக அமைந்தது. அவர் வீட்டில் எங்களை உபசரித்த விதம் மறக்க முடியாதது. லதா ரஜினிகாந்த் மேடம் என்னை தங்களின் மகன் போலவே பாவித்தார்கள். வீட்டில் கொலு நடக்கும் மிக முக்கியமான தொடர் வேலைகளிலும், அனைவரிடமும் மறக்காமல் என்னை அறிமுகப்படுத்தினார்கள். 15 வருடங்கள் முன்பாக எனது முதல் ஆல்பமான பாரிஜாதத்தை சூப்பர்ஸ்டார் அறிமுகப்படுத்தினார். இப்போது மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவருடன் அவர் வீட்டில் கிடைத்த நெருக்கமான சந்திப்பு, அவருடன் கழித்த தருணங்கள், அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் என் வாழ்வின் மறக்கமுடியாத பொன்னான நினைவுகள் என்றார்.

இசையமைப்பாளர் தரண் சமீபத்திய ஹிட் மற்றும் , இளைஞர்களின் ஃபேவரைட் ஆல்பமான “பப்பி” படத்திற்க்கு இசையமைத்துள்ளார். இதில் தமிழ் சினிமாவின் பெரும் பிரபலங்கள் யுவன் சங்கர் ராஜா, அனிருத், ஆர் ஜே பாலாஜி, கௌதம் மேனன் ஆகியோர் பாடல்கள் பாடியுள்ளார்கள். வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷன்ல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படம் வருண், சம்யுக்தா ஹெக்டே நடிப்பில் நாளை (11-10-2019) வெளியாகிறது.

இறுதிக்கட்டத்தில் “தனுஷு ராசி நேயர்களே” !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சரியாக திட்டமிடுதலும் அதை தெளிவாக நடைமுறைப்படுத்துவதுமே குறிப்பிட்ட நேரத்தில் எந்தக் காரியத்தையும் முடிக்கும் மந்திரம் ஆகும். சினிமா படப்பிடிப்பும் அப்படியே. ஹரீஷ் கல்யாண் நடிப்பில் உருவாகும் தனுஷு ராசி நேயர்களே படக்குழு இந்த திட்டமிடுதலுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது. அவர்கள் திட்டமிட்டபடியே படப்பிடிப்பை மிக விரைவாக முடித்து, தற்போது படப்பின்னணி வேலைகளை ஆரம்பித்துவிட்டது. படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

படம் பற்றி இயக்குநர் சஞ்சய் பாரதி கூறியதாவது….

நாங்கள் திட்டமிட்டபடியே, படக்குழுவின் அயராத உழைப்பில் சூட்டிங்கை முடிதிருக்கிறோம். புதுமுக இயக்குநரான எனக்கு கோகுலம் கோபலன் சார் மாதிரியான தயாரிப்பாளர் கிடைத்தது வரமென்பேன். படத்தின் சூட்டிங்கிற்கு தேவைப்படும் அனைத்து விஷயங்களையும் முன்னதாகவே தயார் செய்து தந்து, கேட்ட அனைத்தையும் கொடுத்து சூட்டிங் மிக விரைவாக, தடையற நடந்ததற்கு முழுமுதல் காரணம் அவர் தான். நாங்கள் இப்போது படத்தின் டப்பிங் வேலைகளை துவக்கி உள்ளோம். படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகளையும் முன்னதாகவே துவக்கிவிட்டோம். இப்படத்தில் முற்றிலும் புதிதான ஹரீஷ் கல்யாணை அவரது ரசிகர்கள் காணலாம். முரட்டுதனம் மிகுந்த மற்றும் காதல் பொங்கும் இளைஞனாக வந்த அவரது முந்தைய படங்களிலிருந்து மாறுபட்டு, இப்படத்தில் முழுக்க காமெடியில் இறங்கி கலக்கியிருக்கிறார். குடும்பத்துடன் கொண்டாடும் வகையிலான இக்காமெடிப்படத்தில் ரெபா மோனிகா ஜான் மற்றும் டிகங்கனா சூர்யவம்சி ஆகிய இரு நாயகிகளுக் மிளிரும் நடிப்பை வழங்கியுள்ளார்கள்.

ஶ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இப்படத்தினை புதுமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். “தனுஷு ராசி நேயர்களே” படத்தலைப்பை போலவே ராசியை நம்பும் ஒரு இளைஞன் வாழ்வில் அதனால ஏற்படும் பிரச்சனையும் அதன் தொடர்ந்த அதிரடி சம்பவங்களும் காமெடியாக சொல்லப்பட்டிருக்கிறது. குடும்பத்துடன் கொண்டாடும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகி வருகிறது.

More Articles
Follows