2ஆம் உலகப்போரின் கடைசி குண்டை சினிமா கொண்டாடும்.. – ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் அவரது உதவி இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கும் படம் இரண்டாம் ‘உலகப்போரின் கடைசி குண்டு’.

நடிகர் தினேஷ், ஆனந்தி, ரித்விகா, ராம்தாஸ், லிஜீஸ் ,நடிப்பில் படப்பிடிப்பு முடிவடைந்து இசைக்கோர்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் படத்தை தயாரிப்பாளர் பா.இரஞ்சித்துக்கு காண்பித்திருக்கிறார் இயக்குனர் அதியன்.

படம் பார்த்து முடித்த இரஞ்சித் இயக்குனர் அதியனை கட்டிபிடித்து முத்தம் கொடுத்து பாராட்டியிருக்கிறார்.

‘எனது மாணவன், எனது தயாரிப்பில் அதுவும் முதல் படமாக இப்படி ஒரு படத்தை எடுத்திருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது.

அனைவரும் ரசிக்கும்படி, மிகவும் தரமான ஒருபடம் எடுத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ‘ அனைவராலும் கொண்டாடப்படும் படமாக இருக்கும்.

மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது என்றிருக்கிறார்.

படத்தின் இயக்குனர் அதியன், ஒளிப்பதிவாளர் கிஷோர்குமார் இருவரும் தயாரிப்பாளர் பாராட்டில் கண் கலங்கிவிட்டார்களாம்.

Director Ranjith praises Irandam Ulagaporin Kadaisi Gundu movie

மீண்டும் வில்லன் ரூட்டுக்கே யூ-டர்ன் போடும் சௌந்தரராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுந்தரபாண்டியன் எனும் மாபெரும் வெற்றி படத்தில் வில்லனாக அறிமுகமாகி வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, தெறி, தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம் மற்றும் சமீபத்தில் வெளியான வெற்றி படம் சிலுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்து கவனம் பெற்றவர் சௌந்தரராஜா.

எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, ஒரு கனவு போல படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ள அவர், தனக்கென ஒரு பாதையில் வளர்ந்து வரும் இளம் நடிகர்.

இவர் அடுத்ததாக ‘விசாரம்’ என்ற படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது.

மேலும் நடிகர் சௌந்தரராஜா ஏஜிஎஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகும் பிகில் படத்திலும், விஜய்யுடன் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Soundararaja again going to act as Villain

முழு நீள நகைச்சுவை திரைப்படத்தில் நடிக்கும் அஞ்சலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை அஞ்சலியின் புத்துணர்ச்சியூட்டும் தோற்றமும், திகில் முதல் நாடக அடிப்படையிலான திரைப்படங்கள் வரை பன்முகப்படுத்தப்பட்ட கதைகளில் அவர் நடிப்பதும் தொடர்ந்து அவரை தலைப்பு செய்திகளிலேயே வைத்திருக்கின்றன. கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கத்தில் பலூன் இயக்குனர் கே.எஸ்.சினிஷ் ‘தி சோல்ஜர்ஸ் ஃபேக்டரி’ சார்பில் தயாரிக்கும் ஃபேண்டஸி காமெடி படத்தில் நடிக்க தனது ஆற்றலை வளர்த்துக் கொள்ள தயாராக உள்ளார். கூடுதல் ஈர்ப்பாக யோகிபாபு மற்றும் விஜய் டிவி புகழ் ராமர் ஆகியோரை முழு நீள கதாபாத்திரத்தில், அஞ்சலியுடன் ஒருதலை காதலில் ஈடுபடும் ரோட்சைட் ரோமியோக்களாக நடிக்கிறார்கள்.

இது குறித்து தி சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரிப்பாளர் சினிஷ் கூறும்போது, “இந்த படத்தில் ஈர்க்கக்கூடிய விதிவிலக்கான அம்சம், இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் வடிவமைத்த அடிப்படை யோசனை. பெண்களை மையப்படுத்திய திரைப்படங்கள் எப்போதும் சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் அல்லது சமூக படங்களாக இருப்பது தான் வழக்கம். நகைச்சுவை படமாக முயற்சித்தாலும் கூட, முழு நீள நகைச்சுவை படமாக இருப்பதில்லை. சுவாரஸ்யமாக, இந்த கதை தன்னை ஒரு முழுமையான ‘பேண்டஸி காமெடி’யாக மாற்றிக் கொண்டது, மேலும் கிருஷ்ணன் ஸ்கிரிப்டை விவரித்த விதம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஏனெனில் நான் நிறைய நகைச்சுவை தருணங்களில் மெய்மறந்து சிரித்தேன்” என்றார்.

அஞ்சலியை இந்த படத்துக்கு தேர்ந்தெடுத்ததன் காரணத்தை பற்றி இயக்குனர் கே.எஸ்.சினிஷ் விரிவாகக் கூறுகையில், “நாயகியின் கதாபாத்திரம் சில குணாதிசயங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவை சின்ன சின்ன வெளிப்படுத்தல்களின் மூலம் உடனடியாக கவனத்தை ஈர்க்கும், அவை நவைச்சுவையை வரவழைக்கும். நாயகிகளின் பட்டியலை பார்ப்பதற்கு முன்பே, நடிகை அஞ்சலி அத்தகைய தனித்துவமான பண்புகளை பெற்றவர் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்” என்றார்.

இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் இது குறித்து கூறும்போது, “அஞ்சலி இந்த கதாபாத்திரத்தில் நடிக்க தகுதியானவர் என்ற நம்பிக்கை இருந்தபோதிலும், அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வாரா? என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் எங்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக, நான் அவருக்கு கதையை விவரிக்கையில், அவர் ஸ்கிரிப்டை ரசிக்க ஆரம்பித்தார். அத்தகைய சைகை என் நம்பிக்கையை அதிகரித்தது. இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதை அவர் திடீரென உறுதிப்படுத்தினார். சமீப காலங்களில் யோகிபாபு பல திரைப்படங்களில் நடித்து வருகிறார், அவரே முன்னணி கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். ஆனாலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில், முழு படத்திலும் தோன்றுவார். அதே போல, அஞ்சலி மற்றும் யோகி பாபு ஆகியோருடன் விஜய் டிவி புகழ் ராமரும் முழு படத்தில் இருப்பார்” என்றார்.

இந்த பிரபலமான நகைச்சுவை நடிகர்களை பற்றி குறிப்பிடும்போது, இதுபோன்ற வேடிக்கையான கதாபாத்திரங்களில் அவர்களை கற்பனை செய்து பார்ப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. முக்கியமான வேடங்களில் நடிக்க இன்னும் சில முக்கிய நடிகர்களுடன் பேச்சு நடந்து வருகிறது.

அர்வி (ஒளிப்பதிவு), விஷால் சந்திரசேகர் (இசை), சக்தி வெங்கட்ராஜ் (கலை), ரூபன் (படத்தொகுப்பு), என் ஜே சத்யா (ஆடை), குணா – ஃபிளையர்ஸ் & ஷெரிஃப் (நடனம்), அருண்ராஜா காமராஜ் (பாடல்கள்), திலீப் சுப்பராயன் (சண்டைப்பயிற்சி) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள். கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் துவங்க இருக்கிறது.

தனுஷ் பட பாணியில் அடல்ட் படம்; RK சுரேஷ் இயக்கும் ‘காலண்டர்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விநியோகஸ்தர், தயாரிப்பாளர், வில்லன், என பன்முக திறமை கொண்டவர் ஆர்.கே.சுரேஷ்.

அண்மையில் வெளியான பில்லா பாண்டி படத்தின் மூலம் ஹீரோவானார்.

மேலும் சில மலையாள படங்களில் முக்கிய கேரக்டரிலும் நாயகனாகவும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் விரைவில் இயக்குனராக இருக்கிறார்.

முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க ‘காலண்டர்’ என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த படம் தனுஷின் ‘துள்ளுவதோ இளமை’ மாதிரி அடல்ட் கண்டன்ட் படமாக இருக்கும் என அவரே சொன்னார்.

இதனை ரீல் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் தெரிவித்தார்

பிகில் படத்தில் விஜய்யுடன் இணையும் ஐ.எம்.விஜயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்யின் பிகில் படத்தில் நயன்தாரா, இந்துஜா, கதிர், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

அட்லி இயக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இதில் ஹாலிவுட் படங்களில் விளையாட்டு ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியுள்ள எமி மெக்டனெல் என்பவர் இணைந்து பணியாற்றி வருகிறார்.

தற்போது கேரளாவைச்சேர்ந்த ஐ.எம்.விஜயன் என்பவரும் இணைந்திருக்கிறார்.

இவர் ஏற்கனவே திமிரு, கொம்பன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்துக்காக காத்திருக்கும் பாலிவுட் புரொடியூசர்; மௌனம் காக்கும் தல

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘நேர்கொண்ட பார்வை’. படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தை அடுத்து மீண்டும் இதே கூட்டணி இணையவுள்ளது.

ஆனால் இதே கூட்டணி 3வது முறையாக இணையவுள்ளதாகவும் செய்திகள் வந்தன.

ஆனால், அதை தயாரிப்பாளர் போனி கபூர் மறுத்துள்ளார்.

“’நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு ஒரு ஆக்ஷன் படம் தயாரிக்க உள்ளோம். ஒரு ஹிந்திப் படத்தில் நடிப்பதற்காக அவரிடம் கேட்டுள்ளோம், ஆனால், அவர் இன்னும் சம்மதிக்கவில்லை,” என தெரிவித்துள்ளார்.

ஆனால் அஜித் எப்போது சம்மதிப்பார்? என்பது அவருக்கே வெளிச்சம்.

More Articles
Follows