நிஜ பாகுபலியை மிஞ்சிய கோஷம்; ஜப்பானில் ராஜமௌலி நெகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்து பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் வெளியானது.

இந்த இரண்டு படங்களும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை இந்திய சினிமா பக்கம் ஈர்த்தது.

உலகளவில் சுமார் 1700 கோடி வசூலித்த இப்படம் ஜப்பான் நாட்டில் கடந்த வருடம் 2017ல் டிசம்பர் 31ம் தேதி வெளியானது.

அங்கு 100 நாட்களுக்கும் மேல் ஓடி 15 மில்லியன் டாலர்கள் வசூலித்தது.

எனவே ஜப்பான் வினியோகஸ்தர் அழைப்பின் பேரில் படத்தின் இயக்குனர் ராஜமௌலி, தயாரிப்பாளர் ஷோபு ஆகியோர் அங்கு சென்றுள்ளனர்.

அங்கு பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு பின், ‘பாகுபலி 2’ படத்தின் சிறப்புத் திரையிடல் நடைபெற்றது. அதில் இயக்குனர் ராஜமௌலி கலந்துக் கொண்டார்.

அப்போது படம் பார்த்த ரசிகர்கள் ‘பாகுபலி’, ‘பாகுபலி’ என குரல் எழுப்பினர். அதை செல்பி வீடியோவாக எடுத்துள்ளார் ராஜமௌலி.

பாகுபலி படத்திலும் இதுபோன்ற கோஷங்கள் இருந்தன. அது படத்திற்காக எடுக்கப்பட்டது என்றாலும் இது நிஜத்தில் நிறைவேறியது என்பதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறாராம் ராஜமௌலி.

Director Rajamouli reaction In Japan Baahubali 2 got huge response

தாய்மொழிக்கே துரோகம் செய்தவர் ரஜினி.; பாரதிராஜா மீண்டும் தாக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பாரதிராஜாவின் தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டு பேரவை சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் மோதல் ஏற்பட, சிலர் காவல் துறையினரை தாக்கினர்.

இதை கண்டிக்கும் வகையில் ‘வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான்.” என கருத்து தெரிவித்திருந்தார் ரஜினிகாந்த்.

இதனை கண்டித்த பாரதிராஜா… கர்நாடக் காவியின் தூதுவர் ரஜினி என கடுமையாக விமர்ச்சித்திருந்தார்.

ரஜினியிடம் இந்த கருத்து குறித்து கேட்டதற்கு, அரசியலில் இதெல்லாம் சகஜம் என கூறியிருந்தார்.

தற்போது மீண்டும் ரஜினி பற்றி பரபரப்பாக பேசியுள்ளார் பாரதிராஜா.

‘நான் ஒரு பச்சைத் தமிழன் என ரஜினி கூறுகிறார். இதன் மூலம் அவர் தன் தாய் மொழி கன்னடத்திற்கு துரோகம் செய்துள்ளார்.

தாய் மொழிக்கு துரோகம் செய்துவிட்டு மற்றவர்களை எப்படி ரஜினி காப்பாற்றுவார்? முதலில் எதிரியை துரத்துவோம்.

பின்னர் அண்ணன், தம்பி பிரச்னைகளை பார்த்துக் கொள்வோம்’ என்று தெரிவித்துள்ளார்.

Again Bharathiraja speaks against Rajinikanth

விஜய்-சிவகார்த்திகேயன் கூட நடித்திருந்தாலும் தனுஷ் படத்தால் வாய்ப்பு பெற்ற கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்னாள் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை வைத்து ‘நடிகையர் திலகம்’ என்ற படம் உருவாகியுள்ளது.

இதில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ்ம், ஜெமின் கணேசனாக துல்கர் சல்மானும் நடித்துள்ளனர்.

இப்படம் மே 9ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது கீர்த்தி சுரேஷ் பேசியதாவது…

‘நடிகையர் திலகம்’ படம் உருவாக காரணம் இயக்குனர் நாகி மற்றும் தயாரிப்பாளர் ஸ்வப்னா. இப்படத்தின் கதையை கேட்டு உடனே நடிக்க சம்மதம் தெரிவிக்க வில்லை.

சிறந்த நடிகையின் வாழ்க்கை படத்தில் நான் எப்படி நடிப்பது? நிறைய பேருக்கு அவர்களுடைய வாழ்க்கை வரலாறு தெரியும். என்று நினைத்தேன். இயக்குனர்தான் எனக்கு நம்பிக்கை கொடுத்து நடிக்க வைத்தார்.

‘தொடரி’ படத்தை பார்த்துதான் இயக்குனர் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்.

‘தொடரி’ படம் எனக்கு ஏதாவது நல்லது பண்ணும் என்று நான் அப்படத்தில் நடித்த போது நினைத்தேன். அந்த படத்தை நிறைய பேர் குறை சொன்னார்கள்.

ஆனால், அந்தப் படம் தான் எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்துள்ளது.” என்றார்.

சிவகார்த்திகேயனுடன் 2 படங்களிலும் விஜய் 2 படங்களிலும் (1 படம் உருவாகி வருகிறது) நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

ஆனால் தனுஷ் உடன் நடித்த படமே சாவித்ரி என்ற நடிகையாக நடிக்க கீர்த்தி சுரேஷ்க்கு இந்த வாய்ப்பை பெற்றுத் தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Keerthy suresh got Mahanathi chance by Thodari movie role

புலி படத்தயாரிப்பாளருடன் இணையும் நடிகர் ஜிவி பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெயில்’ படம் மூலம் ஜி.வி.பிரகாஷை இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் வசந்த பாலன்.

இந்த படத்தை தொடர்ந்து பல படங்களுக்கு இசை அமைத்த ஜி.வி.பிரகாஷ் குமார் இப்போது ஒரு ஹீரோவாகவும் வலம் வருகிறார்

எனவே, ஜி.வி.பிரகாஷை கதாநாயகனாக நடிக்க வைத்து வசந்த பாலன் ஒரு படத்தை இயக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை ‘புலி’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும் ‘போக்கிரிராஜா’ படத்தை தயாரித்தவரும், ‘ஒன்பதுல குரு’ என்ற படத்தை இயக்கியவருமான பி.டி.செல்வகுமார் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.

பிரபாஸ்-சத்யராஜீக்கு பிறகு மகேஷ் பாபுவுக்கு கிடைத்த கௌரவம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகப்புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் பிரபாஸ் மற்றும் சத்யராஜின் உருவ சிலைகள் இடம் பெற்றுள்ளன.

தற்போது மகேஷ்பாபுவின் சிலையும் இடம் பெறவுள்ளது.

விரைவில் தனது மெழுகு சிலை இடம் பெறப்போவதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள மகேஷ்பாபு, இதை தனக்கு கிடைத்த கவுரவமாக கருதுவதாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மகேஷ் பாபுவின் உடல் அமைப்பின் மாதிரிகளை அருங்காட்சியகம் குழுவினர் எடுத்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்டைல் கூடவே பிறந்தது; வைரலாகும் ரஜினியின் அமெரிக்கா போட்டோஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடித்துள்ள காலா படம் ஜூன் 7-ம் தேதி ரிலீஸாகிறது.

தற்போது அவர் வழக்கமான உடல்பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். 2 வாரம் அவர் தங்குகிறார்.

இதனிடையில் அவர் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களுக்கு ஹாயாக தனியாக சுற்றி வருகிறார்.

அங்கு அவர் ஒரு எஸ்கலேட்டரில் ஸ்டைலாக போஸ் கொடுத்தப்படி உள்ள ஒரு படம் வைரலாகி வருகிறது.

இதே போன்ற ஒரு போஸ் சிவாஜி படத்தில் ரஜினி அமெரிக்காவில் இருந்து திரும்பும் ஒரு காட்சியில் இருக்கும். எனவே அதையும் இந்த போட்டோவும் வைத்து… தலைவருக்கு ஸ்டைல் கூடவே பிறந்தது என ரஜினி ரசிகர்கள் உற்சாகத்துடன் கூறி வருகின்றனர்.

மேலும் அங்குள்ள மெட்ரோ ரயிலில் ரஜினி பயணித்த புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைதளங்களில் டிரன்ட்டாகி உள்ளது.

More Articles
Follows