அம்மா வேடத்தில் நடிக்க முழு தகுதியானவர் நித்யா மேனன் – இயக்குநர் புகழாரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தி அயர்ன் லேடி (THE IRON LADY) படத்தின் இயக்குனராக உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன். இங்கே விவாதிக்கப்பட்ட சில உண்மைகளை நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம் என்றாலும், சமீபத்தில் என்னிடம் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் விரிவாக பதிலளிக்க அவற்றை மீண்டும் உங்கள் முன் வைக்கிறேன். தி அயர்ன் லேடி திரைப்படம் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் “அம்மா” செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் முழு வாழ்க்கைக் கதையையும் உள்ளடக்கியது. உண்மை கதாபாத்திரம் கோரும் வெவ்வேறு அம்சங்களை கவனமாக பட்டியலிட்ட பிறகு, நித்யா மேனன் அவர்களை அம்மாவின் பாத்திரத்திற்கான சரியான நடிகர் ஆக தேர்வு செய்தேன். அம்மா அவர்களை போல முக அமைப்பு முதல் நிகர் இல்லா ஆளுமை திறன் வரை நித்யா மேனன் இயற்கையாகவே அம்மா அவர்களின் பண்புகளையும் உள்ளடக்கியிருக்கிறார். நமது அம்மா புரட்சி தலைவி அவர்களை போலவே தமிழ் உள்ளடக்கி ஆறு மொழிகளை சரளமாக பேசக்கூடியவர், சிறு வயது முதலே “பரதநாட்டியம்” மற்றும் ஆடல் கலை அறிந்தவர் மற்றும் இசையிலும் நேர்த்தியான திறன் கொண்டவர்.
ஒரு வாழ்க்கை வரலாற்றின் மிகவும் சவாலான அம்சம் அதை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துவதாகும். வாழ்கை வரலாற்று படங்கள் பொதுவாக அதிக சிக்கல்கள், சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்கள் இருந்தாலும் அதன் நிஜ தன்மையில் இருந்து மாறாமல் மக்களுக்கு அறிமுகப்படுத்த முயன்றுகொண்டு இருக்கிறேன். இந்த களத்தில் ஒரு இயக்குனருக்கு முன் முன்வைக்கப்படும் சவால்கள் அதிகம். மக்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ள கூடிய, ரசிக்க கூடிய வகையில் ஒரு தரமான படைப்பை கொடுக்க கடமைபட்டு இருக்கிறேன். சர் ரிச்சர்ட் ஆட்டன்பரோ அவர்கள் “காந்தி” வாழ்க்கை வரலாற்றை வடிவமைக்க 18 ஆண்டுகள் செலவிட்டார். ஒரு சிறந்த வாழ்க்கை வரலாற்று படம் மிக சிறந்த படைப்பாக அமைய அதற்கான சரியான கால அவகாசம் தேவைப்படுகிறது இதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

இந்த களத்தில் 50 சதவீதவெற்றி சரியான கதாபாத்திரத்தை தேர்வு செய்வதில் இருக்கிறது. இதில் எந்த நிலையிலும் சமரசம் செய்ய இயலாது. அப்படி செய்தால் நீங்கள் கண்டிப்பாக ஏற்று கொள்ள மாட்டீர்கள் என்பதை அறிந்து இருக்கிறோம். மேலும் “உண்மை நிலையில் இருந்து மாறாமல், படைப்பாற்றல் சுதந்திரத்தோடு உங்கள் முன் வைக்க எண்ணுகிறோம்”. படத்தில் உள்ள மூன்று முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க இருக்கும் நடிகர்களின் தேதிகளுக்காகவும் அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஏற்ற நேரத்திற்காக காத்துகொண்டு இருக்கிறேன். இதனை அறியும் போது சுவாரஸ்யமாகவும், உற்சாகமாகவும் இருக்கும் என்று பட இயக்குநர் பிரியாதர்ஷினி தெரிவித்துள்ளார்

கௌதம் மேனனின் 3 படங்கள்; விக்ரம்-தனுஷ்-வருண் பட அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் ரெடியாகி 3 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

பல வெளியீட்டுத் தேதிகளை அறிவித்து தற்போது நவம்பர் 29ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

இப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

விக்ரம், ரித்துவர்மா நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் இறுதிக் கட்டப் பணிகளை ஆரம்பித்து விட்டதாகவும், அடுத்த 60 நாட்களில் படம் வெளியாகும் எனம் கௌதம்மேனன் தெரிவித்துள்ளார்.

இந்த 2 படங்களின் வெளியீட்டிற்காக வேல்ஸ் பிலிம் ஐசரி கணேஷ், கௌதம் மேனனுக்கு மிகப் பெரும் உதவிகளைச் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அதற்குப் பிரதிபலனாக ஐசரி கணேஷின் தங்கை மகன் வருண் நடிக்கும் ‘ஜோஷ்வா’ படத்தை இயக்கி வருகிறார் கௌதம் மேனன்.

இப்படம் 2020 காதலர் தினத்தன்று வெளியாக உள்ளது.

இந்த படத்திற்கும் விஜய் நடிக்காமல் நின்று போன ‘யோஹன்’ படத்திற்கும் சம்பந்தமல்ல என்று கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.

Vikram Dhanush Varun movies Gautham Menons 3 movies release updates

ரஜினிக்கு ஓகே; சாருஹாசனுக்கு ஏன் கொடுக்கல?; விஜய்ஸ்ரீ விளாசல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1975 ல் தமிழ் சினிமாவில் அறிமுகமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தொடர்ந்து சினிமா துறையில் நடித்து வருகிறார்.

நேற்று அவருக்கு “வாழ்நாள் சாதனையாளர்” விருது மத்திய அரசு அறிவித்ததில் மகிழ்ச்சி இந்த தருணத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் என் அன்பான வேண்டுகோள் உதிரிப்புக்கள் படத்தில் மூலம் அறிமுகமான திரு சாருஹாசன் அவர்கள் தனது முதுமை காரணம் காட்டாமல் 90 வயதிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்திய நடிகர்களில் வயதான நடிகர். 1987ஆம் ஆண்டில் கிரிஷ் கசரவல்லி இயக்கிய “தபெரனா கதெ” என்னும் கன்னடத் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி, சிறந்த நடிகருக்கான “தேசிய விருது” பெற்றார்.

மேலும் சிறந்த நடிகருக்கான கர்நாடக அரசு திரைப்பட விருது பெற்றுள்ளார்.

உலகளவில் பார்க்கும் போதும் 90 வயதில் தற்சமயம் இவர்தான் நடித்து வருகிறார்.

இந்திய நடிகரின் இந்த சாதனையை உலகம் அறிய செய்ய வேண்டும்.

சாருஹாசன் அவர்களுக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிட வேண்டும் என்பது என்னை போன்ற சினிமா ஆர்வலர்கள்களின் அன்பான வேண்டுகோள்.” என தாதா 87 பட இயக்குனர் விஜய்ஸ்ரீ தெரிவித்துள்ளார்.

DhaDha 87 director Vijay Sri request Central Govt to award Charuhassan

சங்கத்தமிழன் ரிலீஸ்; 41000 பனை விதைகளை விதைத்த விஜய்சேதுபதி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அதிமுக பேனர் விழுந்து சுபஸ்ரீ மரணம் அடைந்ததையொட்டி தமிழக சினிமா ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகர்களுக்கு கட்அவுட் பேனர் வைப்பதை தவிர்த்து வருகின்றனர்.

புதிய படம் ரிலீசானால் கூட பேனரை வைப்பதை தவிர்த்து அதற்கு மாறாக சமூக நல காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய்சேதுபதி நடித்துள்ள சங்கத் தமிழன் படம் வருகிற நவம்பர் 15ஆம் தேதி வெளியாகிறது.

இதனை முன்னிட்டும் விஜய்சேதுபதியின் 41 ஆவது பிறந்தநாளை ஒட்டியும் நீர் வளத்தை மேம்படுத்தும் வகையில் இன்று மணிமங்கலம் ஏறி கரசங்கால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 41,000 பனை விதைகள் விதைக்கும் விழாவை நடத்தியுள்ளனர்.

இன்று நடைபெற்ற இவ்விழாவில் மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி அவர்கள் விழாவை தொடங்கி வைத்தார்.

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம் காஞ்சிபுரம் மாவட்ட தலைமை சார்பாக சங்கத்தமிழன் திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு மற்றும் விஜய் சேதுபதி அவர்களின் 41 ஆவது பிறந்தநாளை ஒட்டி நீர் வளத்தை மேம்படுத்தும் வகையில் இன்று மணிமங்கலம் ஏறி கரசங்கால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 41,000 பனை விதைகள் விதைக்கும் விழா இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி அவர்கள் விழாவை தொடங்கி வைத்தார்.

Vijay Sethupathi fans doing Social activities

கேஜிஎஃப் ஹீரோவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கன்னட சினிமா படங்கள் பற்றி தெரியாதவர்களே கூட உச்சரித்த ஒரே பெயர் கேஜிஎப்.

கடந்தாண்டு வெளியான கேஜிஎப் பார்ட் 1 மூலம் நாடு முழுக்க பிரபலமானார் ஹீரோ யஷ்.

இப்பட 2ஆம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.

இவர் கடந்த 2016-ம் ஆண்டு ராதிகா என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு தற்போது ஆய்ரா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இவரின் விரலை பிடித்தவாரு இருக்கும் தன் குழந்தை படத்தை வெளியிட்டுள்ளார் யஷ்.

ஜெயலலிதா பயோபிக் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீபா மனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அவரை எதிர்த்துப் பேசவே பலரும் பயந்தனர். அப்படியொரு இரும்பு பெண்ணாக வாழ்ந்து வந்தார்.

எனவே அவர் மறைந்த பின் அவரது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்க பலரும் முயற்சித்து வருகின்றனர்.

ஏ.எல்.விஜய் இயக்கும் தலைவி படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். இதே படம் ஹிந்தி ஜெயா என்ற பெயரில் உருவாகிறது.

இவரைப் போல குயின் என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக கௌதம் மேனன் இயக்கி வருகிறார்.

இதில் ஜெயலலிதாவாக பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து எடுக்கப்படும் தலைவி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா.

அதில் தனது அனுமதியின்றி ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக்ககூடாது. மேலும், ஜெயலலிதாவின் கண்ணியம் பாதிக்கப்படாமல் படம் எடுக்கப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தீபா மனுவில் தெரிவித்துள்ளார்.

More Articles
Follows