தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இயக்குனர் பாண்டிராஜிடம் உதவி இயக்குனராக இருந்தவர் பிரசாந்த்.
தன் முதல் படத்தை இயக்கும் போதே தன் குருவின் பெயரையும் தன் பெயரோடு இணைத்துக் கொண்டு படத்தை இயக்க ஆரம்பித்தார்.
ஜீ.வி.பிரகாஷ் நடித்த ‘புரூஸ்லீ’ படத்தை இயக்கினார் பிரசாந்த் பாண்டிராஜ். இந்த படம் படுதோல்வியை தழுவியது என படக்குழுவினரே ஒத்துக் கொண்டனர்.
இதனையடுத்து நீண்ட இடைவெளிக்கு பின்னர் பிரசாந்த் இயக்கிய வெப் சீரிஸ் ‘விலங்கு’.
விமல், இனியா, பாலசரவணன், நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி, ரவி உட்பட பலர் நடித்திருந்தனர்.
இந்த கிரைம் திரில்லர் தொடரை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தயாரித்திருந்தார்.
இந்த தொடர் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. பட்டித்தொட்டி எங்கும் இது பற்றியே பேசப்பட்டது.
தற்போது பிரசாந்த் பாண்டிராஜ், தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகும் பான் இந்தியா படத்தை இயக்க போகிறாராம்.
இதனை அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸ் நிறுவனமும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதனும் இணைந்து தயாரிக்கின்றனர்.
தென்னிந்தியாவில் முன்னணி ஹீரோ ஒருவர் நடிக்க இருக்கிறார் எனவும் தற்போது அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
Director Prasanth Pandirajs next movie Pan India movie