தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அண்மையில் பிக்பாஸ் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்துக் கொண்டார்.
இந்த நிலையில் சென்னை வடபழனியில் ‘வெல்கம் பேக் சேரன்’ என்ற நிகழ்வில் பங்கேற்றார்.
அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது..
‘பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் பங்குபெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போக காரணம் விஜய்சேதுபதி தான்.
நீங்கள் ஒரு வெற்றி இயக்குநர் என்பது இளம் தலைமுறைகளுக்கு தெரியாது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் இளைஞர்களிடம் சென்று சேரலாம்.
எனவே நான் பிக்பாஸ் நிகழ்ச்சில் பங்கேற்றேன்.
கூடிய விரைவில் விஜய்சேதுபதியை இயக்குவேன்.
கமலை வைத்து தேவர் மகன் 2 படத்தை இயக்க ஆசை. கமல் சம்மதித்தால் எடுப்பேன். இதை கமலிடம் தெரிவித்து விட்டேன்” என்றார் சேரன்.