தனுஷுடன் இணையும் டைரக்டர் அமீர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெற்றிமாறன் இயக்கும் வடசென்னை படத்தை தயாரித்து நடித்து வருகிறார் தனுஷ்.

இப்படத்தில் தனுஷுடன் முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கவிருந்தார்.

ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் விலகியிருந்தார் என்பதை நாம் பார்த்தோம்.

இந்நிலையில் அந்த கேரக்டரில் நடிக்க தற்போது இயக்குநர் அமீர் ஒப்பந்தமாகியிருக்கிறாராம்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படம் மூன்று பாகமாக தயாராகுவது குறிப்பிடத்தக்கது.

அனுஷ்காவும் இல்லை, ஆராயிரத்தில் ஒருத்தியும் இல்லை.. பிரபாஸின் மனைவி இவர்தான்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாகுபலி படத்தின் மூலம் இந்திய சினிமா அறிந்த நாயகனாக உயர்ந்தார் பிரபாஸ்.

எனவே இவருக்கு பெண் ரசிகைகள் மத்தியிலும் மவுசு அதிகமானது.

இதனிடையில் பாகுபலி நாயகி அனுஷ்கா உடன் பிரபாஸ் காதல் என பேச்சு அடிப்பட்டது.

நடிகையை மட்டும் மணப்பாரா? நாங்களும் இருக்கோம் என கிட்டதட்ட 6000 பெண்கள் பிரபாஸ்க்கு விருப்பம் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வரும் 2018ல் திருமணம் செய்து கொள்ள இருக்கிறாராம் பிரபாஸ்.

ராசி சிமெண்ட் சேர்மன் பூபதி ராஜுவின் பேத்தியை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இது பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் திருமணம் எனவும் சொல்லப்படுகிறது.

விஜய்யை தொடர்ந்து பிரபாஸ்க்கு வில்லனாகும் நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் கத்தி. இதில் விஜய்க்கு வில்லனாக நீல் நிதின் முகேஷ் நடித்திருந்தார்.

தற்போது இவர் பாகுபலி நாயகன் பிரபாஸ் உடன் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.
பாகுபலி படத்தை தொடர்ந்து சாஹோ என்ற படத்தி நடித்து வருகிறார் பிரபாஸ்.

அண்மையில் இதன் டீசரும் வெளியாகி பரபரப்பை உருவாக்கியது.

இன்னும் இப்படத்தின் நாயகி முடிவாகநிலையில் வில்லனாக நீல் நிதின் முகேஷ் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ருதி விலகலா? நீக்கப்பட்டாரா? சங்கமித்ரா குழு விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று முன்தினம் சுந்தர்.சி இயக்கும் சரித்திர படமான ‘சங்கமித்ரா’ படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகிவிட்டதாக தகவல் வெளியானது.

கால்ஷீட் பிரச்சனை காரணமாக ஸ்ருதிஹாசன் விலகியதாக அவரது தரப்பில் இருந்து, ஓர் அறிக்கையும் வெளியானது.

இதனையடுத்து, அவர் விலகவில்லை. நாங்கள்தான் அவரை வெளியேற்றினோம்’ என்று தயாரிப்பு தரப்பு கூறியதாக தகவல் வெளியானது.

தற்போது இந்த அறிக்கை குறித்து இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘தேனாண்டாள் பிலிம்ஸ்’ தனது ட்விட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளது.

அவர்கள் கூறியிருப்பதாவது, “ஸ்ருதிஹாசன் விலகியது குறித்து இயக்குனர் சுந்தர்.சி மற்றும் இந்த படத்தின் நிறுவனமும் எந்த வித அறிக்கையும் அறிவிக்கவில்லை.

இதுகுறித்து ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் அனைத்தும் வதந்தி”என்று தெரிவித்துள்ளது.

பாபநாசம்-பைரவா படத்துடன் கனெக்ட்டாகும் காலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி படத்தின் சூட்டிங் மலேசியாவில் நடைபெற்ற போது, ரஜினியின் போட்டோக்கள் அதிகளவில் இணையங்களில் வெளியானது.

தற்போது அதே நிலைமைதான் காலா படத்திற்கும் ஏற்பட்டுள்ளது.

இப்படத்தில் ரஜினி, ரஞ்சித், சமுத்திரக்கனி உள்ளிட்டோரின் போட்டோக்கள் இப்போது இணையங்களில் வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் நெல்லை பாஷையில் ரஜினி பேசி நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இதற்கு முன் வெளியான பாபநாசம் படத்தில் கமல் நெல்லை தமிழ் பேசி நடித்திருந்தார்.

விஜய் நடித்த பைரவா படமும் நெல்லையை பின்னணியாக கொண்ட கதைக்களமாக அமைந்திருந்த்து குறிப்பிடத்தக்கது.

Kaala movie connect with Papanasam and Bairavaa movie

சிம்பு பட விநியோகம் மிகச்சிறப்பு; தயாரிப்பாளர் மகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்க, யுவன் இசையமைக்க உருவாகியுள்ள படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’.

இதில் சிம்புவுடன் தமன்னா, ஸ்ரேயா, சனாகான், நீது சந்திரா உள்ளிட்ட நான்கு நாயகிகள் நடிக்க, மைக்கேல் ராயப்பன் இப்படத்தை இரண்டு பாகமாக தயாரித்து வருகிறார்.

இதன் முதல் பாகத்தை மட்டும் வருகிற ஜூன் 23-ம் தேதி வெளியிட உள்ளனர்.

இந்த பாகத்தில் சிம்புவின் அறிமுக பாடல் படப்பிடிப்பு மட்டும் மீதமுள்ளதால், அதனை நாளை முதல் சென்னையில் படமாக்கவிருக்கிறார்களாம்

இந்நிலையில், இப்படத்தின் முழு வியாபாரமும் (கோயம்புத்தூர் உரிமையை தவிர), தற்போதே மிகச்சிறப்பாக நல்ல விலைக்கு முடிந்து விட்டதாம்.

இதனால் பெருமகிழ்ச்சியில் இருக்கிறாராம் தயாரிப்பாளர்.

Producer Michael Rayappan happy by his movie AAA trade deals

More Articles
Follows