கொரானா லாக்டவுனில் பிரபலங்களுடன் உரையாடும் இயக்குனர் கேபிள் சங்கர்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரானா பரவலை தடுக்க, அனைவரையும் வீட்டிலேயே இருக்க வலியுறுத்திய அரசின் உத்தரவை மதித்து பிரபலங்கள் முதல் சாமானியர் வரை வீட்டில் இருக்க, எழுத்தாளரும் இயக்குனருமான கேபிள் சங்கர் தினமும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை இன்ஸ்டாகிராமில் ( Insta Id: cablesankar ) உள்ள இன்ஸ்டா லைவ் மூலமாய் பிரபலங்களுடன் உரையாடி வருகிறார்.

நடிகை வினோதினி வைத்தியநாதன், லவ் குரு ராஜவேல், தயாரிப்பாளர் தனஞ்செயன், ஓ மை கடவுளே இயக்குனர் அஸ்வத், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, பாரம் இயக்குனர் பிரியா கிருஷ்ணசாமி, எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், நடிகர் மனோபாலா, இயக்குனர் சீனு ராமசாமி என பல பேரிடம் உரையாடி வருகிறார்.

இந்த இன்ஸ்டா லைவிற்கு இணைய தள பார்வையாளர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

லைவ் நிகழ்ச்சியை அவரது யூ ட்யூப் சேனலிலும் வெளியிட்டு வருவதால் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் பார்த்து வருகிறார்கள்.

லாக்டவுன் நேரத்தில் பிரபலங்களுடனான இந்த உரையாடல் மிகவும் உபயோகமானதாகவும், பொழுது போக்கவும் பயன் படுகிறது என்கிறார்கள் பார்வையாளர்கள்.

அனைவரும் என் நண்பர்கள். இந்த லாக்டவுன் நேரத்தில் அவர்களுடன் உரையாடுவது மனதிற்கு இனிமையாய் இருக்கிறது என்கிறார் இயக்குனர் கேபிள் சங்கர்…
Attachments area

சூப்பர் ஸ்டார் மகள் கால்ஷீட் கேட்டும் நடிக்க மறுத்த மணிரத்னம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம் உள்ளிட்ட எந்த சமூக வலைத்தளத்திலும் டைரக்டர் மணிரத்னம் அக்கௌண்ட் வைத்துக் கொள்ளவில்லை.

ஆனால் தன் மனைவி நடிகை சுகாசினி அக்கௌண்டில் அண்மையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

இந்த உரையாடலில் ரசிகர் ஒருவர், ‘நீங்கள் ஏன் படத்தில் நடிக்கல. யாராவது நடிக்க அழைத்தார்களா? என கேட்டுள்ளார்.

அதற்கு மணிரத்னம், ‘ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தான் இயக்கும் படத்திதில் நடிக்க அழைத்தார், ஆனால் நான் மறுத்துவிட்டேன்’

ஒருவேளை நான் சுமாராக நடித்தால் அதன்பின் என் இயக்கத்தில் நடிக்கும் நடிகர்களிடம் வேலை வாங்கும்போது, ‘நீ நடிச்சதை தான் நான் பார்த்தேனே’ என்று சொல்லிவிடுவார்கள்’ என்ற பயம் என நகைக்சுவையாக சொல்லியிருக்கிறார் மணிரத்னம்.

ரஜினி விஜய் விக்ரம் பட நடிகை கணவருக்கு கொரோனா தொற்று

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியுடன் ’சிவாஜி’ விஜய்யுடன் ’அழகிய தமிழ்மகன்’, விக்ரமுடன்’கந்தசாமி’ உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரேயா.

இவர் சில ஆண்டுகளுக்கு முன் ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரூ என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இருவரும் ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்சிலோனா நகரத்தில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஸ்ரேயா கணவர் ஆண்ட்ருவுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்துள்ளதாம்.

எனவே கணவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்துள்ளனர்.

வீட்டிலிருந்தே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்றுவர மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

இதனை அடுத்து இருவரும் வீட்டிலிருந்தே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்களாம்.

தற்போது ஸ்ரேயாவின் கணவரின் உடல் தேறி வருவதாக சொல்லப்படுகிறது.

கனடாவில் சிக்கிய விஜய் மகன் சஞ்சய் குறித்து விசாரித்தாரா அஜித்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளைய தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் இருக்கிறார்.

அவர் பிலிம் மேக்கிங் படிக்க கனடா நாட்டுக்கு சென்று அங்கேயே தங்கி படித்து வருகிறார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அவரால் இந்தியா வரமுடியவில்லை.

கனடாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் தன் மகனை நினைத்து வருத்தத்தில் இருக்கிறாராம் விஜய்.

மகனிடம் தினமும் போனில் பேசி நலம் விசாரித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் அஜித், உடனே விஜய்யிடம் செல்போனில் தொடர்பு கொண்டு அவரின் மகன் சஞ்சய் குறித்து விசாரித்து வருவதாக தகவல்கள் வந்துள்ளன.

நடிகர் விஜய்யும், அஜித்தும் இதுபோல் அடிக்கடி செல்போனில் பேசுவது வழக்கமான ஒன்றுதான் எனவும் கூறப்படுகிறது.

பழைய செய்திகளை போடும் வெப் சைட்ஸ்.; பழைய சீரியல்களுக்கு போட்டி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மே 3 வரை அமலில் இருக்கும்.

அதன் பின்னர் கொரோனா பரவலை பொறுத்துதான் இந்த உத்தரவு இருக்குமா? இல்லையா? என்பது தெரிய வரும்.
ஊரடங்கினால் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

மற்ற தொழில்களை போல சினிமா மற்றும் டிவி சீரியல்கள் சூட்டிங்கும் நிறுத்தப்பட்டுள்ளன.

மக்களை மகிழ்விக்க டிவி சேனல்கள் பழைய டிவி சீரியல்களை மீண்டும் ஒளிப்பரப்பி வருகின்றன.

இவர்களை போல ஒரு சில சினிமா இணையத்தளங்கள் பழைய செய்திகளை போடுகின்றனர்.

அதாவது கடந்த 30-40 ஆண்டுகளில் சினிமாவில் நடந்த ஏதாவது ஒரு செய்தியை புது செய்தி போல பதிவிட்டு வருகின்றனர்.

நாட்டில் கொரோனா குறித்து எத்தனையோ செய்திகள் இருக்கிறது. அவையில்லாமல் சினிமா பிரபலங்களும் ஏதாவது ஒன்றை தங்கள் வீட்டிலேயே இருந்து செய்து வருகின்றனர்.

அவற்றை செய்தியாக போடலாமே… அதைவிடுத்து பழைய செய்தியை ஏதோ இன்று நடந்தது போல போடவேண்டிய அவசியமென்ன? என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

Few Cinema Websites posting old news in Corona lock down days

சிங்கப்பூரில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் ரஜினி-சச்சின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இதற்கு மருந்து இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்பதால் பல உயிர்கள் தினம் தினம் செத்து மடிகிறது.

சீனா, இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, கனடா, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளிலும் மோசமான நிலையே நீடித்து வருகிறது.

இதனால் திரையுலக பிரபலங்கள் பலரும் அந்தந்த நாடுகளில் தங்கள் இயன்றவரை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

சிங்கப்பூரில் நேற்று ஒரே நாளில் 700 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் சிங்கப்பூர் அரசு பெரும் அச்சத்தில் உள்ளது.

இந்த நிலையில் இந்திய பிரபலங்களின் கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களை அங்கு ஒளிப்பரப்பி வருகின்றனர்.

வெளிநாடுகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, நடிகர் ரஜினிகாந்த், மற்றும் சச்சின் டென்டுல்கர் ஆகியோரது வீடியோக்களை வைத்து, அந்நாட்டு அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறதாம்.

இந்தியாவில் மட்டுமல்ல நடிகர் ரஜினிக்கு உலகின் பல நாடுகளிலும் லட்சக்கணக்கில் தீவிர ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajini and Sachins Covid 19 awareness in Singapore

More Articles
Follows