விக்ரம் மகன் துருவ் உடன் ஸ்ரீதேவி மகள் ஜான்வி இணைந்தது எப்படி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விக்ரமின் மகன் துருவ் வர்மா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார்.

பாலா இயக்கவுள்ள இப்படம் அர்ஜீன் ரெட்டி என்ற தெலுங்கி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இதே ரீமேக் ரூட்டில் தனது மகள் ஜான்வியை அறிமுகம் செய்யவுள்ளார் நடிகை ஸ்ரீதேவி.

மராட்டிய மொழியில் வெற்றி பெற்ற ‘சாய் ராட்’ என்ற படத்தின் இந்தி ரீமேக்கில்தான் ஜான்வி அறிமுகமாகவுள்ளார்.

தனது மகள் ஜான்வி அறிமுகம் பற்றி ஸ்ரீதேவி கூறியதாவது:-

நான் சினிமா துறையில் நீண்ட காலமாக இருந்து வருகிறேன். எனது மகளும் இந்த துறையை தேர்ந்து எடுத்து இருக்கிறாள்.

மனதளவில் நான் அவளை நன்றாக தயார்படுத்தியுள்ளேன்.

எனவே கடினமாக உழைப்பாள். எந்த சவாலையும் சந்திப்பாள்.” இவ்வாறு ஸ்ரீதேவி கூறியுள்ளார்.

திருப்பதிக்கு போனா திருப்பம்; பிரபுதேவா-நிக்கி கல்ராணி திருமணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2002-ஆம் வெளியாகி வெற்றிப் பெற்ற திரைப்படமான ‘சார்லி சாப்ளின்’ படத்தின் 2ஆம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

சக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சார்பாக டி.சிவா தயாரித்து வருகிறார்.

இதில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி, அதா சர்மா ஆகியோர் நடிக்கின்றனர்.

அம்ரிஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு செளந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார்.

பிரபல நடிகரும், நகைக்சுவை எழுத்தாளருமான கிரேசி மோகன் இப்படத்திற்கான திரைக்கதை எழுதியிருக்கிறார்.

இப்படம் குறித்து இயக்குனர் ஷக்தி சிதம்பரம் கூறியுள்ளதாவது…

பிரபு தேவா, நிக்கி கல்ராணி இருவருக்கும் திருப்பதியில் திருமணம் நடக்க இருக்கிறது. அதற்காக பிரபுதேவா குடும்பமும், நிக்கி கல்ராணி குடும்பமும் திருப்பதிக்கு போகும் போதும், அங்கு போய் சேர்ந்த பிறகு நடக்கும் சம்பவங்களின் கலகலப்பான தொகுப்பே `சார்லி சாப்ளின்-2′.

திருப்பதிக்கு போனா திருப்பம் வரும் என்பார்கள். அது என்ன திருப்பம் என்பது படத்தின் சஸ்பென்ஸ் என்கிறார் இயக்குனர்.

உலக காமெடி மேதையான சார்லி சாப்ளினின் 125-வது பிறந்தநாள் விழா இந்த வருடம் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்த படம் உருவாகுவது அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இருக்கும் என்று தயாரிப்பாளா் டி.சிவா கூறினார்.

இப்பட படப்பிடிப்பு தற்போது கோவாவில் நடைபெற்று வருகிறது.

மீண்டும் ஆதிக்ரவி இயக்கத்தில் ஜிவி.பிரகாஷ்; போலீஸாக நடிக்கிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குநராக அறிமுகமான படம் ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’.

இதில் இசையமைத்து நாயகனாக நடித்தார் ஜி.வி.பிரகாஷ்.

படம் முழுவதும் இரட்டை அர்த்த வசனங்கள் இருந்ததால் இப்படத்தை பிட்டு படம் என்றே ரசிகர்கள் கூறிவந்தனர்.

இதனையடுத்து சிம்பு, ஸ்ரேயா, தமன்னா நடித்த ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தை இயக்கினார் ஆதிக் ரவிச்சந்திரன்.

பிரபல நட்சத்திரங்கள் இருந்தும் படம் படு தோல்வியை தழுவியது.

இந்நிலையில், மீண்டும தன் முதல் பட நாயகனான ஜி.வி.பிரகாஷ் உடன் இணைகிறார் ஆதிக் ரவி.

இதில் சோனியா அகர்வால் முக்கிய வேடத்தில் நடிக்க, இப்படம் 3டியில் உருவாகவுள்ளதாம்.

ஃபேண்டஸி லவ் ஸ்டோரியாக இந்தப் படத்தை எடுக்கிறார் ஆதிக்.

விஷன் ஐ மீடியா சார்பில் அரண்மனை படத்தை தயாரித்த தினேஷ் கார்த்திக் இப்படத்தை தயாரிக்கிறார்.

டிராபிக் ராமசாமி படத்தில் விஜய் தந்தையுடன் இணையும் விஜய் ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிராபிக் ராமசாமி ஒரு சமூக ஆர்வலர். நாட்டில் நடக்கும் தவறுகளை தனிமனிதனாக எதிர்த்து நின்று போராடும் துணிச்சல் மிக்க மனிதர்.

அவர் வாழ்க்கையைக் கருவாக வைத்து சில மாற்றங்களோடு உருவாகிக் கொண்டிருக்கும் படம்தான் ”டிராபிக் ராமசாமி ”
இதில் கதை நாயகன் டிராபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரனும் அவர் மனைவியாக ரோகிணியும் நடிக்கிறார்கள்.

கதாநாயகனாக ஆர்.கே. சுரேஷும் கதாநாயகியாக உபாஷனாவும் நடிக்க, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நகைச்சுவை கலந்த நீதிபதியாக அம்பிகாவும் மற்றும் லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, அம்மு ரவிச்சந்திரன், சார்லஸ் வினோத், சின்னத் திரை புகழ் சேத்தன், பேபி ஷெரின், மோகன்ராம், மதன்பாப், ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி கெளரவ வேடத்தில் நடிக்கிறார். அநியாயங்களை தட்டிக் கேட்கும் சமூக அக்கறை உள்ள இளைஞனாக ஒரு திரைப்பட நடிகராகவே அவர் நடிக்கிறார்.

இப்படத்தின் இயக்குநராக விஜய் விக்ரம் அறிமுகமாகிறார். இவர் பூனாவில் திரைப்படத் தொழில்நுட்பம் படித்துவிட்டு ஜந்தாண்டுகள் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் உதவி இயக்குநராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒளிப்பதிவை குகன் s. பழனி கவனிக்கிறார்.. இசை ஹரஹரமகாதேவி புகழ் பாலமுரளி பாலு. எடிட்டிங் பிரபாகர், கலை ஏ.வனராஜ்.சண்டைக் காட்சி – அன்பறிவு .

இப்படத்தை மிகுந்த பொருட்செலவில் ஈரோடு மோகன் என்பவர் முதல் முறையாக தயாரிக்கிறார்.

Vijay Antony to make a cameo in SACs film Traffic Ramasamy

வாழ்த்திய கமலுக்கும் விருது அறிவித்த ஆந்திர அரசுக்கும் ரஜினி நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தேசிய விருதைப் போன்று ஒவ்வொரு மாநில அரசுகளும் ஒவ்வொரு ஆண்டிற்கான திரைத்துறை விருதுகளை அறிவித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக விருதுகள் வழங்கப்படாத நிலையில், மூன்று ஆண்டுகளுக்கான விருதுகளை ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

என்டிஆர், பிஎன் ரெட்டி, நாகிரெட்டி – சக்ரபாணி, ரகுபதி வெங்கய்யா ஆகியோரின் பெயர்களில் வழங்கப்பட உள்ள விருதுகள் பட்டியலை ஆந்திர அரசு வெளியிட்டுள்ளது.

அதில் 2014ஆம் ஆண்டிற்கான என்.டி.ஆர் விருதை கமல்ஹாசனுக்கும், 2016ஆம் ஆண்டிற்கான விருதை ரஜினிகாந்துக்கும் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதற்கு கமல் அவர்கள் தன் நண்பர் ரஜினிக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து கமலுக்கு நன்றியை ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ரஜினி.

மேலும் மற்றொரு பதிவில் நந்தி விருதுக்கு தம்மை தோ்வு செய்தமைக்காக நன்றி என பதிவிட்டுள்ளார்.

Rajini said thanks to Kamalhassan and Andhra Govt for Nandi Awards

Rajinikanth‏Verified account @superstarrajini
I convey my heartfelt thanks and happiness for the prestigious #NandiAwards granted to me

ஆந்திர அரசுக்கு நன்றி; ரஜினிக்கு வாழ்த்து… கமல் ட்வீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2014, 2015, 2016-ம் ஆண்டுகளுக்கான ஆந்திர அரசின் என்.டி.ஆர். தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் 2014-ம் ஆண்டுக்கான என்.டி.ஆர். தேசிய விருது கமல்ஹாசனுக்கும், 2016-ம் ஆண்டுக்கான என்.டி.ஆர். தேசிய விருது ரஜினிகாந்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.

எனவே இது தொடர்பாக ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து கமல் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில்… ”2016-ம் ஆண்டுக்கான ஆந்திர அரசின் என்.டி.ஆர் தேசிய விருது பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வாழ்த்துகள்.

மீண்டும் என்னை கவுரப்படுத்திய ஆந்திர அரசுக்கு நன்றி. என் சினிமா வாழ்க்கையில் நீங்கள் அளிக்கும் தொடர் ஆதரவுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

Congratulations, Superstar.Rajinikanth for the NTR National award in 2016. Thank you Andhra for honouring me also, yet again. I am indebted to your continued support, which started early in my career. Kruthagnyathalu
— Kamal Haasan (@ikamalhaasan) November 14, 2017

Kamalhassan wishes Rajinikanth for Nandi awards

More Articles
Follows