அனிருத்தை ஒதுக்கும் தனுஷ் குடும்பம்..? சிவகார்த்திகேயன் ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய படத்தில் தனுஷ்-சிவகார்த்திகேயன் நடிக்க, இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத்.

இதனையடுத்து தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனின் பல படங்களில் அனிருத்தான் இசையமைத்தார்.

தன் படங்களில் இசையமைப்பாளரை தனுஷ் அறிவிக்காவிட்டாலும் அனிருத் இசையமைப்பார் என்றே பரவலாக பேசப்பட்டது.

ஆனால் சமீபகாலமாக தனுஷாலும் அவரது உறவினர்களாலும் அனிருத் ஒதுக்கப்படுவது தெளிவாக தெரிகிறது.

தனுஷின் ‘கொடி’ படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார்.

தனுஷ் இயக்கும் ‘பவர் பாண்டி’ படத்தில் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

இதனையடுத்து, சௌந்தர்யா ரஜினி இயக்கும் ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்திலும், ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் ‘மாரியப்பன்’ படத்திலும் ஷான் ரோல்டனே இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்வதால், தனுஷ் – அனிருத் இடையிலான நட்பு இனி தொடருமா? என்பது கேள்விக்குறியே.

ரெமோ படத்தை தொடர்ந்து, மோகன் ராஜா இயக்கும் சிவகார்த்திகேயன் படத்திற்கும் அனிருத் இசையமைத்து வருவது இங்கே கவனிக்கத்தக்கது.

கமல்-விஜய்-தனுஷ்-சிம்பு வரிசையில் அமலா பால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் கமல்-விஜய்-தனுஷ்-சிம்பு உள்ளிட்ட நடிகர்களே பாடல் பாடி நடித்து வருகின்றனர்.

அதுபோல் நடிகைகளில் ஆண்ட்ரியா மற்றும் ரம்யா நம்பீசனும் படங்களில் பாடி வருகின்றனர்.

இவர்களின் வரிசையில் தற்போது அமலாபால் இணைந்துள்ளார்.

ஜெயராம், பிரகாஷ் ராஜ் நடித்து வரும் ‘அச்சான்யன்ஸ்’ என்னும் மலையாள படத்தில் அமலாபாலும் நடித்து வருகிறார்.

இப்படத்தில் ஒரு பாடலை இவர் பாடவிருக்கிறாராம்.

அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வர, தீவிர பயிற்சியில் இருக்கிறார் அமலா.

Amala paul going to sing a song in movie

பிடிக்காமல் அறிக்கை வெளியிட்ட சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காக்க காக்க மற்றும் வாரணம் ஆயிரம் ஆகிய இரு படங்களும் சூர்யாவிற்கும் கௌதம் மேனனுக்கும் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

இதனைத் தொடந்து ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் இணையவிருந்தனர்.

ஆனால் பல்வேறு கருத்து வேறுபாடால்களால் அப்படம் கைவிடப்பட்டது.

பின்னர் சூர்யா வெளியிட்ட அறிக்கை பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் தனியார் டிவியின் புத்தாண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூர்யா பேசும்போது…

எங்கள் கூட்டணியை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்காக மீண்டும் ஒரு படம் செய்ய வேண்டும் என தோன்றும்.

பிரச்சினையான சமயத்தில் எங்கள் இருவருடைய கருத்துக்களும் வலுவாக இருந்தது.

எனவே அப்போது கௌதம் மேனனுடன் இணைய மறுத்துவிட்டேன்.

எனக்கு பிடிக்காமல் அறிக்கை ஒன்றை அப்போது வெளியிட்டு விட்டேன்.

பின்னர் அப்படி செய்திருக்கக் கூடாது என்றே தோன்றியது.

ஆனால் சமீபத்தில் இருவரும் சந்தித்து பேசினோம். விரைவில் இணைந்து பணியாற்றுவோம்.” என்று பதிலளித்துள்ளார்.

அஜித் படம் என்றாலும் தன்னை மாற்றிக் கொள்ளாத பவர் ஸ்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வீரம் படம் தமிழில் வெற்றிப் பெற்றது.

இப்படம் தற்போது தெலுங்கில் கட்டம்மராயுடு என்ற பெயரில் உருவாகி வருகிறது.

இப்படத்தை கிஷோர் குமார் இயக்க, அஜித் வேடத்தில் பவர் ஸ்டார் பவன்கல்யானும், தமன்னா வேடத்தில் ஸ்ருதிஹாசனும் நடித்து வருகின்றனர்.

தமிழ் பதிப்பில் அஜித் நரைத்த முடியுடன் வேட்டி சட்டை அணிந்திருப்பார்.

ஆனால் தெலுங்கில் பவன் கல்யாண் இளமையாகவே வருகிறார்.

மேலும் பேண்ட ஷர்ட் அணிந்தபடியே நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லாரன்ஸின் ‘சிவலிங்கா’ சீக்ரெட்ஸை உடைத்த பி. வாசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பி.வாசு இயக்கி கன்னடத்தில் பெரும் ஹிட்டடித்த சிவலிங்கா படத்தை தமிழிலும் அவரே இயக்கி வருகிறார்.

ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க, நாயகியாக ரித்திகா சிங் நடித்திருக்கிறார்.

மிகமுக்கிய வேடத்தில் வடிவேலு நடித்துள்ளார்.

தமன் இசையமைத்துள்ள இப்படத்தில் ‘ரங்கு ரக்க…’ என்ற பாடலை அனிருத் பாடியுள்ளார்.

சிவலிங்கா படம் குறித்து இயக்குநர் பி வாசு கூறியதாவது…

“கன்னட சினிமாவில் சென்சேஷனல் ஹிட் சிவலிங்கா. இப்படத்தை தற்போது தமிழில் எடுத்துள்ளேன்.

கடந்த ஆண்டில் 85 அரங்குகளில் இப்படம் 100 நாட்களை கடந்து ஓடியது.

வழக்கம்போல என் படத்தில் கதைதான் ஹீரோ.

தான் வளர்க்கும் புறாவுடன் ஒருவன் ரெயிலில் சென்றுகொண்டிருக்கிறான்.

அவன் கண் அசந்த நேரம், கண் தெரியாத ஒருவர் ரயிலின் வாசல் வரை சென்று விடுகிறார்.

அவரை காப்பாற்ற சொல்லி, அந்த புறா அவனை எழுப்புகிறது.

ஆனால், கண் தெரியாதவர் அவனை கொலை செய்து விடுகிறார். அவனது ரத்தம் மீது விழுகிறது.

புறாவை தவிர கொலைக்கு யாரும் சாட்சி இல்லை.

ஆனால் அந்தப் புறா போலீசுக்கு எப்படி உதவுகிறது? என்பதுதான் கதை.

இதில் லாரன்ஸ் சிபிசிஐடி அதிகாரியாக வருகிறார். இப்படத்தின் க்ளைமாக்ஸ் வித்தியாசமாக இருக்கும்.

லாரன்சின் தாயாக ஊர்வசியும், ரித்திகாவின் தாயாக பானுப்பிரியாவும் நடித்துள்ளனர்” என்றார்.

இப்படம் ஜனவரி 26ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Director P Vasu reveals Sivalinga movie secrets

தங்கல்-துருவங்கள் 16-மோ-அச்சமின்றி படங்களின் வசூல் எவ்வளவு?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த வாரம் டிசம்பர் 30ஆம் தேதி துருவங்கள் 16, மோ, அச்சமின்றி ஆகிய நேரடி தமிழ் படங்கள் வெளியானது.

இவற்றைத் தொடர்ந்து, அமீர்கான் நடித்த தங்கல் Dangal என்ற இந்திப் படத்தின் தமிழ் பதிப்பும் வெளியானது.

இப்படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் இதோ…

துருவங்கள் பதினாறு படம் ரூ. 13.5 லட்சத்தை வசூலித்துள்ளது.

அச்சமின்றி படம் ரூ. 4.7 லட்சத்தை வசூலித்துள்ளது.

மோ படம் ரூ. 3.9 லட்சத்தை வசூலித்துள்ளது.

தங்கல் (யுத்தம்) படம் ரூ. 2 கோடியை வசூலித்துள்ளது.

More Articles
Follows