விஷாலின் சண்டக்கோழியில் இணைந்தார் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2005ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் சண்டக்கோழி. லிங்குசாமி இயக்கிய இப்படத்தில் விஷால், மீரா ஜாஸ்மின் ஜோடியாக நடித்திருந்தனர்.

தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகிவருகிறது.

இப்படத்தையும் லிங்குசாமி இயக்க, விஷால் தயாரித்து நடித்து வருகிறார்.

இதில் நாயகியாக கீர்த்திசுரேஷ் நடிக்க, முக்கிய வேடத்தில் வரலட்சுமி நடித்து வருகிறார்.

மேலும் சூரி, ராஜ்கிரண் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, இப்படத்திற்காக தனுஷ் ஒரு பாடலை பாடி கொடுத்துள்ளார்.

ராமனை வம்புக்கு இழுக்கும் விஜய்சேதுபதி; அடுத்த மெர்சல் பிரச்சினை உருவாகுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆறுமுககுமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, கௌதம்கார்த்திக் இணைந்து நடித்து வரும் படம் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்.

இவர்களுடன் காயத்ரி, நிகாரிகா, ரமேஷ்திலக், விஜி சந்திசேகர் உள்ளிட்டோரும் நடிக்க, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை சினிமாவாலா சார்பாக சதீஷ் தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் டீசர் நேற்று மாலை இணையங்களில் வெளியானது.

அதில் விஜய்சேதுபதி பேசிய ராமாயண கதை சர்ச்சைகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வசனத்தில்… புருஷோத்தமா.. ராவணன் சீதையை கொண்டு போய் பத்திரமா வச்சிருந்தானா? ஆனா அவன நாம அரக்கன் சொல்றோமா?

அதே நேரம் ராமன் சீதையை சந்தேகப்பட்டு தீயில போட்டு கொன்னானா? அவனை நாம கடவுள்னு சொல்றோமா? இப்போ ராமனா கெட்டவனா? நல்லவனா? என்பதுபோல் வசனம் வருகிறது.

எனவே ராமனை கடவுளாக மதிக்கும் இந்துக்கள் மத்தியில் இது பிரச்சினையை உருவாக்கும் என சொல்லப்படுகிறது.

அண்மையில் வெளியான மெர்சல் படத்தில் விஜய் பேசிய வசனங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுபோல் இதுவும் உருவாகும் எனவும் நம்பலாம்.

பரபரப்பாக பேசப்பட்ட லட்சுமி குறும்படத்தையே தலைப்பாக்கிய விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம், தனுஷ் படங்களை தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் படத்திலும் நடிக்கவிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இப்படங்களை தொடர்ந்து விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துவரும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறாராம்.

இப்படத்துக்கு, சர்ச்சையில் சிக்கி, பரபரப்பாக பேசப்பட்ட ‘லட்சுமி’ என்ற குறும்படத்தின் தலைப்பைச் சூட்டும் முடிவுடன் அதைப் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை படத்தில் மாதவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இறுதிச்சுற்று மற்றும் விக்ரம் வேதா படங்களை தொடர்ந்து மாதவனுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

தற்போது ஒரு புதிய படத்தில் 27 வயதில் தொடங்கி 75 வயதுவரையான விண்வெளி வீரராக நடிக்கவிருக்கிறாராம் இந்த மேடி.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

‘சண்டா மாமா டோர் கே’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தைத் தமிழ், தெலுங்கில் மொழிமாற்றம் செய்யவுள்ளனர்.

‘தோனி’ பட நாயகன் சுஷாந்த் சக விண்வெளி வீரராக இதில் நடிக்கிறாராம்.

எனவே தற்போது மாதவன், சுஷாந்த் இருவருமே இந்தப் படத்துக்காக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவில் பயிற்சி எடுக்க இருக்கிறார்கள்.

விஜய்சேதுபதி நெகிழ… மஞ்சு வாரியார் வெட்கப்பட.. விருது விழா சுவாரஸ்யம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில்  ஆர்ப்பாட்டமில்லாமல் முன்னேறி வருபவர் நடிகர் விஜய்சேதுபதி.

தரமான படங்களையும் அதே நேரத்தில் சிறந்த நடிப்பையும் குறுகிய காலத்தில் இவர் கொடுத்து வருகிறார் என்று சொன்னால் அது மிகையல்ல.

சமீபத்தில் இவருக்கு கேரளாவில் சிறப்பு விருது ஒன்று வழங்கப்பட்டது.

அந்த விருதை பிரபல நடிகையான மஞ்சு வாரியார் வழங்கினார்.

அப்போது… ஒரு கதை சொல்லட்டா என விக்ரம்வேதா படத்தில் விஜய்சேதுபதி பேசும் டயலாக்கை கூறி, நான் உங்க ரசிகை என கூறியுள்ளார்.

இதனால் விஜய்சேதுபதி நெகிழ்ந்தே போனாராம்.

அதன்பின்னர் விஜய்சேதுபதி பேசும்போது… நானும் உங்க ரசிகன்தான். உங்கள இப்பத்தான் பர்ஸ்ட் டைம் பாக்குறேன். நேரில் பார்க்க நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என கூறி மஞ்சு வாரியாரையே வெட்கப்பட வைத்துவிட்டாராம் இந்த மக்கள் செல்வன்.

Vijay Sethupathi and Manju Warrier speech at Asiavision Award

2 ஸ்டார்கள் படத்தை அடுத்து சூப்பர்ஸ்டாருடன் இணையும் ராஜமௌலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாகுபலி 2 என்ற மிகப்பிரம்மாண்ட படத்தை அடுத்து புதிய பட வேலைகளை ஆரம்பித்து விட்டார் ராஜமௌலி.

இப்படத்திற்கும் வழக்கம்போல இவரது தந்தை விஜயேந்திர பிரசாத் கதை எழுதுகிறாராம்.

இப்படத்தில் தெலுங்கு சினிமாவின் மாஸ் ஹீரோக்களான ராம் சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனர்.

இப்படத்தை முடித்துவிட்டு தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம் ராஜமௌலி.

Rajamoulis new movies updates after Baahubali2 movie

More Articles
Follows