அஜித் பெயரை தன் படத்திற்கு தலைப்பாக்கிய தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நதிர்ஷா இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் ‘கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்’.

விஷ்ணு உன்னிகிருஷ்ணன் எழுதி, நடித்துள்ள இந்தப் படம், கடந்த வருடம் நவம்பர் மாதம் ரிலீஸானது.
காமெடிப் படமாக உருவாக்கப்பட்ட இப்படம் 40 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.

இந்தப் படத்தைத்தான் தமிழில் ‘அஜித் ஃப்ரம் அருப்புக்கோட்டை’ என்ற பெயரில் தன்னுடைய வுண்டர்பார் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிக்கிறார் தனுஷ்.

விஜய் டிவி தீனா இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்க, மலையாளத்தில் இயக்கிய நதிர்ஷாவே தமிழிலும் இயக்குகிறார்.

இதற்கு முன்பே தனுஷ் இயக்கிய ‘பவர் பாண்டி’ படத்தில் தீனா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush producing movie in the name of Ajith from Aruppukottai

செஞ்சுரி அடித்த இமான் பர்ஸ்ட் டைம் அஜித்துடன் இணைகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விவேகம்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறார்.

‘விசுவாசம்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தையும் சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது.

‘பில்லா’, ‘ஏகன்’, ‘ஆரம்பம்’ ஆகிய படங்களுக்குப் பிறகு ‘விசுவாசம்’ படத்தின் மூலம் 4வது முறையாக அஜித்துக்கு ஜோடியாகிறார் நயன்தாரா.

இப்படத்திற்கு யுவன் இசையமைக்கலாம் என்று கூறப்பட்டது.

ஆனால் அவர் விலக மற்ற பிரபல இசையமைப்பாளர்களுடன் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் இமான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

100 படங்களுக்கு மேல் இசையமைத்திருந்தாலும் அஜித் படத்திற்கு இமான் இசையமைப்பது இதுவே முதல் முறை.

இதன் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்கி 2018 தீபாவளிக்கு ‘விசுவாசம்’ வெளியாகும் என கூறப்படுகிறது.

திமிரு புடிச்ச(வன்) விஜய்ஆண்டனிக்காக பைக் கற்கும் நிவேதா பெத்துராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்ணாதுரை, காளி படங்களை தொடர்ந்து திமிரு புடிச்சவன் என்ற படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கிறார் என்பதை பார்த்தோம்.

இப்படத்தையும் வழக்கம் போல அவரது சொந்த நிறுவனமான விஜய்ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பாக அவரது மனைவி பாத்திமா தயாரிக்கிறார்.

இதில் விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார். இந்நிலையில் இதில் நாயகியாக இணைந்துள்ள நிவேதா பெத்துராஜீம் போலீஸாக நடிக்கவிருக்கிறாராம்.

இதற்காக அவர் தற்போது புல்லட் ஓட்டி பழகி வருகிறாராம்.

கணேஷா இயக்கவுள்ள இதன் சூட்டிங் இன்று பிப்ரவரி 7 முதல் ஆரம்பமாகியுள்ளது.

எஸ்.எஸ்.ராஜமெளலியிடம் உதவியாளராகப் பணிபுரிந்த கணேஷா, இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.

மேலும், இப்படத்திற்காக ஆக்‌ஷன் காட்சிகளுக்காக பிரத்யேகமாக சிலம்பம் கற்று வருகிறாராம் விஜய் ஆண்டனி.

மீண்டும் இணையும் சிம்பு-ஓவியா; அனிமேஷன் அனிதா இயக்குகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தாண்டு தொடக்கத்தில் ‘மரண மட்டை’ என்ற பாடல் ஆல்பத்தை உருவாக்கி சிம்பு இசையமைத்திருந்தார்.

இந்த பாடலை நடிகை ஓவியா பாடியிருந்தார்.

தற்போது இவர்கள் ஒரு புதிய சினிமாவுக்காக மீண்டும் இணைகின்றனர்.

இந்த படத்திற்கு சிம்பு இசையமைக்க, நாயகியாக ஓவியா நடிக்கிறார்.

சந்தானம் நடித்த ‘சக்க போடு போடு ராஜா’ படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கு சிம்பு இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை அனிதா என்பவர் இயக்குகிறார்.

இவர் ‘மாயாஜால்’ மல்டிப்ளக்ஸின் அதிபராக இருக்கிறார். மேலும் ‘பென்டா மீடியா’ என்ற அனிமேஷன் கம்பெனியையும் நிர்வகித்து வருகிறாராம்.

விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Simbu Oviya teams up for new movie Anitha directorial

பவர் பாண்டியை ரீமேக் செய்து தனுஷாக நடிக்கும் கிச்சா சுதீப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முதன்முறையாக தனுஷ் இயக்கிய படம் பவர் பாண்டி.

தமிழில் மாபெரும் வெற்றிப்படமான இப்படத்தை கன்னடத்தில் ரீ-மேக் செய்து தயாரிக்கவிருக்கிறாராம் கிச்சா சுதீப்.

இவர் நான் ஈ மற்றும் புலி படங்களில் வில்லனாக நடித்தவர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இப்படத்தில் ராஜ்கிரண் கேரக்டரில் அம்பரீஷ் நடிக்க, ரேவதி கேரக்டரில் சுஹாசினி மணிரத்னம் நடிக்கிறார்.

தனுஷ் கேரக்டரில் சுதீப் நடிக்க, மடோனா கேரக்டரில் ‘நிபுணன்’ படத்தில் நடித்த ஸ்ருதி ஹரிஹரன் நடிக்கிறார்.

இப்படத்தை குருதத்தா கனிகா என்பவர் இயக்குகிறார்.

Kiccha Sudeep will remake Power Pandi and will act in Dhanush Character

சின்ன படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை; விரக்தியில் விசிறி டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த வெள்ளியன்று விஜய் சேதுபதியின் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’, விஜய் யேசுதாஸின் ‘படை வீரன்’, சண்முகப் பாண்டியனின் ‘மதுர வீரன்’, சமுத்திரகனியின் ‘ஏமாலி’ ஆகிய படங்களோடு புதுமுக நடிகர்கள் நடிப்பில் ‘விசிறி’ என்ற படம் வெளியானது.

இப்படத்தை ‘வெண்ணிலா வீடு’ படத்தை இயக்கிய வெற்றி மகாலிங்கம் என்பவர் இயக்கியிருந்தார்.

தல அஜித் மற்றும் தளபதி விஜய் ஆகியோரின் ரசிகர்களை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியிருந்தார்.

இப்படத்திற்கு போதுமான வரவேற்பு கிடைத்தாலும், போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை என இப்பட இயக்குனர் வெற்றி மகாலிங்கம் கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் கூறியதாவது.. எங்கள் ‘விசிறி படத்தை பிப்ரவரி 2-ம் தேதி வெளியிட திட்டமிட்டு அறிவித்து அதற்கான வேலைகளை தொடங்கினோம்.

ஆனால், கடைசி நேரத்தில் பல படங்கள் வெளியானதால், எங்களுக்கு நிறைய தியேட்டர்கள் கிடைக்கவில்லை.

சின்ன படத்துக்கு ஆதரவு அளிப்போம் என பல சங்க நிர்வாகிகள் பேசுகிறார்கள். ஆனால், யாருமே உதவவில்லை.” என்றார்

More Articles
Follows