தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
நடிப்பில் பிசியாக இருந்த போரே ’பவர் பாண்டி’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார் தனுஷ்.
இந்த படத்தில் ராஜ்கிரண், பிரசன்னா, சாயா சிங் உள்ளிட்ட பலர் நடிக்க தனுஷே தயாரித்திருந்தார்.
அப்படத்துக்கு கிடைத்த வரவேற்பால், சில மாதங்களிலேயே தன் அடுத்த பட இயக்கத்தை தொடங்கினார்.
ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க தொடங்கிய அந்தப் படத்தில் நாகார்ஜூன், ஸ்ரீகாந்த், சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட நட்சத்திங்கள் நடிக்க தொடங்கினர்.
‘நான் ருத்ரன்’ எனப் பெயரிடப்பட்ட அப்படம் ஒரு சரித்திர காலத்து கதையாகும்.
ஆனால் சில தினங்களிலேயே பைனான்ஸ் பிரச்சினையால் சூட்டிங் நிறுத்தப்பட்டது.
தற்போது அதே படத்தை மீண்டும் தொடங்க தனுஷ் முடிவெடுத்துள்ளாராம்.
ஆனால் வேறு ஒரு தயாரிப்பாளர் அந்த படத்தை தயாரிக்கலாம் எனவும் தகவல்கள் வந்துள்ளன.
எனவே விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
