விஜய் பிறந்த நாளில் தனுஷின் ரம்ஜான் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் இயக்கி, தயாரித்து நடித்துள்ள ‘பவர்பாண்டி’ வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இதனையடுத்து தனுஷ் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’.

கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

ரம்ஜான் ஸ்பெஷலாக ஜூன் 23ஆம் தேதி இப்படத்தை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

ஜூன் 22ஆம் விஜய்யின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

3வது மனைவியா நந்தினி; கார்த்தி தற்கொலைக்கு காரணம் என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவி புகழ் நந்தினியின் கணவர் கார்த்தி குளிர்பானத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்துக் கொண்டார்.

அவர் தற்கொலைக்கு முயலும் முன்னர் 3 கடிதங்களை எழுதி இருக்கிறாராம். தற்போது அந்த கடிதங்கள் போலீஸ் விசாரணையில் சிக்கியுள்ளது.

ஒரு கடிதத்தை தன் மனைவிக்கும், மற்றொரு கடிதத்தை தன் அம்மாவுக்கும், 3வது கடிதத்தை தன் தங்கைக்கு எழுதியுள்ளாராம்.

அதில் தன் தற்கொலைக்கு காரணம், நந்தினியின் அப்பாதான் காரணம் என தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக சில விவரங்களும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மிஸ்டர் சென்னை பட்டத்தை ஒரு முறை வென்றுள்ளவர் கார்த்தி.

தற்போது தி.நகரில் பெரிய ஜிம் ஒன்றை நடத்தி வருகிறார்.

நந்தினியை திருமணம் செய்வதற்கு முன்பே இரண்டு பெண்களை திருமணம் செய்துள்ளார். இரண்டாவது மனைவி பெயர் வெண்ணிலா.

நந்தினி மணக்க, அவரின் வீட்டாரின் சம்மதத்தை கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் மறுத்துள்ளனர்.

பின்னர் நந்தினிதான் விருப்பப்பட்டு எதிர்ப்பை மீறி திருமணம் செய்துக் கொண்டு தனிக்குடித்தனம் செய்துள்ளார்.

தனுஷ்-ரஞ்சித் இணையும் படத்தில் ‘கபாலி’ கெட்டப்பில் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஞ்சித் இயக்கிய கபாலி மாபெரும் வெற்றிப் பெற்றதையடுத்து மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த்.

இப்படத்தை தனுஷ் தயாரிக்கிறார். இதன் சூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.

இப்படத்திலும் கபாலி பட கெட்டப் போல நரைத்த தாடியுடன் ரஜினி நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

அதற்காக அண்மைக்காலமாக நரைத்த தாடியுடன் காணப்படுகிறாராம் ரஜினிகாந்த்.

மலேசிய பிரதமருடன் சந்திப்பு, நடிகர் சங்க அடிக்கல் நாட்டு விழா, தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் ஆகிய நிகழ்ச்சிகளிலும் ரஜினிகாந்த் இதுபோன்ற தாடியுடன் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அஜித் பிறந்தநாளை தெறிக்க விட ரெடியாகும் தியேட்டர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உழைப்பாளர் தினமான மே 1ஆம் தேதி அஜித் தன் பிறந்தநாளை கொண்டாட்டுகிறார்.

இதற்கான ஏற்பாடுகளை தற்போதே அஜித் ரசிகர்கள் செய்து வருகின்றனர்.

சில இடங்களில் இலவச நோட்டு புக்குகள், அன்னதானம் ஆகியவற்றை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அஜித் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகப்படுத்தும் வகையில் தியேட்டர்களும் தயாராகி வருகின்றன.

அன்றைய தினத்தில், அஜித்தின் சூப்பர் ஹிட் படங்களான வீரம், ஆரம்பம், மங்காத்தா, வேதாளம், தீனா ஆகிய படங்களை சிறப்பு காட்சிகளாக திரையிட முடிவு செய்திருக்கிறார்களாம்.

கடந்த ஆண்டும் பல திரையரங்குகளில் அஜித்தின் படங்கள் திரையிடப்பட்டது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

விஜய் ரசிகர்களை கவர ஏஆர். ரஹ்மான் திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கிவரும் ‘தளபதி 61’ படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடைபெற உள்ளதால், அதற்கான லொகேஷன் தேடும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இதில் விஜய் நடனத்திற்கு ஏற்ப ஸ்பெஷலாக ஒரு பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த பாடலின் ட்யூனை கேட்ட படக்குழுவினர் குஷியாகி விட்டார்களாம்.

படக்குழுவினரே இவ்வளவு உற்சாகம் அடைந்தார்கள் என்றால், விஜய் ரசிகர்களுக்கு இப்பாடல் செம ஸ்பெஷல் பாடலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

‘நடிகை நந்தினியின் நடத்தை சரியில்லை…’ கார்த்தி தாயார் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சரவணன் மீனாட்சி என்ற தொடர் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை நந்தினி.

இவர் எட்டு மாதங்களுக்கு முன்னர் ஜிம் பயிற்சியாளர் கார்த்தியை வீட்டின் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் சில மாதங்களுக்கு முன்னர் பிரிய, இவரது கணவர் கார்த்தி நேற்று விஷம் அருந்தி தற்கொலை செய்துக் கொண்டார்.

இதுகுறித்து நடிகையின் மாமியாரும், கார்த்தியின் அம்மாவுமான சாந்தி கூறியதாவது…

அவர்கள் இருவரும் பிரிய நந்தினியின் அப்பாதான் காரணம். எப்போது பணம் பணம் என்று கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.

எப்போதும் நண்பர்களுடன் சுற்ற வேண்டும் என்று சொல்வார் நந்தினி. கார்த்தி சொல்வதை கேட்க மாட்டார். அதான் அவன் இந்த முடிவை எடுத்துவிட்டான்.” என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார் கார்த்தி அம்மா.

More Articles
Follows