வடசென்னை-யிலிருந்து விஜய்சேதுபதி-அமலாபால் விலகல் குறித்து தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பவர் பாண்டி படத்தை தொடர்ந்து தான் நடிக்கும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ்.

தற்போது வெற்றிமாறன் இயக்கும் வடசென்னை படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திலிருந்து விஜய் சேதுபதி மற்றும் அமலா பால் இருவரும் விலகியது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

அமலாபால் வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர்கள் விலகல் குறித்து தனுஷ் தன் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது…

‘விசாரணை’ ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டதால், 3 மாதங்கள் வரை ‘வடசென்னை’ சூட்டிங்கை நிறுத்தினோம்.

இப்போது மீண்டும் ஆரம்பித்துவிட்டோம்.

ஒரு படம் தனக்கு என்ன தேவையோ அதை தேடிக்கொள்ளும். தானாகவே அமையும்.

யார் விலகினார்கள், யாரை இயக்குனர் வெற்றி மாறன் மாற்றினார் என்பதற்குள் போக வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன்.

இப்போது படப்பிடிப்பு நல்லபடியாக நடந்துகொண்டிருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார் தனுஷ்.

Dhanush clarifies about Vijay Sethupathi and Amala Paul Call sheet issue in Vada Chennai movie

ஆனந்தி பட தலைப்பில் செருப்பை வைத்த விஜய் பட இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்த ‘புதிய கீதை’ மற்றும் சேரன் நடித்த ‘ராமன் தேடிய சீதை’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கேபி ஜெகன் என்ற ஜெகன்நாத்.

இவர் சில ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் இயக்கிவரும் ‘என் ஆளோட செருப்பக் காணோம்’.

இதில் ’பசங்க’ மற்றும் ‘கோலி சோடா’ ஆகிய படங்களில் நடித்த பாண்டி நாயகனாக நடிக்கிறார்.

ஆனால் தன் பெயரை மாற்றி தமிழ் என்ற பெயருடன் நாயகனாக அறிமுகமாகிறாராம்.

அது இருக்கட்டும். படத்தின் தலைப்பில் இருக்கும் அந்த செருப்பை தொலைத்த ஆள் யார் என்றுதானே கேட்கிறீர்கள்.

அவர்தான் கயல் ஆனந்தி.

ஆனந்தியின் செருப்பு காணாமல் போனதன் பின்னணியில் ஒரு வலுவான காரணத்தை வைத்திருக்கிறாராம் இயக்குனர்.

(என்னப்பா விகேசி செருப்பு விளம்பரத்துல வர போல இருக்கே…)

இவர்களுடன் யோகிபாபு, கே.எஸ். ரவிக்குமார், ஜெயப்பிரகாஷ், சிங்கம் புலி, பாலசரவணன், கயல் தேவராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

பிரபாஸை மணக்க 6000 பெண்கள் போட்டி; ஆறாயிரத்தில் ஒருத்தி யார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகரை மணக்க ரசிகைகள் போட்டி போடுவதும், நடிகையை மணக்க ரசிகர்கள் காத்து கிடப்பதும் காலம் காலமாக நடந்து வரும் ஒன்றுதான்.

பெரும்பாலும் நடிகைகள் தொழிலதிபரை திருமணம் செய்து செட்டில் ஆகிவிடுவார்கள்.

இப்போது நாம் சொல்லப்போவது பாகுபலி ஹீரோ பிரபாஸை பற்றித்தான்.

பாகுபலி படத்திற்காக 5 ஆண்டுகளாக எந்த படத்தையும் ஒப்புக் கொள்ளாத இவர், திருமணத்திற்கும் ஒத்துக் கொள்ளவில்லையாம்.

தற்போது பாகுபலி2 வெளியாகிவிட்டதாலும், இனி பாகுபலி பாகங்கள் தொடராது என ராஜமௌலியும் தெரிவித்து விட்டதால், பிரபாஸ் வீட்டில் பெண் பார்க்கும் படலம் தொடங்கியுள்ளது.

இதனையறிந்த ரசிக பெண்மணிகள் அவரை மணக்க போட்டி களத்தில் குதித்துள்ளனர்.

திருமண தகவல் மையங்கள் கிட்டத்தட்ட 6000 பெண்கள் இவருக்காக பதிவு செய்திருக்கிறார்களாம்.

ஆராயிரத்தில் ஒருத்தியை பிரபாஸ் தேர்வு செய்வாரா? அல்லது வேறு பெண்ணை மணப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

6000 girls were wish to marry Baahubali hero Prabhas

மீண்டும் ரஜினி-தனுஷ் உடன் இணையும் சந்தோஷ் நாராயணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியின் நடிப்பில் 160வது படமாக உருவாகி வரும் படம் 2.0.

இதனையடுத்து தன் 161வது படத்தை இயக்கும் வாய்ப்பை ரஞ்சித்துக்கும், தயாரிக்கும் வாய்ப்பை தனுஷ்க்கும் அளித்தார் ரஜினி.

இந்த மே மாதம் 3வது வாரத்திற்குள் இதன் சூட்டிங் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிகளை துவங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே ரஜினியின் கபாலி, தனுஷின் கொடி, வடசென்னை ஆகிய படங்களுக்கு சந்தோஷ் இசையமைத்திருந்தார். (வடசென்னை தற்போது உருவாகி வருகிறது)

மேலும் ரஞ்சித் இயக்கிய எல்லா படங்களுக்கும் இவரே இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Santhosh Narayanan teams up with Rajini Dhanush combo project

அஜித் ரசிகர்களுக்காக அட்வான்ஸாக விவேகம் டீசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடித்து வரும் விவேகம் படத்தை இயக்கி வருகிறார் சிவா.

இப்படத்தின் டீசர் வருகிற மே 18ஆம் வெளியாகும் என அறிவித்தார் சிவா.

ஆனால் அஜித் ரசிகர்களின் வற்புறுத்தலால் டீசரை அட்வான்ஸாக வெளியிட உள்ளதாக சற்றுமுன் தெரிவித்துள்ளார்.

அதாவது மே 11ஆம் தேதியே டீசர் ரிலீஸாகிறதாம்.

பாகுபலி 2 படம் பற்றி தவறாக பேசினாரா கபாலி ரஞ்சித்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியளவில் பட்டைய கிளப்பி வரும் பாகுபலி2 படத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு முதல் அனைவரும் பாராட்டி வரும் வேளையில், ரஜினியின் கபாலி பட இயக்குனர் ரஞ்சித் படத்தை தவறாக விமர்சித்தாக செய்திகள் வந்தன.
பாகுபலி படம் மக்களுக்கு எந்த கருத்தையும் கூறவில்லை என்று ரஞ்சித் சொன்னதாக செய்திகள் பரவியது.

இதனால் கபாலி தோல்வி என்றும், கபாலி வெற்றிக்கு ரஜினி மட்டுமே காரணம் என பலரும் அந்த கருத்தை விமர்சித்துள்ளனர்.

இதுகுறித்து ரஞ்சித் கூறியுள்ளதாவது… “நான் பாகுபலி2 படம் பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை” என கூறியுள்ளார்.

More Articles
Follows