ஹர்ஷிதா ஷெட்டியை மணக்கும் கிரிக்கெட் வீர்ர் மணிஷ் பாண்டே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மணிஷ் பாண்டே.

பெங்களூரைச் சேர்ந்த இவர், இந்தியாவுக்காக 23 ஒரு நாள் போட்டிகளிலும் 31 டி-20 போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார்.

இப்போது நடிகை ஹர்ஷிதா ஷெட்டியை மணக்க இருக்கிறாராம்.

தமிழில் ’உதயம் என்.ஹெச். 4’, ’ஒரு கன்னியும் மூணு களவானிகளும்’, ’இந்திரஜித்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் ஹர்ஷிதா.

இவர்கள் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்துள்ளனர். அதை இருவரும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் டிசம்பர் 2 ஆம் தேதி இவர்கள் திருமணம் மும்பையில் நடக்கிறது என்று கூறப்படுகிறது.

ஹீரோயிசம் கேரக்டரில் நடிக்கும் ஹன்சிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜயசாந்தி , நயன்தாரா , டாப்சி போன்றோர் ஹீரோக்களை போன்று தனித்தன்மையுள்ள ஹீரோயிசம் கதையில் நடித்து பிரபலமானர்கள். மக்கள் மனதில் அதிகம் இடம்பிடித்து வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றுள்ளனர். இப்பொழுது ஹன்சிகாவும் அதேபோன்றதொரு கதையில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படம் இது.
இப்படத்தை , யோகிபாபு நடித்து சமீபத்தில் வெற்றி பெற்ற ‘தர்மபிரபு’ படத்தை தயாரித்த ஸ்ரீவாரி பிலிம்ஸ் P.ரங்கநாதன் பிரமாண்டமாக தயாரிக்கிறார்.
ஹாரர் , காமெடி ,பேய்ப்படமாக அனைவரும் பார்த்து ரசிக்கும் வண்ணம் இக்கதையை அமைத்துள்ளார்கள்.
இதில் இன்னொரு சிறப்பம்சமாக முக்கிய வேடத்தில் -நெகடிவ் கேரக்டரில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தமிழில் நடிகராக அறிமுகமாகிறார்.
இப்படத்தை இரட்டையர்களான
ஹரி -ஹரிஷ் இயக்குகிறார்கள் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களான இவர்கள் ஏற்கனவே ‘அம்புலி’ , ‘ ‘ ‘அ ‘ (AAAH ), ‘ஜம்புலிங்கம்’ போன்ற படங்களை இயக்கியுள்ளார்கள் .
டிசம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்கும் இப்படத்தை 2020 கோடை விடுமுறை நாட்களில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் .

ரசிகனுக்கு கைகொடுத்த பின் டெட்டாலில் கை கழுவும் விஜய்.. – சாமி (Video)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிந்து சமவெளி, மிருகம், உயிர் உள்ளிட்ட சர்ச்சையான படங்களை இயக்கியவர் சாமி.

இவர் நடிகர் விஜய் மீது பகிரங்க குற்றச்சாட்டை கூறி ஒரு வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

அதில்….

முன்னாள் இளைய தளபதியே என்னை நியாபகம் இருக்கா.? 2000 ஆம் ஆண்டில் உங்களிடம் ஒரு கதை சொன்ன வந்தேன்.

நீங்கள் மேடையில் பேசுவது சரியல்லை. படத்தை பற்றி பேசுங்கள். உங்களின் சாயம் விரைவில் வெளுத்து போகும்.

நீங்கள் ரசிகனிடம் கை குலுக்கி பேசிவிட்டு டெட்டால் போட்டு கை கழுவியிருக்கிறீர்கள். அதை நானே பார்த்து இருக்கிறேன். இதான் உங்கள் நிஜமான நடிப்பு.

சினிமாவை விட நிஜத்தில் நீங்கள் சிறந்த நடிகர்.

60 நாட்கள் சூட்டிங் போறீங்க. ரூ. 50 கோடி சம்பளம் வாங்குறீங்க. அதுவும் கறுப்பு பணம். ஆனால் மேடையில் பொய்யாக கருத்து பேசுகிறீர்கள். எத்தனை நாட்கள் தமிழகத்தை ஏமாத்துவீங்க.

உங்களை விட பெரிய பெரிய ஆட்கள் சினிமாவில் அரசியலில் இருக்கிறார்கள். எனவே சினிமாவில் மட்டும் நடிங்க. என அதிரடியான குற்றச்சாட்டுக்களை கூறியிருக்கிறார்.

Director Saamy slams Vijays acting in real life with his fans

‘மிக மிக அவசரம்’ மட்டும் தள்ளிப்போனது; 3 படங்கள் இன்று ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முதன்முறையாக இயக்கி தயாரித்துள்ள படம் ‘மிக மிக அவசரம்’.

புதுச்சேரியை சேர்ந்த ஸ்ரீபிரியங்கா என்பவர் நாயகியாக நடித்துள்ளார். முக்கிய கேரக்டரில் நாம் தமிழர் சீமான் நடித்துள்ளார்.

விஐபியின் பாதுகாப்பு பணிக்காக ஒரு நாள் முழுவதும் உச்சி வெயிலில் நிற்கும் ஒரு பெண் போலீஸ் கான்ஸ்டபிள் கதைதான் இந்த படம்.

இந்த படத்தை பார்த்த அனைவரும் பாராட்டி வரும் நிலையில் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்திரன் வாங்கியிருந்தார்.

அதன்படி இப்படம் இன்றைக்கு (அக்டோபர் 11ல்) ரிலீஸ் ஆகும் என முன்பே அறிவித்து இருந்தனர்.

ஆனால், போதுமான தியேட்டர்கள் கிடைக்காத காரணத்தால் படத்தை ஒரு வாரம் தள்ளி வைத்துள்ளதாக அறிவித்துள்ளார்கள். அதனால், படம் அடுத்த வெள்ளி அக்டோபர் 18ம் தேதி வெளியாகிறது.

ஆனால் ‘அருவம், பப்பி, பெட்ரோமாக்ஸ்’ ஆகிய மூன்று படங்கள் இன்று சொன்னப்படியே இன்று அக். 11ல் வெளியாகிறது.

Sripriyankas Miga Miga Avasaram movie again postponed

விமல் படத்தில் பிரபல தெலுங்கு நடிகை கார்ரொன்யா கேத்ரின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

களவாணி வெற்றியை தொடர்ந்து விமல் நடிக்கும் புதிய படம் “சோழ நாட்டான்” இதினை பட்டுக்கோட்டை “ரஞ்சித் கண்ணா” இயக்குகிறார் கதாநாயகி கார்ரொன்யா கேத்ரின் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது. இவர் நாயகியாக “Bangari Balaraju” என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானவர் அதை தொடர்ந்து தெலுங்கில் “SD”, ” Itlu Mee SriMathi” மற்றும் “Uttara”, போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

அது போக சிறந்த நடிகை மற்றும் நடனத்திற்கான தேசிய விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படம் பற்றி நாயகியிடம் கேட்ட போது எனக்கு தமிழ்நாடு மற்றும் தமிழ் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும், இயக்குனர் கதை சொல்லும் போதே எனக்கு படம் பிடித்துவிட்டது கதை ரொம்ப நல்ல இருக்கு சார் நான் தான் பண்ணுவேன் என்று உடனே ஒப்புக்கொண்டேன் இந்த படம் எனக்கு நல்ல வரவேற்ப்பை தரும் தமிழில் சிறந்த நாயகியாக வருவேன் என்று நம்புகிறேன் என்று கூறினார்..

ஒளிப்பதிவு “பிரகாஷ்”. பாடல்கள். “கலைக்குமார்”, “மணி அமுதவன்”, “சபரீஷ்”, ஹரிஷ் பிலிம் ப்ரோடுக்ஷன் சார்பாக “பாரிவள்ளல்” தயாரிக்கிறார்.எழுதி இயக்குகிறார் பட்டுக்கோட்டை “ரஞ்சித் கண்ணா””

அன்புள்ள கில்லி படத்துக்காக யுவன் சங்கர் ராஜா பாடிய புதுமையான பாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரைப்பட இயக்குநர் ஸ்ரீநாத்தின் ‘அன்புள்ள கில்லி’ படம் தொடங்கப்பட்ட நாளிலிருந்தே அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, ஆர்வத்தை அதிகப்படுத்தி வருகிறது. காரணம் நாயை மையப்பாத்திரமாகக் கொண்டு வழக்கமாக உருவாக்கப்பட்ட படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட முறையில் இது அமைந்திருப்பதுதான்.

கில்லி என்ற பெயர் கொண்ட லாபர்டார் வகை நாயின் பார்வையிலிருந்து இந்தக் கதை சொல்லப்படுவது மிகவும் புதுமையான அம்சமாகப் பார்க்கப்படுகிறது. படம் வளர்ந்து முழுமையடைந்ததிருப்பது குறித்து ஒட்டுமொத்த படக்குழுவும் முழு திருப்தியடைந்திருக்கும் நிலையில் இப்போது மற்றும் ஒரு கொண்டாட்டமான மனநிலைக்கு வந்திருக்கிறது படக்குழு. ஆம். இந்தப் படத்துக்காக அரோல் கரோலி இசையமைப்பில் யுவன் சங்கர் ராஜா ஒரு பாடலை பாடியிருப்பதுதான் படக்குழுவினரை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்திருக்கிறது.
இது குறித்து இயக்குநர் ஸ்ரீநாத் கூறியதாவது…

யுவன் சாரின் இசையும், அவரது தனித்துவம் மிக்க குரலும் காந்தம் போல் கேட்பவரைக் கட்டிப்போடும். அவர் இந்தப் படத்திற்குள் வந்தது ஒரு மேஜிக் மாதிரிதான் இருந்தது. இந்தப் பாடலுக்கான கம்போஸிங் முடிந்ததும், இசையமைப்பாளர் அரோல் கரோலியும் நானும் யுவன் சார் பாடினால் பிரமாதமாக அமைவதுடன் படத்துக்கும் பலம் சேர்க்கும் என்று நம்பி ட்யூனை அவருக்கு அனுப்பி வைத்தோம். ஆச்சரியமான முறையில், தனது ஒலிப்பதிவுக் கூடத்திலேயே பாடலை பதிவு செய்து கொள்ளும்படி உடனடியாக அவரிடமிருந்து அழைப்பு வந்தது.
ஆண் லாபர்டார் நாய் ஒன்றுக்காக குரல் கொடுத்து யுவன் சார் பாடியிருப்பது இதுவே முதல் முறை. இது ஒரு காதல் பாட்டு.

ஆண் நாய் பெண் நாய் தோன்றும் இந்தக் காதல் பாடலில் இடம் பெறும் மெலிதான நகைச்சுவைக் காட்சிகளும் ரசிக்கும்படி அமைந்திருக்கும். நாங்கள் ரசித்து அனுபவித்த இந்தப் பாடலை ரசிகர்களும் கேட்டு ரசிக்க விரைவில் வெளியிட இருக்கிறோம். காதால் கேட்டதும் இதயத்துக்குள் இடம் பெயரும் அழகான எளிமையான வார்த்தைகளால் பாடலை எழுதியிருக்கும் லவ் குருவுக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்லக கடமைப்பட்டிருக்கிறேன்.

லாபர்டார் நாய் பிரதான வேடத்தில் நடித்திருக்கும் அன்புள்ள கில்லி படத்தில் மைத்ரேயா, துஷாரா, வி.ஜே. ஆஷிக், சாந்தினி, மைம் கோபி, நாஞ்சில் விஜயன், மெளனராகம் புகழ் கிருத்திகா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். தற்போது விஷுவல் எஃபக்ட்ஸ் காட்சிகளை உருவாக்குவதில் படக்குழு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. படத்தின் வெளியீட்டு தேதி குறித்து விரைவில் அதிகார பூர்வமாக அறிவிப்பு வெளியாகும்.

More Articles
Follows