‘செலவுக்கு பணம் தரவேண்டும்…’ தனுஷின் ‘திடீர்’ பெற்றோர் வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த கதிரேசன், ஓய்வுபெற்ற பஸ் கண்டக்டர் மற்றும் இவரது மனைவி மீனாட்சி ஆகிய இருவரும் நடிகர் தனுஷை தங்கள் மகன் சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.

இதுதொடர்பாக அவர்கள் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில்…

“பிரபல நடிகரான தனுஷ் கடந்த 7.11.1985 அன்று எங்களுக்கு மூத்த மகனாக பிறந்தார். கலைச்செல்வன் என்று பெயரிட்டு அவரை வளர்த்தோம்.

பிளஸ்-1 படிக்கும்போது படிப்பை நிறுத்திவிட்டு, இயக்குனர் கஸ்தூரி ராஜாவிடம் பணிபுரிய சேர்ந்தார்.

அதன்பின்னர் கஸ்தூரி ராஜா எங்கள் மகனை எங்களிடம் இருந்து பிரித்துவிட்டார்.

பெற்றோர் என்ற முறையில் எங்களை கவனித்துக் கொள்ள வேண்டியது தனுஷ், எங்கள் மீது அக்கறை இல்லாமல் இருக்கிறார்.

எங்களின் மருத்துவச் செலவு மற்றும் இதர செலவுகளுக்கு ரூ.65 ஆயிரம் மாதந்தோறும் தேவைப்படுகிற்று.

இதனை வழங்க தனுசுக்கு உத்தரவிட வேண்டும்” என கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு தொடர்பான நடந்த விசாரணையில் ஜனவரி 12ஆம் தேதி தனுஷ் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Court summons Dhanush Sudden Parents claims Dhanush their son

அஜித்தை சூப்பர் ஸ்டாராக மதிக்கும் மாஃபியா கும்பல் தலைவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கும் தல57 என்று தற்காலிக பெயரிடப்பட்ட படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

அனிருத் இசையமைக்கும் இதன் சூட்டிங் தற்போது பல்கேரியா நாட்டில் நடந்து வருகிறது.

இதில் அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷ்ராஹாசன், கருணாகரன் ஆகியோர் நடிக்கின்றனர்.

வில்லனாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்து வருகிறார்.

இவர் ஆட்களை கடத்தும் கொடூரமான மாஃபியா கும்பல் தலைவனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட விவேக் ஓபராய் “அஜித் ஒரு சூப்பர் ஸ்டார். அவரை அன்புடன் அஜித் அண்ணா என்றே அழைக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

‘சூர்யா இடத்தில் விக்ரம்…’ கௌதம் மேனனின் அதிரடி முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முதன்முறையாக விக்ரம் நடிக்கவுள்ள படத்தை கவுதம் மேனன் இயக்கவிருக்கிறார்.

தற்போது கைவசம் உள்ள படங்களை இருவரும் முடித்துவிட்டு விரைவில் இதில் இணையவுள்ளனர்.

இது சூர்யா நடிக்கவிருந்து கைவிடப்பட்ட ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் கதை என கூறப்படுகிறது.

இப்படம் முழுக்க முழுக்க அமெரிக்காவில் உருவாகவுள்ளதாம்.

இது போர்ன் (Bourne) சீரீஸ் படங்கள் போல மிக த்ரில்லிங்காக இருக்கும் எனவும் தெரியவந்துள்ளது.

இதனை தன் ‘ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் சார்பாக தயாரிக்கவிருக்கிறார் கௌதம்.

‘அடுத்தவன் கால நக்குறவன பத்தி எனக்கென்ன.?’ – ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில நாட்களாகவே ஜி.வி. பிரகாஷுக்கும் மற்ற சில நடிகர்களின் ரசிகர்களுக்கும் இடையே இணையத்தில் மோதல் வலுத்து வருகிறது.

கடவுள் இருக்கான் குமாரு படத்தில் மற்ற நடிகர்களை கலாய்க்கும் படியான காட்சிகள் இருந்ததால், தற்போது இது தீவிரமடைந்துள்ளது.

மேலும் அஜித் ரசிகர்களோடு கடுமையாக வாக்குவாதம் செய்து வந்தார்.

எனவே அஜித் ரசிகர்கள் ஒன்றினைந்து ஜிவி. பிரகாஷ்க்கு எதிராக சில (#FrustratedPsychoGvPrakash) ஹேஷ்டேக்குகளை கிரியேட் செய்து, இந்திய அளவில் ட்ரெண்ட் செய்துள்ளனர்.

இந்நிலையில் நான் இங்கே வேலை பார்ப்பதற்காக மட்டுமே வந்துள்ளேன்.

அடுத்தவன கால நக்குறவன பத்தி எனக்கு எனக்கென்ன?

ஒருவரை பின்பற்றுவது என்னுடைய சாய்ஸ்” என கடும் கோபத்துடன் ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

G.V.Prakash Kumar ‏@gvprakash
I am here for my profession & not to whine about who licks ones foot. I follow some one & that’s my choice you can’t whine on it either

‘சிங்கமாக மாறிய கமல்ஹாசன்…’ அக்ஷராஹாசன் ஹாப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் அப்பா, அக்கா வழியில் சினிமா துறையில் நடித்து வருகிறார் அக்ஷாராஹாசன்.

தற்போது அஜித்துடன் தல 57 படப்பிடிப்புக்காக பல்கேரியா நாட்டில் இருக்கிறார்.

இதனிடையில் ரசிகர்களுடன் இணையத்தளத்தில் கலந்துரையாடி இருக்கிறார் அக்ஷராஹாசன்.

அப்போது ஒரு ரசிகர் இவரின் அப்பா நடிகர் கமல் பற்றி நலம் விசாரித்திருக்கிறார்.

அப்பா எப்படி இருக்காரு என்று கேட்டுள்ளார்.

அதற்கு அக்ஷாராஹாசன்… சிங்கம் மாதிரி இருக்கிறார் என்று பதிலளித்துள்ளார்.

இன்று இரட்டிப்பு மகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய படம் ரெமோ.

எதிர்பார்ப்பை போலவே, படமும் வசூலில் சாதனை படைத்தது.

இது வெளியாகி இன்றுடன் 50வது நாளை கொண்டாடி வருகிறது.

இன்னும் சில தியேட்டர்களில் இப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு பதிப்பு இன்று ரிலீஸ் ஆகிறது.

எனவே, இந்த இரண்டையும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More Articles
Follows