தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இவர் தற்போது நயன்தாராவை வைத்து இயக்கியுள்ள படம் ‘கொலையுதிர் காலம்’. இதேப்படம் ஹிந்தியில் காமோஷி என்ற பெயரில் உருவாகி உள்ளது.
அதில் தமன்னா, பிரபுதேவா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
வருகிற ஜூன் 14ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் படத்தை வெளியிட சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
அதன் விபரம் வருமாறு…
பாலாஜி குமார் என்பவர் கொலையுதிர் காலம் படத்திற்கான தலைப்பை ரூ.10 லட்சம் கொடுத்து வாங்கியிருக்கிறாராம். இந்த தலைப்புக்கான உரிமை இவரிடம் இருக்கிறது.
எனவே படமானது இதே பெயரில் வெளியாக கூடாது என தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார் பாலாஜி குமார்.
இந்த வழக்கு இன்று (ஜூன் 11) விசாரணைக்கு வந்தது. காப்புரிமை சட்டத்தின் படி இப்படத்தின் தலைப்பு பாலாஜி குமாருக்கு சொந்தமாகும்.
ஆகவே, கொலையுதிர்காலம் படத்தை வெளியிட நீதிபதி இடைக்கால தடைவிதித்தார்.
மேலும் இப்பட தயாரிப்பு நிறுவனம் ஜூன் 21-க்குள் பதிலளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.