இசைஞானி இளையராஜா இசையில் பாடகியான 9 கல்லூரி மாணவிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கல்லூரி மாணவிகள் 9 பேரைத் தான் இசையமைக்கும் படத்தின் மூலம் பாடகியாக திரையுலகில் அறிமுகம் செய்யவிருக்கிறார் இசைஞானி இளையராஜா.

அண்மையில் இசைஞானி இளையராஜா எத்திராஜ் கல்லூரி , ராணி மேரி கல்லூரி என இரண்டு மகளிர் கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டார். அங்கே அவரது பிறந்த நாள் விழாவையும் மாணவிகள் முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடினார்.

இந்நிகழ்ச்சியில் பேசியும் பாடியும் அவர் கல கலப்பூட்டினார். கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடியதுடன் அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

அப்போது அவரது இசையைப் பற்றி மாணவிகள் சந்தேகங்கள், கேள்விகள் கேட்டுத் தெரிந்து கொண்டனர். அப்போது அந்த இரண்டு கல்லூரிகளிலும் மாணவிகள் சிலர் பாடல்கள் பாடியதுடன் அவரது இசையில் தாங்கள் பாடவும் விரும்புவதாகவும் அது தங்கள் கனவென்றும் மாணவிகள் தங்கள் விருப்பத்தை வெளியிட்டிருந்தனர்.

இது இசைஞானி இளையராஜாவின் எண்ணத்தில் அலையடித்திருக்கிறது. அதன் விளைவாக இப்போது இரண்டு கல்லூரியிலும் இசை விருப்பமுள்ள, பாடகியாக ஆசைப்பட்ட மாணவிகள் சிலரை அழைத்துக் குரல் சோதனை வைத்து இருக்கிறார் இசைஞானி. அவர்களில் பாடும் திறன் கொண்ட 9 மாணவிகளைத் தேர்வு செய்து இருக்கிறார்.

இந்த ஒன்பது பேரும் இளையராஜா இசையமைக்கும் அடுத்தடுத்த படங்களில் பாடகியாக அறிமுகமாகிவுள்ளனர். இசைஞானி மூலம் தங்கள் கனவு நினைவானதில் அந்த 9 மாணவிகளும் பூரிப்பில் உள்ளனர்.

விஷால் திருமணம்; தவறான செய்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஷாலின் திருமணம் பற்றி இந்த படத்திலிருக்கும் பெண்மணியின் புகைப்படத்துடன் விஷாலின் மணமகள் என்று வெளி வந்து பரவி கொண்டிருக்கும் செய்தி முற்றிலும் தவறானதும் உண்மைக்கு புறம்பானதுமாகும்.

முறைப்படி அறிவிப்பு வெளியாகும்.மேலும் திருமணம் பற்றி அதிகார பூர்வமான அறிவிப்பு அளிக்கப்பட்ட பின் செய்திகளை வெளியிடுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கழுகு 2 படத்திற்காக சகலகலா வள்ளியாக மாறிய யாஷிகா ஆனந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாகும் வரிசையில் சில வருடங்களுக்கு முன் கிருஷ்ணா, பிந்து மாதவி நடித்து வெற்றி பெற்ற கழுகு படத்தின் இரண்டாம் பாகம் கழுகு-2. கிருஷ்ணா – பிந்துமாதவி ஜோடி மீண்டும் இணைந்து நடிக்கும் இந்த படத்தை கழுகு படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கி இருக்கிறார்.

இந்த படத்தில் காளிவெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, கோபிகிருஷ்ணா படத்தொகுப்பை கவனிக்கிறார்.

இந்தப்படத்தை பிரபல விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான சிங்காரவேலன் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் மக்களுக்கு இடையூறு செய்யும் ஆபத்தான நாய்கள் வேட்டையாடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கிருஷ்ணா.

இந்த படத்தில் இன்னும் ஒரு முக்கியமான சிறப்பம்சமாக நடிகை யாஷிகா ஆனந்த் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் சீசன்-2 நிகழ்ச்சி மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் நன்கு அறிமுகமாகியுள்ளார்.

எனவே அவரை ஒரு பாடலுக்கு ஆடவைக்க முடிவு செய்து அவரிடம் கூறியபோது, பாடலின் முக்கியத்துவத்தை உணர்ந்து சந்தோஷத்துடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் யாஷிகா..

‘சகலகலா வள்ளி’ எனும் இந்தப்பாடல் கிட்டதட்ட 300 நடன கலைஞர்களுடன் பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. பிரபல நடன இயக்குனர் தீனா இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.

கழுகு 2 படத்தின் ஹைலைட்டுகளில் ஒன்றாக அமையும் இந்த பாடல் இன்று வெளியானது.

‘யு’ சான்றிதழ் பெற்றுள்ள இந்த படம் விரைவில் வெளிவரும்.

என்னை உசுப்பேத்தியே கார்த்திக் சுப்பராஜ் நடிக்க வைச்சுட்டார். : ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பேட்ட பட பாடல்களை வெளியீட்டுக்கு பின்னர் ஓய்வு எடுப்பதற்காக கடந்த டிசம்பர் 22ந்தேதி அமெரிக்கா சென்றார் ரஜினிகாந்த்.

மூன்று வாரங்கள் ஓய்விற்கு பிறகு சென்னை திரும்பினார்.

அப்போது சென்னை விமான நிலையத்தில் ‘பேட்ட’ திரைப்பட ரிலீசை ரசிகர்கள் கொண்டாடி வருவது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

20 வருடங்களுக்கு முன்பு பார்த்த ரஜினியை திரையில் பார்த்ததாக கூறுகிறார்களே அது குறித்து உங்கள் கருந்து என்ன? என்றும் கேட்டனர்.

‘பேட்ட ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது என்று கேள்விப்பட்டேன். மிகவும் சந்தோஷம்.

ரசிகர்களை சந்தோஷப்படுத்துவதே எனது வேலை.

பேட்ட திரைப்படம் சிறப்பாக வந்ததற்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்தான் காரணம். என்னை உசுப்பேத்தி உசுப்பேத்தி நடிக்க வைத்தார்கள்.” என்றார்.

Rajinikanth reaction towards Petta release and fans response

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுக்கு பேரனாக நடிக்கும் சிம்பு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல் மற்றும் ஷங்கர் இணைந்த இந்தியன் 2 படம் இந்தியளவில் பெரும் பாராட்டை பெற்றது.

தற்போது 22 ஆண்டுகளுக்கு பிறகு ‘இந்தியன் 2’ படத்திற்காக இருவரும் இணைகின்றனர்.

இதில் முக்கிய வேடத்தில் காஜல் அகர்வால் நடிக்கிறார்.

இந்நிலையில் மற்றொரு முக்கிய கேரக்டரில் சிம்பு நடிப்பதாக கூறப்படுகிறது.

இதில் தாத்தா கமல்ஹாசனுக்கு பேரனாக சிம்பு நடிக்கிறார் என சொல்லப்படுகிறது.

Simbu act as Grand son to Kamalhassan in Indian 2

கடாரம் கொண்டான் சூட்டிங் ஓவர்.; 2 படங்களில் நடிக்க ரெடியான விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜேஷ் எம்.செல்வா இயக்கி வரும் `கடாரம் கொண்டான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விக்ரம்.

இன்னும் சில காட்சிகளும் ஒரு பாடல் சூட்டிங் மட்டும் பாக்கி இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஸ்ரீநிவாஸ் ஆர்.குதா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன், நாசரின் மகன் அபி உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.

இப்பட டீசரை வருகிற 15-ஆம் தேதி வெளியிட உள்ளனர். வருகிற ஏப்ரலில் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர்.

கடாரம் கொண்டான் சூட்டிங் நிறைவு பெற்றதால் அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம் பட இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார் விக்ரம்.

அதன்பின்னர் மகாவீர் கர்ணா படத்தில் நடிக்கவுள்ளார்.

Kadaram Kondan shoot wrap up Vikram ready to act in 2 movie

More Articles
Follows