தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
பிரபல லைகா நிறுவனம் இப்படத்தை ரூ. 543 கோடியில் உருவாக்கியுள்ளது.
இதை முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் படமாக்கியுள்ளார் ஷங்கர்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நாளை உலகமெங்கும் வெளியாகிறது.
இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், கோவையில் உள்ள தனியார் கம்பெனி ஒன்று தன் ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
கூடவே படத்தை கண்டுகளிக்க டிக்கெட் கட்டணத்தையும் தாங்களே செலவு செய்வதாக அறிவித்துள்ளது.
2.0 படம் உலக சாதனைகள் அனைத்தையும் முறியடித்து வெற்றி பெறவேண்டும் எனவும், ரஜினிகாந்த், ஷங்கர், அக்ஷய் குமார் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அந்நிறுவனம் அவர்களின் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
நாளை முழு தினமும் 2.0 கொண்டாட்டம் தான் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
Coimbatore Pvt Company declared leave for 2pointO release