தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இந்த நிலையில் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஐஏஎஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்துள்ளார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
அதன்பின்னர் அவர் கூறியதாவது…
நேற்றுவரை கொரோனா பாதித்துள்ளவர் எண்ணிக்கை 50 ஆக இருந்தது.
தற்போது மேலும் 17 பேர் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 67ஆக உயர்ந்துள்ளது.
இதில் 5 பேர் மட்டுமே குணமடைந்துள்ளனர்.
கொரோனா அறிகுறியுடன் 1,925 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அறிகுறியுடன் காணப்படும் நபர்களை மட்டுமே பரிசோதனைக்கு உட்படுத்த முடியும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஊரடங்கு உத்தரவு சட்டத்தை கடுமையாக அமல்படுத்துவது மக்களை துன்புறுத்துவதற்காக அல்ல.
இது போன்ற ஒரு சவாலான நிலையை தமிழக அரசு எதிர்கொண்டது இல்லை.
கொரோனா தடுப்பு பணியில் ஒன்றரை கோடி முகக்கவசங்கள் வாங்க ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.”
இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்
CM Edappadi Palanisamy talks about Corono updates in Tamilnadu