தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
தற்போது தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெக்கு வருகிறது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலம் வகுப்பு எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், 9 முதல் 12 வகுப்பு பள்ளிகளை திறந்து மாணவர்களின் பாட சந்தேகங்களை ஆசிரியர்கள் தீர்த்து வருகின்றனர்.
இதனையடுத்து தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது எப்போது? என்பது குறித்து முதலமைச்சர் தலைமையிலான மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் நாளை முடிவாக உள்ளதாக கூறப்படுகிறது.
முதலமைச்சர் தலைமையில் நாளை நடக்கும் கொரோனா தடுப்பு ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்கின்றனர்.
தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாம்.
நாளை அக்டோபர் 28ல் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பள்ளிகள் முழுமையாக திறப்பது குறித்தும் மாணவர்களுக்கு விலையில்லா முகக்கவசங்கள் விநியோகம் குறித்தும் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Latest update on schools and colleges re opening in TN