‘இலங்கை தமிழர்களும்; திருட்டு விசிடியும்…’ விளக்கம் கொடுத்த சேரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் படங்களை திருட்டுத்தனமாக இணையங்களில் வெளியிடுவதில் இலங்கை தமிழர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார் சேரன்.

எனவே அவர்களின் நலனுக்காக இங்கே போராடியதை தான் அவமானமான கருதுவதாகவும் கன்னா பின்னா ஆடியோ விழாவில் சேரன் பேசியிருந்தார்.

எனவே அவருக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

இதுகுறித்து அவர் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…

நான் எதற்காக அப்படி பேசினேன் என்பது என்னை பற்றி தெரிந்தவர்களுக்கு தெரியும்.

திருட்டு டிவிடி வெளிநாடுகளில் இருந்து வருகிறது. படங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்கிறார்கள் என்று கதறியபோது, ஏன் விமர்சகர்கள் குரல் கொடுக்கவில்லை.

அவர்களை கண்டித்து அறிக்கை வெளியிடவில்லை. அப்போ எங்கள் வாழ்க்கை பற்றி கவலை இல்லையா?

உலகமெங்கும் நண்பர்களை கொண்டு (அவர்களும் இலங்கை தமிழர்கள்தான்) C2H நிறுவன கிளைகளை துவங்கிய போது, அவர்களை தடுத்தவர்கள், மிரட்டியவர்கள் இன்றும் திருட்டுத்தனமாக விற்பவர்கள்தான்.

ஒட்டுமொத்த இலங்கை தமிழர்களை குறித்து, நான் சொல்லியிருக்கிறேன் என்பது தவறு.

நல்ல குணம் கொண்ட ஈழத்தமிழர்களுக்கு என்னை பற்றி தெரியும்” என்று விளக்கமளித்திருக்கிறார் சேரன்.

திருமண நாள் கொண்டாட்டம்; விஜய்-சங்கீதாவுக்கு குவிந்த வாழ்த்துக்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய், தனது ரசிகையான சங்கீதாவை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெற்றது.

இவர்களுக்கு தற்போது சஞ்சய் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர்.

சஞ்சய், வேட்டைக்காரன் படத்திலும் திவ்யா, தெறி படத்திலும் ஒரு காட்சியில் நடித்தனர்.

இந்நிலையில், நேற்று தனது 17வது வருட திருமண நாளை தனது குடும்பத்தாருடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார் விஜய்.

இவருக்கு ஏராளமான ரசிகர்களும், சினிமாத்துறையினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.

‘இலங்கை தமிழர்களுக்காக போராடியது வருத்தமாக உள்ளது.’ சேரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அழகான பெண்கள் என்றாலே சென்னையில்தான் இருப்பார்கள் என திருச்சியிலிருந்து சென்னை வரும் இளைஞன் பற்றிய ஒரு படம் உருவாகியுள்ளது.

‘கன்னா பின்னா’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை தியா என்பவர் இயக்கி நடித்திருக்கிறார்.

நாயகியாக விஜய்சேதுபதியின் ‘வன்மம்’ படத்தில் நடித்த அஞ்சலி ராவ் நடித்திருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் தாணு கலந்துகொண்டு இசைத்தட்டை வெளியிட்டார்.

இயக்குனர்கள் கே.பாக்யராஜ், சேரன், தங்கர் பச்சான், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் & தயாரிப்பாளர் விஜயமுரளி உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

அப்போது சேரன் பேசும்போது….

‘சினிமாவில் இன்றைக்கு தயாரிப்பாளர்களின் நிலைதான் கேள்விக் குறியாக இருக்கிறது.

கபாலி மாதிரி படங்கள் தான் கோடிகோடியாக கொட்டுகின்றதே தவிர மற்ற தயாரிப்பாளர்கள் எல்லாம் கோடிகோடியாக இழந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

சினிமாவை உங்களுக்கு பிடித்த இடத்தில் உங்கள் வசதிப்படி பார்ப்பது உங்கள் உரிமை. அது டிவிடியாக இருக்கட்டும்.. ஆன்லைனாக இருக்கட்டும்.. ஆனால் அது முறையாக இருக்கவேண்டும்.

தமிழ்நாட்டில் 18 ஆயிரம் திருட்டு டிவிடி கடைகள் இருக்கின்றன. பர்மா பஜாரில் இருக்கிற அத்தனை கடைகளிலும் திருட்டு டிவிடி விற்கிறார்கள். போலீசும் அதை தாண்டித்தான் தினமும் போய்வந்துட்டு இருக்கு.

தமிழ், தமிழன்னு நாம் சொல்றபோது அப்படியே உணர்வுகள் பொங்கி எழுது. ஆனா அந்த தமிழன் தான் இந்த மாதிரி வேலையெல்லாம் பார்த்துக்கிட்டிருக்கான்.

இந்த மாதிரி திருட்டுத்தனமா படத்தை ஆன்லைனில் வெளியிடுறவங்க இலங்கை தமிழர்கள்ன்னு சொல்றாங்க. இலங்கை தமிழர்களுக்காக திரையுலகம் போராடி இருக்கிறது.

எங்களுடைய பல விஷயங்களை இழந்துட்டு போய் அவங்களுக்காக போராடி இருக்கோம்.

ஆனால் அதை சார்ந்த சிலர் தான் இதை பண்றாங்கன்னு கேள்விப்படுகிறபோது, ஏண்டா இவர்களுக்காக இதை பண்ணினோம் என அருவருப்பாக இருக்கிறது” என இலங்கை தமிழர்கள் பக்கம் தாக்குதல் கணையை தொடுத்தார் சேரன்.

பன்ச் டயலாக் பேசுவாரா ‘மக்கள் செல்வன்’ விஜய்சேதுபதி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரத்னசிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி, லட்சுமி மேனன் நடித்துள்ள படம் றெக்க.

இமான் இசையமைத்துள்ள இப்படத்தில் சதீஷ், கபீர் துகான் சிங், கிஷோர், ஹரீஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஆரஞ்ச் மிட்டாய் படத்தை தயாரித்த கணேஷ் இப்படத்தை தயாரித்துள்ளார்.

வருகிற அக்டோபர் 7ஆம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் டீசரை தற்போது வெளியிட்டுள்ளனர்.

வெளியான 12 மணி நேரத்தில் 2 லட்சம் பார்வையாளர்கள் இதை பார்த்துள்ளனர்.

இதில் மதுரை மணிவாசகத்தின் மகளான லட்சுமியை காதலிக்கிறார் விஜய் சேதுபதி.

அப்போது ஒரு காட்சியில் பன்ச் டயலாக் பேசுவீர்களா? என கேட்கும் காட்சி உள்ளது.

அதற்கு பதிலளிக்கும்போது.. பன்ச் டயலாக்கு நானா? பஞ்சு மாதிரி பேசுவேன் என கூறுகிறார்.

தனுஷ் கைகொடுத்தார்; ஜீவாவுக்கு இனி ‘கவலை வேண்டாம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யான், போக்கிரி ராஜா படங்களின் ரிசல்ட்டால் துவண்டு இருந்தார் ஜீவா.

இதில் நயன்தாராவுடன் நடித்த திருநாள் வெற்றியை பெற்றது.

எனவே தனது அடுத்த படங்களின் கதைகளிலும் அதன் வெளியீட்டின் தேதிகளிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இவரது நடிப்பில் உருவாகியுள்ள கவலை வேண்டாம் படத்தை அக்டோபர் 7ஆம் தேதி வெளியிடுகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் டீசரை இன்று மாலை 6 மணிக்கு தனுஷ் வெளியிடுகிறார்.

டிகே இயக்கியுள்ள இப்படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடித்துள்ளார். எல்ரெட் குமார் தயாரித்துள்ளார்.

ஹீரோ சூப்பர் ஸ்டார்; ஹீரோயின் ஸ்நேகா; வில்லன் ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிந்தும் அறியாமலும் படத்தில் வில்லனாக அறிமுகமான ஆர்யா, தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மீண்டும் வில்லன் ரூட்டுக்கே திரும்பியிருக்கிறார். ஆனால் தமிழில் அல்ல மலையாளத்தில்.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கும் “தி கிரேட் பாதர்” படத்தில் கொடூர வில்லனாக நடிக்கிறாராம்.

இதில் நாயகியாக ஸ்நேகா நடிக்க, மம்மூட்டியின் மகளாக சாரா நடிக்கிறார்.

ஹனீப் அதோனி இயக்கும் இப்படத்தை ‘ஆகஸ்ட் சினிமாஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.

More Articles
Follows