கேன்சர் ரசிகைகளுக்கு கூந்தலை தானம் செய்த சார்மி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்புவுக்கு ஜோடியாக ‘காதல் அழிவதில்லை’ படத்தில் அறிமுகமானவர் சார்மி.

இதனைத் தொடர்ந்து தமிழிலும் தெலுங்கிலும் நடித்து வந்தார்.

தெலுங்கு ரசிகர்களுக்கு இவரது தாராள மயம் அத்துப்படி.

இந்நிலையில், தனது அழகான கூந்தலை வெட்டி அதை இரண்டு கேன்சர் நோயாளிகளுக்கு தானமாக வழங்கியுள்ளார்.

அந்த இருவரும் சார்மியின் தீவிர ரசிகைகளாம். அவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சார்மியை சந்தித்துள்ளனர்.

அப்போது சார்மியின் கூந்தலை பார்த்து வியந்து போனார்களாம்.

இதனால் அவர்களுக்காக தனது கூந்தலை கட் செய்து விக்காக தயாரித்து அன்பளிப்பாகக் கொடுத்து விட்டாராம்.

இவரின் இந்த வித்தியாசமான விக் தானம்தான் தற்போது தெலுங்குப் பட ஹாட்டான செய்தி.

வட இந்தியாவிலும் மாஸ் காட்டும் கபாலி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் படமாக இருந்தாலும், உலகளவில் பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ள படம் கபாலி.
முதன்முறையாக ஒரு தமிழ் படம் மலாய் மொழியில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் வடஇந்திய வெளியீட்டு (இந்தி) உரிமையை ஃபாக்ஸ் ஸ்டார் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது.

வட இந்தியாவில் மட்டும் 1,000 தியேட்டர்களில் இப்படத்தை திரையிட இருக்கிறார்களாம்.

கபாலி இந்திப் படத் தொலைக்காட்சி உரிமம் ஸ்டார் டிவிக்கு விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இனி எங்க விஜய்யை பத்தி ஒரு பயலும் அப்படி சொல்ல முடியாது.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் சினிமாவில் நடிக்க வந்து 30 ஆண்டுகளை கடந்து விட்டாலும் தற்போது தான் 60 படங்களை தொட்டு இருக்கிறார்.

இவர் 60 படங்களை கவர்ந்தாலும் இவரின் தோற்றம் எல்லாம் படத்திலும் ஒன்றுதான்.

தன் கெட்டப்பையும் உடல் அமைப்பையும் கொஞ்சம் கூட மாற்றிக் கொள்ளவே மாட்டார் என்ற குற்றச்சாட்டு வெகுநாட்களாக நீடித்து வருகிறது.

இதனிடையில் தெறி படத்தில் சிறிய மாற்றத்துடன் கிகை அலங்காரம் செய்துக் கொண்டார். மேலும் நரைத்த தாடியுடன் தோன்றினார்.

இந்நிலையில், தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வரும் தளபதி 60 படத்திற்காக 10 கிலோ வரை உடல் எடையை குறைத்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையறிந்த விஜய் ரசிகர்கள், இனி ஒரு பயலும் விஜய் தன் உடல் அமைப்பை மாற்றி கொள்ளவில்லை என கூறமுடியாது என தெரிவித்துள்ளனர்.

சந்தானத்திற்கு வழிவிட்டு ஒதுங்கிய மாகாபா ஆனந்த்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவி சின்னத்திரை என்றாலும். இதன் மூலம் சிறந்த கலைஞர்களை பெரிய திரை பெற்றுள்ளது.

சந்தானம், ஜெகன் தொடங்கி, ரஜினி ஜீவா, ரோபா சங்கர், மா கா பா ஆனந்த் மற்றும் லொள்ளு சபா கலைஞர்கள் வரை அது நீள்கிறது.

இந்நிலையில் இன்று ஜீலை 7ஆம் தேதி ரம்ஜான் தினத்தை முன்னிட்டு சந்தானம் மற்றும் மா கா பா ஆனந்த் ஆகிய இருவரின் படங்கள் வெளியாக இருந்தன.

இவர்களின் தில்லுக்கு துட்டு மற்றும் அட்டி ஆகிய இரண்டு படங்களுக்கும் நல்ல எதிர்பார்ப்பும் இருந்தது.

ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் அட்டி படம் இன்று வெளியாகவில்லை என தெரிவித்துள்ளனர்.

எனவே தில்லுக்கு துட்டு, அட்ரா மச்சான் விசிலு, அர்த்தநாரி உள்ளிட்ட படங்கள் இன்று வெளியாகிறது.

சமுத்திரக்கனியின் தொண்டன் படத்தில் சசிகுமாருக்கு பதிலாக ஜெயம் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் சமுத்திரக்கனி மற்றும் சசிகுமார் இணைந்தே பயணித்து வருபவர்கள்.

ஒருவர் நடித்தால், மற்றொருவர் இயக்குவதும், மற்றொருவர் நடித்தால் ஒருவர் தயாரிப்பதும் என தங்கள் கூட்டணி மூலம் தரமான படைப்புகளை கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜெயம் ரவி நடிக்கவுள்ள தொண்டன் படத்தை சமுத்திரக்கனி இயக்கவுள்ளார்.

ஆனால் இக்கதையை சசிகுமாருக்காக எழுதியாக சமுத்திரக்கனியே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் முக்கிய கேரக்டரில் தெலுங்கு நடிகர் அல்லேரி நரேஷ் நடிக்கிறாராம்.

இந்தாண்டு இறுதியில் தொண்டன் படத்தை தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தல 57 ஆரம்பம்… அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வேதாளம் படத்தை தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறார் என்ற செய்தி மட்டுமே கடந்த சில மாதங்களாக பேசப்பட்டது.

ஆனால் இது தொடர்பாக பூஜையோ, அதிகாரப்பூர்வ அறிவிப்போ ஒன்றும் வெளியாகவில்லை.

இதனிடையில் ஆடி மாதம் தொடங்குவதற்குள் இப்படத்தின் பூஜை போடப்படும் என தகவல்கள் வந்தன.

இந்நிலையில் இன்று இப்படத்தின் பூஜை போடப்பட்டு கலைஞர்கள் பற்றிய அறிவிப்பை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

பாடல்களை கபிலன் எழுத அனிருத் இசையமைக்கிறார்.

ஒளிப்பதிவை வெற்றியும் படத்தொகுப்பை ரூபனும் கவனிக்கிறார்கள்.

மற்ற கலைஞர்களின் விவரம் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

வெகுநாட்களாக காத்திருந்த அறிவிப்பு இன்று வெளியானதும் அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர்.

More Articles
Follows