அபிஷேக்-அரவிந்த்சாமி இல்லை; அஜித்தின் வில்லன் முடிவானது!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கும் தல 57 படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட பாதி வரை முடிந்துவிட்டது.

ஆனாலும் படத்தின் வில்லன் யார்? என்ற கேள்விக்கு பதில் கிடைக்காமல் ரசிகர்கள் தவித்து வந்தனர்.

இதனிடையில் அபிஷேக் பச்சனுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருதாக கூறப்பட்டது.

மேலும் அரவிந்த் சாமியுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்களாம்.

இந்நிலையில் விவேக் ஓபராய் வில்லனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

ரஜினியின் ‘2.ஓ’ படத்திற்காக பறவையாக மாறிய ரியாஸ்கான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் 2.ஓ படத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரூ. 350 கோடியில் இப்படத்தை தயாரித்து வருகிறது லைக்கா.

இப்படத்தின் சில காட்சிகளை பறவைகளை வைத்து அனிமேட்ரானிக்ஸ் முறையில் படமாக்கி வருகிறார் ஷங்கர்.

ஹாலிவுட் நிறுவனமான ‘Legacy Effects’ என்ற நிறுவனம் இந்த பணிகளை செய்து வருகிறது.

சில மாதங்களுக்கு முன் வெளியான ஒரு புகைப்படத்தில் அக்‌ஷய்குமாரின் முகம் கூட ஒரு பறவையைப் போல் இருந்தது.

தற்போது, ரியாஸ்கானும் பறவை போல் மாறி ரஜினியுடன் சண்டையிட்டு வருகிறாராம்.

இப்படத்திற்காக காகங்களின் குரல்களை பதிவு செய்வது கஷ்டமாக இருக்கிறது என ரசூல் பூக்குட்டி தெரிவித்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

மேலும், திருக்கழுக்குன்றத்திலும் அரிதான பறவைகளை வைத்து சில காட்சிகளை படமாக்கியிருக்கிறார் ஷங்கர்.

நவம்பர் 20ஆம் தேதி ‘2.0’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மும்பையில் வெளியிட திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘தெறி’ போல் அட்லியின் ‘விஜய்-61’ படத்திலும் ரெண்டு ஜோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜா ராணி மற்றும் தெறி ஆகிய இரண்டு படங்களை மட்டுமே இயக்கியுள்ளார் அட்லி.

இந்த இரண்டு படங்களிலும் தலா இரண்டு ஹீரோயின்கள் இருந்தனர்.

ராஜா ராணியில் நயன்தாரா மற்றும் நஸ்ரியா நடிக்க, தெறியில் சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்திருந்தனர்.

இந்நிலையில் விஜய்யின் 61வது படத்தையும் அட்லிதான் இயக்கவிருக்கிறார்.

தற்போது இப்படத்திலும் ரெண்டு ஹீரோயின்கள் இடம் பெறவுள்ளதாக தெரிகிறது.

விஜய்யுடன் நயன்தாரா மற்றும் காஜல் அகர்வால் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

அஜித்தின் ‘தல-57’ படத்திற்கு இதான் டைட்டிலா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வீரம், வேதாளம் படங்களை தொடர்ந்து, சிவா இயக்கத்தில் தற்போது 3வது முறையாக நடித்து வருகிறார் அஜித்.

இவர்களது முந்தைய படங்களின் தலைப்பு படத்தின் சூட்டிங் முடிவடையும் நிலையில் வெளியிடப்பட்டது.

எனவே தற்போது உருவாகி படத்திற்கும் இதே நிலைதான் நீடித்து வருகிறது.

அனிருத் இசையமைக்க, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்திற்கு வெற்றி விநாயகம் என தலைப்பிடப்பட உள்ளதாக செய்திகள் உலா வருகின்றன.

இப்படத்தை அடுத்த வருடம் 2017 மே மோதம் வெளியாகவுள்ளது.

விஜய்சேதுபதி-டி.ஆர் இணையும் படத்தின் தலைப்பு வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கே.வி.ஆனந்த இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியானது முதல் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது.

இதில் டி.ராஜேந்தரும் இணைந்துள்ளபடியால், நிச்சயம் இது வித்தியாசமான திரைப்படமாக இருக்கும் என்றனர் ரசிகர்கள்.

இவர்களுடன் பிரேமம் புகழ் மடோனா செபாஸ்டியன், ஜெகன், அக்ஷாதீப் சாய்கல் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தங்களது 18வது படைப்பாக இப்படத்தை உருவாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பை சில நொடிகளுக்கு முன் வெளியிட்டனர்.

இப்படத்திற்கு கவண் என தலைப்பிட்டுள்ளனர்.

தனுஷுடன் மும்பை பறந்த சௌந்தர்யா ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி படத்தை தொடர்ந்து சௌந்தர்யா ரஜினி இயக்கவுள்ள படத்தை தயாரிக்கிறார் கலைப்புலி தாணு.

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் தனுஷ் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இதில் ராஞ்சனா படத்தில் சோனம் கபூரூம் நிடிக்கிறாராம்.

எனவே அவருடன் பேச்சுவார்த்தை நடத்த தனுஷுடன் சௌந்தர்யா மும்பைக்கு சென்றிருக்கிறாராம்.

More Articles
Follows