பிக்பாஸ்க்கு பிறகு ஓவியா செய்த ட்வீட்; ச்சும்மா அதிருதுல்ல…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர்கள் கலந்துக் கொண்ட போது இது வேலையில்லா நடிகர்களுக்கு 100 நாட்கள் வேலைத்திட்டம் என பலரும் கிண்டல் செய்தனர்.

ஆனால் பல படங்களில் நடித்தும் கிடைக்காத புகழை இந்த நிகழ்ச்சி மூலம் பலரும் பெற்றனர்.

அதில் மிக மிக முக்கியமானவர் ஓவியா.

அதில் பங்கேற்று வந்த பின்னர் இவருக்கு சினிமாவில் மார்கெட் கடுகடுவென உயர்ந்துள்ளது.

இந்நிலையில் ஓவியா நீண்ட நாட்களுக்கு பிறகு டிவிட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அதில் ’உங்களிடம் இருந்து கிடைத்த அன்பை விவரிக்க வார்த்தையில்லை.

உங்கள் அன்பால் நான் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்.

உங்களின் அன்புக்கு நன்றியுடனும் பொறுப்புடனும் நிச்சயம் இருப்பேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

ஓவியாவின் இந்த ட்வீட்டை 14 ஆயிரம் பேர் ரீடிவிட் செய்தும் 50 ஆயிரம் பேர் லைக்கும் செய்துள்ளனர்.

To get more updates of Actress #Oviya follow this page
Oviya fan club

Bigg Boss fame Oviya tweet goes viral

தென்னிந்திய சினிமாவில் மெர்சலுக்கு கிடைத்த அடுத்த பெருமை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மெர்சல். இப்படத்தை இந்தாண்டு 2017 தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவுள்ளனர்.

இது ஸ்ரீதேனாண்டாள் நிறுவனத்தின் 100வது படம் என்பதால் இதை மிகப்பிரம்மாண்டமாக வெளியிடவுள்ளனர்.

இதனிடையில் தென்னிந்திய வரலாற்றில் முதன்முறையாக இப்படத்தின் ட்விட்டரில் எமோஜி ஐகான் உருவாக்கப்பட்டது.

இந்த சாதனையை தொடர்ந்து மற்றொரு சாதனையையும் இப்படம் படைத்துள்ளது.

அதாவது ஒரு நிறுவனத்தின் பெயரில் மற்ற நிறுவனங்கள் இருக்கக்கூடாது என்பதாலும் அதன் புகழை மற்ற நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது என்ற அடிப்படையிலும் டிரேட்மார்க் சிம்பிள் வழங்கப்படும்.

தற்போது இது மெர்சல் படத்திற்கும் கிடைத்துள்ளது.

இதுகுறித்து இப்படத் தயாரிப்பாளரான ஹேமா ருக்குமணி கூறியதாவது…

பொதுவாக நிறுவனத்திற்கே TradeMark வாங்குவார்கள். நாங்கள் முதன்முறையாக ஒரு படத்திற்கு இதை பெற்றுள்ளோம்.

இது எங்களுடைய பொருள். இதை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது. மேலும் மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்திக் விடவும் கூடாது.

ஆனால் விஜய் மேல் அன்பு கொண்ட ரசிகர்கள் இதை பயன்படுத்தி டிசைன் செய்துக் கொள்ளலாம்.

இது விஜய்யுடன் எங்களது முதல் படம் என்பதால் இது மிகவும் ஸ்பெஷலான படம். எனவே அவரை கௌரவிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

First Time in South Indian film history Mersal got TradeMark

சசிகலாவை போட்டு கொடுத்த டிஐஜி.ரூபா கதையில் நயன்தாரா? அனுஷ்கா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கர்நாடகா சிறைத்துறையில் டி.ஐ.ஜி.யாக பணியாற்றியவர் ஐ.பி.எஸ்.அதிகாரி ரூபா.

இவர் சசிகலா இருக்கும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையை ஆய்வு செய்த போது, பல முறைகேடுகளும் நடப்பதை தெரிவித்தார்.

மேலும் ரூ.2 கோடி தொகையை சசிகலாவிடம் பெற்றுக்கொண்டு அவருக்கு சிறை அதிகாரிகள் பல்வேறு சலுகைகளை வழங்கிவருவதாக குற்றம் சாட்டினார்.

இதனையடுத்து ரூபா போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் இந்த சம்பவகங்களை அடிப்படையாக வைத்து ஒரு சினிமா உருவாகிறதாம்.

இப்படத்தை வனயுத்தம் , ஒரு மெல்லிய கோடு படங்களை இயக்கிய ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கவிருக்கிறாராம்.

இதுபற்றி ரூபாவிடம் அவர் பேசி அனுமதியும் வாங்கிவிட்டாராம்.

ரூபா கேரக்டரில் நயன்தாரா அல்லது அனுஷ்கா நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

வாசகர்களே நீங்க சொல்லுங்க.. உங்க சாய்ஸ் யாரூ?

ரஜினி-தனுஷை அடுத்து சௌந்தர்யாவின் அடுத்த ஹீரோ யார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டாரை இயக்க பல இயக்குனர்கள் காத்திருக்கும்போது தன் முதல் படமான கோச்சடையான் படத்தில் ரஜினியை இயக்கியவர் சௌந்தர்யா.

இதனையடுத்து இவர் தனது அக்கா கணவர் தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி2 (விஐபி2) படத்தை இயக்கினார்.

இப்படம் அண்மையில் வெளியாகி வெற்றிப் பெற்றது.

இந்நிலையில் சௌந்தர்யாவின் 3வது படம் என்ன? அதில் நடிக்கவுள்ள ஹீரோ யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து அவர் சமீபத்திய பேட்டியில் கூறும்போது…
என் அப்பாவை இயக்குவேன் என ஒரு போதும் நினைக்கவில்லை. அது நடந்தது என் வாழ்க்கையில் ஏதோ ஒன்றை அடைந்துவிட்டதை போன்ற உணர்வு.

அடுத்து தனுஷ் என்ற மிகப்பெரிய நடிகரையும் இயக்கிவிட்டேன்.

3வது படத்தை உடனே இயக்கிவிடு என அப்பா கூறியுள்ளார்.

அதற்கான கதையை அமைக்கும் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறேன்” என தெரிவித்துள்ளார்.

கௌரவ்-உதயநிதி கூட்டணியில் இணைந்த விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் பேனர் தயாரிக்கும் படங்களில் மட்டுமே நடித்து வந்த உதயநிதி அண்மைகாலமாக மற்ற நிறுவன படங்களிலும் நடித்து வருகிறார்.

ஸ்ரீதேனாண்டாள் தயாரித்த பொதுவாக எம்மனசு தங்கம் படத்தில் நடித்தார்.

இதனையடுத்து லைக்கா தயாரிக்கும் ‘இப்படை வெல்லும்’ படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை கௌரவ் நாராயணன் இயக்க, மஞ்சிமா மோகன், சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

டி.இமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் வாய்ஸ் ஓவர் கொடுத்து இருக்கிறாராம் விஜய்சேதுபதி.

இத்தகவலை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இயக்குனர் கௌரவ்.

Vijay Sethupathi lend his voice for Ippadai Vellum movie

Gaurav narayanan‏ @gauravnarayanan 51s52 seconds ago
#ippadaivellum The whole team is so happy and thankful to VijaySethupathi bro for lending his magical voice for the film.Thank u so much bro

கருத்தவனெல்லாம் கலீஜாம்… வேலைக்காரன் சிங்கிள் ட்ராக் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த தனி ஒருவன் படம் வெளியாகி இன்றோடு இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

எனவே இதனை முன்னிட்டு மோகன் ராஜா அடுத்து இயக்கியுள்ள வேலைக்காரன் படத்தின் சிங்கள் பாடலை இன்று வெளியிட்டுள்ளனர்.

சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத்பாசில், சினேகா நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இதன் மியூசிக் ரைட்ஸை பெற்றுள்ள சோனி நிறுவனம் இந்த சிங்கிள் பாடலை இன்று சற்றுமுன் வெளியிட்டது.

அதில் ‘கறுத்தவன்லாம் கலீஜாம்… என்று தொடங்கும் பாடலை வெளியிட்டுள்ளது.

இது தரலோக்கல் குத்து பாடலாக அமைந்துள்ளது.

இந்த சிங்கிள் ட்ராக், ‘Gaana’ மற்றும் ‘Saavn’ இணையதளங்களில் வெளியிடப்பட்டு உள்ளன.

இப்படம் செப்டம்பர் 29-ம் தேதி ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Karuthavanlaam Galeejaam Velaikkaran single track released

More Articles
Follows