மது போதையால் ஸ்ரீதேவி மரணம்; துபாய் போலீசார் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்றிருந்தார் ஸ்ரீதேவி.

அப்போது அவருக்கு எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டதால் மரணமடைந்தார் என செய்திகள் வெளியாகின.

இதுவரை அவரது உடல் இந்தியா வரவில்லை. துபாய் நாட்டில் பல்வேறு பரிசோதனைகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.

எனவே அவரது மரணம் பற்றி ரசிகர்களிடையே அதிக சந்தேகம் அதிகரித்தது.

இந்நிலையில் அவரது மரணம் குறித்து தடவியல் மருத்துவர்கள் (உடற்கூறு அறிக்கை தகவல்) சற்றுமுன் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மாரடைப்பு காரணமாக ஸ்ரீதேவி மரணிக்கவில்லை.

குளியல் அறை தொட்டியில் ஸ்ரீதேவி தவறி விழுந்துள்ளார்.

அதிக அளவு மது அருந்தி (ஆல்கஹால்) இருந்ததால் அவரால் தண்ணீரில் இருந்து எழ முடியவில்லை.

இதனால் அவர் தண்ணீரில் மூச்சு திணறி மூழ்கி இறந்துள்ளார். இது ஒரு விபத்துதான்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Autopsy report says accidental drawning cause of Sridevi death

விஜய் பற்றிய புத்தகம் THE ICON OF MILLIONS; நீதிபதி வெளியிட்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்களுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இவரது ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கப் பொருப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தளபதி விஜய் பற்றிய ஓர் ஆங்கில மற்றும் தமிழ் புத்தகம் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

“THE ICON OF MILLIONS” என்று ஆங்கிலத்திலும் மற்றும் தமிழில் “கோடிக்கணக்கான மக்களின் அடையாளன் ” என்ற பெயரிலும் புத்தகம் வெளியிடப்பட்டது.

இந்த புத்தகம் நிவாஸ் என்பவரால் எழுதப்பட்டு ” THALAPATHY ONLINE FANS ” குரு, ரமேஷ்,மோகன், வர்ஷா, சீனிவாசன், மணிகண்டன் ஆகியோர் தலைமையில் இணைந்து திரு.ஹரிஹரன் என்பவரால் இப்புத்தகம் அச்சடிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் விசிறி படத்தில் நடித்த ராஜ சூர்யா, மெர்சல் பட புகழ் மாஸ்டர் அஸ்வாத் மற்றும் தொழிலதிபர் ரமேஷ் , தமிழகத்தின் அனைத்து மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர்களும் மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநில விஜய் மக்கள் இயக்க தலைவர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த புத்தகம் நீதிபதி திரு. டேவிட் அன்னுசாமி அவர்கள் ரிலீஸ் செய்ய தேசியவிருது பெற்ற எழுத்தாளர் “கலைமாமணி ” .பசுபதி ராஜன்  பெற்றுக்கொண்டார்.

இந்த விழாவில் பேசிய நீதிபதி திரு.டேவிட் அன்னுசாமி , இந்த புத்தகம் சிறிய வடிவில் இருந்தாலும் பல செய்திகளை உள்ளடக்கியது.

இது ஓர் விஜய் ரசிகனின் படைப்பு. தளபதி விஜய் சமூகத்தில் மேலோங்கி நிற்கிறார். சமுதாயமும் மேலோங்க வேண்டுமென்று நினைக்கிறார் என்பதை இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புத்தகத்தை எழுதிய எழுத்தாளருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து உரையாற்றினார்.

THE ICON OF MILLIONS Book launched in the name of VIjay

6 அத்தியாயம் பட இயக்குநருடன் கூட்டணி; அடுத்த அருவி-யாகும் அதுல்யா..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காவ்யா புரொடக்சன்ஸ் கோபி கிருஷ்ணப்பா மற்றும் சவீதா சினி ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘என் பெயர் ஆனந்தன்’.

இந்தப்படத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியுள்ளார்.

கடந்த வெள்ளியன்று வெளியாகி அனைவரது ஆதரவையும் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் த்ரில்லர் படமான ‘6 அத்தியாயம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ஆறு அத்தியாயங்களில் ஒன்றான ‘சித்திரம் கொல்லுதடி’ அத்தியாயத்தை இவர்தான் இயக்கியுள்ளார்.

குறும்பட உலகில் இருந்து வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைத்துள்ள இவரது இரண்டாம் படம் தான் ‘என் பெயர் ஆனந்தன்’.

‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ‘தாயம்’ ஆகிய படங்களில் நடித்த சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்க, அதுல்யா நாயகியாக நடித்துள்ளார்.

இவர் ‘ஏமாலி’, ‘காதல் கண் கட்டுதே ’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர். மேலும் தீபக் பரமேஷ், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப்படம் ஐந்து நபர்களின் கூட்டு முயற்சியால் உருவாகி இருக்கிறது.

அத்துடன் இந்த ஐந்து தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார் ஸ்ரீதர் வெங்கடேசன்.

த்ரில்லர் இவருக்கு பிடித்த ஏரியா என்பதாலோ என்னவோ, ‘என் பெயர் ஆனந்தன்’ படத்தையும் முழுநீள த்ரில்லராகவே உருவாக்கியுள்ளார்.

ஆனால் ஆச்சர்யம் என்னவென்றால் த்ரில்லருக்கென்றே உள்ள வழக்கமான கதைக்களங்களை தேர்வு செய்யாமல் சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து நாடகம், தெருக்கூத்து கலைகளை பின்னணியாக கொண்டு இந்தப்படத்தை உருவாக்கியுள்ளார்.

அதுமட்டுமல்ல, இந்தப்படம் தமிழையும், தமிழர் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது என்பது இன்னொரு ஆச்சர்யம்.

தமிழ்நாடு முழுதும் இந்த கதை குறித்த தேடல், ஆராய்ச்சியில் ஈடுபட்ட இயக்குனர் ஸ்ரீதர் வெங்கடேசன், இந்தப்படத்தை த்ரில்லர் பாணியில் உருவாக்கியது நிச்சயம் தமிழ் சினிமாவுக்கு புதிதாக இருக்கும்.

அதுமட்டுமல்ல மேலும் தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக ஒரு புதுமுயற்சியாக க்ளைமாக்சுக்கு சற்று முன்பாக 12 நிமிடங்கள் கொண்ட பாடல் காட்சி இடம்பெறுகிறது.

வழக்கமான பாடல் ( காதல் பாடல் ) போல் இல்லாமல் உணர்வு பூர்வமான பாடலாக இருக்கும். படத்தின் உயிர்நாடியாக இருக்கும் இந்தப்பாடல் ரசிகர்களுக்கு வெவ்வேறு உணர்வுகளை கடத்தும்.

மேலும் வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்டு படத்தின் ஒவ்வொரு கேரக்டரையும் உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஸ்ரீதர்.

சீமைத்துரை, நெடுநல்வாடை ஆகிய படங்களுக்கு இசையமைத்த ஜோஸ் பிராங்க்ளின் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மனோராஜா ஒளிப்பதிவு செய்ய; விஜய் ஆண்ட்ரூஸ் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

இன்னும் ஒரு புதிய முயற்சியாக ஹாலிவுட் படங்களில் பிரபல திரைக்கதை ஆலோசகராக பணியாற்றும் மைக் வில்சன் என்பவருடன் கலந்து விவாதித்து புதிய பாணியிலான திரைக்கதையை உருவாக்கி உள்ளார்கள் என்பது இந்தப்படத்திற்கு பிளஸ் பாயிண்ட்.

இந்தப்படம் முடிவடைந்த நிலையில் படத்தை பார்த்த சிலர், இந்தப்படம் வெளியாகும்போது, ‘அருவி’ படம் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதேபோன்ற ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆச்சர்யம் தெரிவித்தார்களாம்.

மதுரை, திருவண்ணாமலை மற்றும் சென்னை அதன் சுற்றுப்புறங்களில் இதன் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.

போஸ்ட் புரொடக்சன் இறுதிக்கட்டத்தில் இருக்கும் இந்தப்படம் விரைவில் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

6 அத்தியாயம் பட வெற்றி; இயக்குனர்களை தேடிவரும் வாய்ப்புகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த வெள்ளியன்று ‘6 அத்தியாயம்’ படம் வெளியானது.

இந்தப்படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்துள்ள வரவேற்பினால் தற்போது திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

இதனால் தயாரிப்பாளர் சங்கர் தியாகராஜன் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

‘திரைப்பட இலக்கியச் சங்கமம்’ சார்பில் டிஸ்கவரி புக் பேலஸில் ‘6 அத்தியாயம்’ படக்குழுவினர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வின்போது இந்தப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள். முன்னதாக நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மௌன அஞ்சலியும் செலுத்தினர்.

ஆறு இயக்குனர்கள், ஆறு அத்தியாயங்கள், எல்லா அத்தியாயங்களுக்கும் க்ளைமாக்ஸில் தனித்தனி முடிவு என உலக சினிமாவிலேயே ஒரு புதிய முயற்சியாக உருவாகியுள்ள இந்தப்படம் ரசிகர்களை மட்டுமல்லாது திரையுலகினரிடையேயும் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

இந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தப்படத்தை தயாரித்தவரும், 2வது அத்தியாயமான ‘இனி தொடரும்’ அத்தியாயத்தை இயக்கியவருமான சங்கர் தியாகராஜன் இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை ( 6 அத்தியாயம் பாகம்-2 ) உருவாக்க இருக்கிறார். அதில் 6 புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு தரவிருக்கிறார்.

மேலும் மிரமாண்டமான பொருட்ச்செலவில் ஒரு புதிய படத்தை தயாரித்து இயக்க இருக்கிறார்.

இந்தப்படத்தில் பணியாற்றிய ஆறு இயக்குனர்களுக்கும் தற்போது தனித்தனியாக படம் இயக்கும் வாய்ப்புகள் பிரகாசமாகி இருக்கின்றன.

இந்த ‘6 அத்தியாயம்’ படம் வெளியாவதற்கு முன்பே, இதில் ஆறாவதாக இடம்பெற்ற ‘சித்திரம் கொல்லுதடி’ அத்தியாயத்தை பார்த்துவிட்டு, அதை இயக்கியுள்ள ஸ்ரீதர் வெங்கடேசனுக்கு படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

இந்தப்படத்தில் முதல் அத்தியாயத்தை (சூப்பர் ஹீரோ) இயக்கிய கேபிள் சங்கர் ஏற்கனவே ஒரு பெரிய நிறுவனத்துடன் பெரிய பட்ஜெட்டில் படம் இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

இந்தப்படத்தில் 5வது அத்தியாயத்தை (சூப் பாய் சுப்பிரமணி) இயக்கியுள்ள லோகேஷ் இன்று பிரபல தயாரிப்பாளர் ஒருவரை தனது புதிய படத்திற்காக சந்தித்து பேசியுள்ளார். இதுகுறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மூன்றாவது அத்தியாயத்தை ( மிசை) இயக்கிய அஜயன் பாலா மற்றும் நான்காவது அத்தியாயத்தை (அனாமிகா) இயக்கிய சுரேஷ் ஆகியோரும் விரைவில் தங்களது அடுத்த பட அறிவிப்பை வெளியிடுகிறார்கள்.

6 Athiyayam Success 6 Directors getting chances

 

சாய்பல்லவிக்காக கதை எழுதுவார்கள்.; கரு இசை விழாவில் பிரபலங்கள் கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நிவின் பாலியின் பிரேமம் என்ற மலையாள படத்தில் அறிமுகமானவர் சாய் பல்லவி.

அதையடுத்து பிடா, எம்சிஏ போன்ற தெலுங்கு படங்களில் நடித்தார்.

அந்த 2 படங்களும் வெற்றி பெறவே இப்போது தெலுங்கிலும் கவனிக்கப்படும் நடிகையாகி விட்டார்.

இந்நிலையில்தான் விஜய் இயக்கியுள்ள கரு படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார்.

இதில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்திருக்கிறார் சாய்பல்லவி.

இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட பலரும் சாய்பல்லவியின் நடிப்பை பாராட்டினார்கள்.

இப்படத்தின் காட்சிகளில் நடித்து முடித்ததும் ஓடிச்சென்று மானிட்டரில் பார்ப்பாராம். அது தனக்கு திருப்தியாக இருந்தால் மட்டுமே அதோடு நிறுத்திக்கொள்வாராம் சாய்பல்லவி.

இல்லையேல் மீண்டும் ரீடேக் எடுக்க சொல்வாராம். தன் காட்சிகள் நன்றாக வரவேண்டும் என்பதால் இப்படி செய்வாராம்.

சாய்பல்லவியின் இந்த செயல்களை பார்த்த அவரது பெற்றோர்களாக நடித்துள்ள நிழல்கள் ரவி, ரேகா ஆகியோர், எதிர்காலத்தில் சாய்பல்லவி மிகப்பெரிய நடிகையாக வருவார். அவரை மனதில் கொண்டு டைரக்டர்கள் கதை எழுதும் நிலை ஏற்படும்” என்று பாராட்னார்கள்.

SaiPallavis Karu audio launch news updates

மறைந்த பின்னும் திரையில் இணையும் எம்ஜிஆர்-ஜெயலலிதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் நடிகருமான எம்ஜிஆர் நடித்த படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’.

இப்படத்தின் தொடர்ச்சியை ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ என்ற பெயரில் 2ஆம் பாகமாக எடுக்க அப்போதே நினைத்திருந்தாராம்.

ஆனால் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆகிவிட்டதால் அவரது கனவு நனவாகாமலேயே போய்விட்டது.

இந்நிலையில் எம்ஜிஆர் உயிருடன் இருக்கும்போது நடிக்கக் ஆசைப்பட்ட இப்படத்தை, எம்ஜிஆருக்கு நெருக்கமானவர்களில் ஒருவரான ஐசரி வேலனின் மகன் ஐசரி கணேஷ் அனிமேஷன் முறையில் உருவாக்கி வருகிறார்.

இப்படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நடிக்கவுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், இப்படத்தில் பழம்பெரும் நடிகர்களான நாகேஷ், நம்பியார், தேங்காய் சீனிவாசன் உள்ளிட்டோரும் நடிக்க உள்ளனர்.

இவர்கள் அனைவரும் இப்போது உயிருடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருவரும் இதுவரை 28படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அந்த வகையில், கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ அவர்களது 29வது படமாகும்.

2019-ம் ஆண்டு ஜனவரியில் எம்ஜிஆர் பிறந்த நாள் அன்று இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

மேலும், இப்படத்தை அருண் மூர்த்தி இயக்க. டி.இமான் இசையமைக்கிறார்.

அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதுகிறார். எம்ஜிஆர் படத்திற்கு வைரமுத்து பாடல்கள் எழுதும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் அடுத்த ஆண்டு எம்ஜிஆர் பிறந்தநாளின் போது வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Jayalalitha romance with MGR for Kizhakku Africavil Raju movie

More Articles
Follows