என் அப்பாவே அவருடைய படத்தை பார்க்கவிட மாட்டார்… – அதர்வாமுரளி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரெஜினா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட நான்கு நாயகிகளுடன் அதர்வா மற்றும் சூரி இணைந்து நடித்துள்ள படம் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்.

இப்படம் வருகிற ஜீலை 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.

எனவே இப்படம் பற்றி அதர்வா முரளி கூறியதாவது…

இதுவரை நான் வெவ்வேறு வித்யாசமான கதையில் நடித்துள்ளேன். ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தில் நடித்த பிறகு தான் எனக்கு காமெடி நன்றாக வரும், காமெடி எனக்கு பிடிக்கும் என்று எனக்கே தெரியும்.

நான் ஆக்சன் கதை ஒன்றில் நடித்தால் தொடர்ந்து அதே போன்று ஆக்சன் கதைகள் வந்து கொண்டே இருக்கும்.

பரதேசி போன்ற ஒரு படத்தில் நடித்தால் அதை போன்ற கதைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

எனக்கு ரொம்ப நாளாக காமெடி கலந்த ஒரு கதையில் நடிக்க வேண்டும் என்று ஆசை. நான் நிறைய காமெடி கதைகள் கேட்டுள்ளேன் அதை கேட்கும் போது எனக்கே சிரிப்பு வராது.முதலில் எனக்கு சிரிப்பு வந்தால் மற்றவர்களுக்கும் சிரிப்பு வரும்.

ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தின் கதையை கேட்கும் போது முதல் பத்து நிமிடத்திலேயே எனக்கு தெரிந்து விட்டது இந்த படத்தில் நான் நடிக்க போறேன் என்பது.

இந்த கதையை கேட்கும் போது ஓபன் மைண்டாக தான் கேட்டேன், முதல் 10 நிமிடத்தை அவர் எனக்கு கூறியவுடன் முடிவு செய்துவிட்டேன் இந்த கதையில் நான் நடிக்க போகிறேன் என்பதை மற்றவை எல்லாம் எனக்கு போனஸ் தான்.

ஜெமினிகணேசன் சார் என்றால் ” லவர் பாய் ” ” என்று எல்லோரும் சொல்லுவார்கள் அவர் ஒரு ” காதல் மன்னன் “. அவருடைய பெயரை வைத்துக்கொண்டு நான் ஒரே ஒரு நாயகியுடன் நடிக்க முடியாது.

என்னுடைய தந்தை காதல் சொல்லாத மன்னன். என்னுடைய தந்தை நடித்த திரைப்படத்தில் இடம்பெற்ற ” இதயமே இதயமே ” பாடலை ஊரு காட்சியில் வைத்தது இயக்குநரின் ஐடியா.

இதை நாங்கள் முதலேயே பிளான் செய்து எடுக்கவில்லை. அந்த காட்சியை படமாக்கும் போது இயக்குநர் கூறிய ஐடியா தான் இது. அதே போல் தான் ” நியாயமாரே ” என்று சூரி வார்த்தையை சூரி ஒரு காட்சியில் கூறுவார். நான் படத்தில் நடித்த 5 கதாநாயகிகளுடனும் மகிழ்ச்சியோடு தான் நடித்தேன்.

எனக்கு பெண்கள் ரசிகர்களாக இருப்பது மிகவும் சந்தோஷமான ஒன்றாகும். நான் சினிமாவுக்கு வரும் போது என்னுடைய தந்தையின் படங்களை பார்த்து வரவில்லை.

அப்பாவும் அவருடைய படங்களை பார்க்கவேண்டாம் என்று தான் கூறுவார். அப்பாவின் படங்களில் என்னால் நிச்சயம் நடிக்க முடியாது.

அவர் இருந்திருந்தால் என்னுடைய படங்களை பார்த்து என்னால் சொல்லி இருப்பார் என்று எனக்கு தெரியவில்லை.

எனக்கு இந்த மாதிரி படங்களில் நடிக்க வேண்டும் , இதில் நடிக்க வேண்டாம் என்று சொல்லி தர யாருமில்லை.

நான் நடித்த ஒவ்வொரு படங்களும் புதுமையான படங்கள் தான். சூரி அண்ணாவோடு நடித்தது எனக்கு மிகப்பெரிய அனுபவம். அவர் நடித்த புஷ்பா புருஷன் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

அதை போன்ற ஒரு காமெடி படத்தில் அவரோடு நடிக்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை இருந்தது அது எனக்கு இப்படத்தின் மூலம் நிறைவேறி உள்ளது என்றார் அதர்வா முரளி.​

Atharvaa talks about Murali and Gemini Ganeshanum Suruli Raajanum

 

எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா? தயாரிப்பாளரானார் மொட்டை ராஜேந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் பைட் மாஸ்டராக இருந்து பாலா இயக்கிய நான் கடவுள் படம் மூலம் வில்லனாக அறிமுகமானவர் மொட்டை ராஜேந்திரன்.

தற்போது வில்லன் ரோலை விட்டு காமெடிக்கு தாவிவிட்டார். இதுவும் கைகொடுக்கவே, இவரது காட்டில் பணமழைதான்.

இந்நிலையில் எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா? என்று பெயரிடப்பட்ட படத்தின் மூலம் தயாரிப்பாளராகி இருக்கிறார்.

கல்லூரி அகில் நாயகனாக நடிக்க, ’கமருகட்டு’ சஹானா நாயகியாக நடிக்கிறார்.

வர்ஷன் இயக்கியுள் இப்படத்தில் கிராமத்து பண்ணையாராக நடித்துள்ளார் ராஜேந்திரன்.

உயிரிழந்த 25 வீரர்களின் குடும்பங்களுக்கு வீடு வழங்கினார் விவேகம் நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஏப்ரல் மாதத்தில் சத்தீஸ்கரில் உள்ள சுக்‍மா மாவட்டத்தில், மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்‍குதலில் 4 தமிழக வீரர்கள் உள்பட 25 மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் வீர மரணமடைந்தனர்.

எனவே இவர்களின் குடும்பங்களுக்‍கு உதவ முன் வந்தார் பிரபல பாலிவுட் நடிகர் விவேக்.

அதன்படி தனது கட்டுமான நிறுவனம் சார்பாக, வீடுகளை நன்கொடையாக வழங்க முடிவெடுத்து, விரைவில் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்நிலையில், உயிரிழந்த 25 மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் குடும்பத்தினருக்‍கு மும்பையில் கட்டப்பட்டுள்ள அடுக்‍குமாடி குடியிருப்பில் வீடுகளை வழங்கியுள்ளார்.

கடந்த 2004ஆம் ஆண்டு தமிழகத்தில் சுனாமி பேரழிவின் போது கடலூரில் ஒரு கிராமத்தையே தத்து எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் தற்போது அஜித் நடித்துள்ள விவேகம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Vivek Oberoi donated 25 flats to families of CRPF martyrs

திலீப் கைது ஆனதால் அம்மா சங்கத்திலிருந்து நீக்கம்; மம்மூட்டி-மோகன்லால் ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை பாவனா கடத்தல் மற்றும் பாலியல் தொடர்பான வழக்கில் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து மலையாள நடிகர் சங்கமான ’அம்மா’வின் (Association of Malayalam Movie Artistes) அவசரக் கூட்டம் கொச்சியிலுள்ள நடிகர் மம்மூட்டி வீட்டில் இன்று காலை நடந்தது.

இதில் நடிகர் திலீப்பை சங்கத்தில் இருந்து நீக்க ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. இதை நடிகர் மம்மூட்டி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது…

’மலையாள நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து திலீப் நீக்கப்படுகிறார்.

இந்த சங்கம் பாவனாவுக்கு ஆதரவாக இருக்கும்’ என்றார்.

மோகன்லால், பிருத்விராஜ், தேவன், ரம்யா நம்பீசன் ஆகியோர் உடனிருந்தனர்.

கேரள திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் கேரள திரைப்பட தொழிலாளர் அமைப்பும் திலீப்பை நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Dileep arrest in actress Bhavana sexual assault AMMA disowns following his arrest

ரஜினி ஸ்டைலில் பணத்தை திருப்பி கொடுக்கும் சல்மான்கான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தி சினிமாவின் சூப்பர் ஹிட் படங்களின் மிக முக்கியமானவர் சல்மான்கான்.

இவர் நடித்த பெரும்பாலான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் வரிசையில் இடம் பெற்றிருக்கும்.

ஆனால், கடந்த மாதம் 23 ம் தேதி ரிலீஸ் ஆன ’டியூப்லைட்’ படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

எனவே படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள், நஷ்டத்தை திருப்பிக் கேட்டுள்ளனர்.

அதற்கு ஒப்புக்கொண்ட சல்மான் கான் ரூ.55 கோடியை திருப்பித் தர முடிவெடுத்துள்ளாராம்.

சூப்பர் ஸ்டார் நடித்த பாபா, லிங்கா ஆகிய படங்களை நஷ்டமடைந்த போது அப்பணத்தை திருப்பி கொடுத்தார் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.

கள்ளக்காதலை போட்டு கொடுத்ததால் பாவனாவை பழிவாங்கிய திலீப் கைது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த பிப்ரவரி மாதம் காரில் சென்று கொண்டிருந்தபோது, நடிகை பாவனா அந்த கார் டிரைவர் பல்சர் சுனிலால் கடத்தப்பட்டார்.

இதனையடுத்து, காரிலேயே பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டார்.

இச்சம்பவம் போலீஸ் விசாரணைக்கு 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து நடந்த விசாரணையில் நடிகர் திலீப்பின் பேரும் சேர்க்கப்பட்டது.

தற்போது அவர் கேரள காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் தெரிவிப்பதாவது…

திலீப்பின் முதல் மனைவி மஞ்சு வாரியர், பாவனா ஆகியோர் இணைந்து ரியல் எஸ்டேட் செய்து வந்தனர்.

இதனிடையில் விவாகரத்து ஆன காவ்யா மாதவனுடன் மிகவும் நெருக்கமாகிவிட்டார் திலீப்.

இதனை தன் தோழி மஞ்சுவிடம் பாவனா போட்டுக்கொடுக்க, பாவனாவை பழிவாங்க திட்டம் தீட்டினாராம் திலீப்.

எனவேதான் இந்த கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார் திலீப்.

More Articles
Follows