ரஜினி-அஜித் இடத்தை கைப்பற்றிய அர்விந்த்சாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்த ‘ப்ரண்ட்ஸ்’, ‘காவலன்’ ஆகிய படங்களை இயக்கியவர் மலையாள இயக்குனர் சித்திக்.

இவர் இயக்கத்தில் மம்மூட்டி-நயன்தாரா நடித்து வெளியான ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

இதன் தமிழ் ரீமேக்கில் ரஜினி அல்லது அஜித் நடிக்க வேண்டும் என சித்திக் விரும்பினார்.

ஆனால் தற்போது அதில் அர்விந்த் சாமி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இவையில்லாமல் தனது அடுத்தடுத்த படங்களை உறுதி செய்து வருகிறார் அர்விந்த்சாமி.

தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்கில் அதே வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார்.

துருவா என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் நாளை மறுநாள் (டிச. 9) அன்று ரிலீஸ் ஆகிறது.

இவையில்லாமல் போகன், சதுரங்க வேட்டை 2 ஆகிய படங்களும் உள்ளன.

மேலும் இயக்குனர் செல்வா இயக்கவுள்ள ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறாராம் அர்விந்த் சாமி.

சுசீந்திரன்-சமுத்திரக்கனி படங்களில் விக்ராந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹீரோவாக நடித்து வந்த விக்ராந்த் கெத்து படத்தில் வில்லனாக நடித்தார்.

அதன்பின்னரும் அவருக்கு சரியாக வாய்ப்புகள் வரவில்லை.

தற்போது டிஆர் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் ‘கவண்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து, சுசீந்திரன் இயக்கவுள்ள ‘வெண்ணிலா கபடி குழு படத்தின்’ இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார்.

மேலும் சமுத்திரக்கனி இயக்கவுள்ள தொண்டன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம்.

ஆம்புலன்ஸ் ஆப்ரேட்டர்களை பற்றிய கதை இது.

விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்குகிறது.

Vikranth in suseendran and Samuthirakani movies

பாலாவின் அடுத்த பட நாயகன்… சிம்பு? யுவன்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தாரை தப்பட்டை படத்தை தொடர்ந்து பாலா இயக்கத்தில் உருவாகும் படம் என்ன? நாயகன் யார்? என்ற கேள்விகள் எழுந்தன.

இதில் எதிர்பாராவிதமாக சாட்டை, இளமி படப்புகழ் யுவன் நாயகனாக நடிக்கிறார் என்ற செய்திகள் வெளியானது.

இது பிராமணர் சம்பந்தப்பட்ட கதை என்றும் அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

இதனிடையில் சிம்பு வைத்து பாலா தன் அடுத்த படத்தை இயக்குவதாகவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

இதனால் பாலா ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

அம்மாவுக்கு விஜய்-சூர்யா-சிவகார்த்திகேயன் அஞ்சலி; விக்ரம் இரங்கல்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் இந்தியாவையே கண் கலங்க வைத்துள்ளது.

அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் இன்னும் அந்த துயரத்தில் இருந்து மீளவில்லை.

விஜய், சூர்யா, சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் நேரில் சென்று கண்கள் கலங்கியபடியே அஞ்சலி செலுத்தினர்.

ரஜினிகாந்த் குடும்பத்துடன் தனுஷ் சென்று அஞ்சலி செலுத்தினார்.

சீயான் விக்ரம் அமெரிக்காவில் இருப்பதால், நேரில் வரமுடியாமல் கடிதம் மூலம் தன் இரங்கலை தெரிவித்துள்ளார். அதில்…

“தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த செய்தி கேள்விப்பட்டவுடன் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.

அவர் ஒரு சிறந்த தலைவர் மட்டுமல்ல, என்னைப்போன்ற பலகோடி ரசிகர்களின் கண்களுக்கு நட்சத்திரமாகவும் திகழ்ந்துள்ளார்.

அவரது ஆளுமை, உள் வலிமை என அனைத்தையும் தவறவிட்டோம். அவருடைய இழப்பு தமிழ்நாட்டுக்கு மட்டும் இல்லை. இந்தியாவிற்கே பெரிய இழப்பு” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரே படத்தில் பெற்றோருக்கு பெருமை சேர்க்கும் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் படங்களை தயாரித்தும், இயக்கியும் வருகிறார்.

இவர் முதன்முதலில் இயக்கும் பவர் பாண்டி படத்தில் ராஜ்கிரண் நாயகனாக நடிக்கிறார்.

தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவுக்கு முதன் முதலாக இயக்குனராக வாய்ப்பளித்து அப்படத்தை தயாரித்தவர் ராஜ்கிரண்தான்.

மீனா நாயகியாக நடித்த என் ராசாவின் மனசிலே என்ற அப்படம் 1991ல் வெளியானது.

எனவே, பவர் பாண்டியில் ராஜ்கிரனுக்கு வாய்ப்ப்பளித்து, தன் தந்தைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

மேலும் இப்படத்தை அடுத்த வருடம் தமிழ் புத்தாண்டு தினத்தில் 14-04-2017 வெளியிட உள்ளதாக தெரிவித்திருந்தார் தனுஷ்.

அன்றைய தினம் தனுஷின் அம்மா விஜயலெட்சுமியின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் அம்மாவுக்கும் பெருமை சேர்க்கிறார் இந்த தங்கமகன்.

Dhanush gift to his parents by power paandi movie

‘ரஜினியுடன் நடிக்க மறுப்பு; ராணியாக வாழ்வேன்..’ ஜெயலலிதா கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி மற்றும் ஸ்ரீப்ரியா நடித்த பில்லா படத்தை பாலாஜி தயாரித்திருந்தார்.

எம்எஸ் விஸ்வநாதன் இசையமைத்திருந்த இப்படம் 1980ஆம் ஆண்டில் ரிலீஸ் ஆனது.

இப்படத்தில் முதலில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஜெயலலிதாவைதான் கேட்டார்களாம். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

இது தொடர்பாக 35 வருடங்களுக்கு முன்பு ஜெயலலிதா எழுதிய கடித்த்தில் அவர் தெரிவித்திருப்பதாவது…

பாலாஜி இந்தியளவில் சிறந்த தயாரிப்பாளர்களில் ஒருவர். ரஜினிகாந்த், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்.
ஆனால் எனக்கு நடிக்க விருப்பமில்லை.

இது போன்று பல நல்ல நல்ல ஆபர்கள் வந்துக் கொண்டுதான் உள்ளன.

கடவுள் தயவால் காலம் முழுவதும் ராணி போல வாழ்வதற்கான வசதி உள்ளது. என்று தன் கைப்பட எழுதியுள்ளார்.

Flashback : Jayalalitha refuse to act with Rajinikanth

அந்த கடிதம் இதோ…

 

 

More Articles
Follows