உலக மீடியாக்களை அலங்காநல்லூருக்கு அழைக்கும் அருண்ராஜா காமராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்திலுள்ள அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை நடத்திட வேண்டும் என இளைஞர்கள் அறவழிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நள்ளிரவிலும் சரியான உணவு, குடிநீர் கிடைக்காமல் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நெருப்புடா பாடல் புகழ் பாடாலாசிரியரும் நடிகருமான அருண்ராஜா காமராஜ் தன் ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து குறிப்பிட்டுள்ளார்.

“மாவட்ட, தேசிய மற்றும் உலகத்தில் உள்ள மீடியாக்களை அலங்காநல்லூருக்கு அழைக்கிறேன்.

அறவழிப் போராட்டக்கார்களை காப்பாற்ற வேண்டும்” என கேட்டுக் கொள்கிறேன் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அங்கு போராட்டக்காரர்களுக்கு செல்லும் உணவுகளை போலீசார் தடுத்து நிறுத்துவதாகவும், அவர்கள் மீது தடியடி நடத்துவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

Arunraja Kamaraj ‏@Arunrajakamaraj
i request all the Regional,National and international medias to come to alangaanallur and save the protesters. #humanrightsviolations

Arunraja Kamaraj invited world media to support Jallikattu

விஜய்யின் சினிமா கேரியரில் ‘பைரவா’ படைத்த சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்த பைரவா படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி வெளியானது.

இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் நான்கு நாட்கள் வசூலை தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அதாவது ரூ. 100 கோடியை இப்படம் வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

விஜய்யின் சினிமா கேரியரில் இவ்வளவு பாஸ்ட்டாக (4 நாட்களில்) ரூ. 100 கோடியை இந்த படம்தான் வசூலித்துள்ளதாம்.

Vijays Bairavaa movie collected rs 100 crores in 4 days

‘ரஜினி குறித்த சர்ச்சை பேச்சு…’ சரத்குமார் தந்த விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி குறித்த சர்ச்சைக்குரிய கருத்தை சரத்குமார் கூறியதால், சரத்குமாரை ரஜினி ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதை பார்த்தோம்.

இதற்கு சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

“இன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் விவசாய சகோதரர்களின் வேதனை , மாநில அரசு நிவாரணம், மத்திய அரசு ஆய்வு, நிவாரணம், எதிர் கொள்ளவுள்ள தண்ணீர் தட்டுப்பாடு அதற்கு திட்டம், இறுதியாக கேட்கப்பட்ட கேள்வி மறைந்த சோ அவர்களின் நினைவு விழாவில் ரஜினியின் கருத்தான அசாதாரண நிலைமை என்று குறிப்பிட்ட கருத்தை பற்றி என் கருத்து என்ன என்று வினவினர்.

அதற்கு ஏன் அப்படி குறிப்பிட்டார் என்று அவரைதான் கேட்கவேண்டும் என்று தெரிவித்தேன்.

பிறகு தமிழகத்தை தமிழன்தான் என்றும் ஆளவேண்டும் என்ற என் கருத்திற்கு பத்திரிக்கை சகோதரர்கள் “ரஜினி கட்சி ஆரம்பித்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டனர்”

அதற்கு நான் ரஜினி இனியவர் என் நண்பர் ஆனால் கட்சி துவங்கினால் எதிர்ப்பேன் என்று என் கருத்தை தெரிவித்தேன்.

பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு வராத இணையதளத்தில் மிகைப்படுத்தி ரஜினி கட்சி துவங்க தகுதியற்றவர் என்று நான் சொன்னதாக செய்தி வெளியிட்டிருப்பது உண்மைக்கு புறம்பானது.

எதையும் சந்திக்க தயாரானவன் நான் என்பதை வலியுறுத்துகின்ற அதே நேரத்தில் தகாத செயல்களில் ஈடுபடுபவர்களை என் சமத்துவ தழிழ் நெஞ்சங்கள் பொறுமையுடனும் காவல்துறை உதவியுடனும் எதிர்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இவ்வாறு சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

SarathKumar Clarification about his statement on Rajinikanth

‘வழிநடத்திட வாருங்கள்…’ ரஜினியை அழைக்கும் பிஜேபி பிரமுகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 25 வருடங்களாகவே, ரஜினியை அரசியலுக்கு அழைக்க பலர் முயற்சி செய்து வருகின்றனர்.

அவ்வப்போது ரஜினியும் தன் சினிமாக்களில் இது தொடர்பாக வசனங்களை பேசி கைத்தட்டல்களை அள்ளி வருகிறார்.

ஆனால் தன் அரசியல் நிலையை ஆண்டவன் முடிவு செய்வார் என்று தன் ஸ்டைலில் கூறிவருவது நாம் அறிந்ததே.

இந்நிலையில் ஜெயலலிதா மரணத்தால் தமிழக மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

எனவே பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து தமிழகத்தை வழி நடத்திட வேண்டும் என பிஜேபி பிரமுகர் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

இக்கடிதம் தற்போது இணையங்களில் ரைவலாகி வருகிறது.

BJP member invite Rajini to lead Tamil Nadu

கால் கேர்ள்ளாக மாறிய கபாலி மகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பேராண்மை படத்தில் நிறைய நாயகிகள் இருந்தாலும் தன் நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் தன்ஷிகா.

இவர் கபாலி படத்தில் ரஜினியின் மகளாக நடித்து உலகப்புகழ் பெற்றார்.

இந்நிலையில் இவர் தற்போது சினம் என்ற குறும்படத்தில் விலை மாதுவாக நடித்து இருக்கிறார்.

திருநேசன் தயாரித்துள்ள இப்படத்தை ஆனந்த் மூர்த்தி என்பவர் இயக்கியிருக்கிறார்.

Kabali fame Dhanshika in Sinam Short film

‘பீட்டா அமைப்பில் என் மகள் இல்லை…’ த்ரிஷா அம்மா விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்படும் பீட்டா அமைப்புக்கும் த்ரிஷாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறி ரசிகர்கள் த்ரிஷாவை இணையத்தளங்களில் திட்டி வருகின்றனர்.

இதனால் தன் ட்விட்டர் அக்கௌண்ட்டை த்ரிஷா நீக்கியதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இதுகுறித்து த்ரிஷாவின் தாயார் உமா கூறியதாவது…

“த்ரிஷாவின் டுவிட்டர் கணக்கை ஹேக் செய்து தவறான கருத்தை பதிவு செய்துள்ளனர்.

மேலும் ஜல்லிக்கட்டிற்கு எதிரான எந்த கருத்தையும் த்ரிஷா தெரிவிக்கவில்லை. என் மகள் பீட்டா அமைப்பிலும் இல்லை.” என்றார்.

My daughter is not in PETA says Trisha mother Uma

More Articles
Follows