விஜய் டிவி நடிகைக்கு கொரோனா..; தனிமையில் தவிக்கும் ‘அரண்மனை கிளி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகையே அச்சுறுத்தும் நோயாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

இதனால் ஏழை முதல் பணக்காரன் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்

இந்த நிலையில் விஜய் டிவி சீரியல் நடிகைக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாம்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் அரண்மனை கிளி சீரியலில் நடித்து வருபவர் தான் நடிகை மோனிஷா.

இவர் தனக்கு கோவிட் பாசிட்டீவ் என இன்ஸ்டாகிராமிவில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இவர் தன்னை தானே தனிமைப்படுத்தி உள்ளாராம்.

Aranmanai Kili serial fame Monisha tests positive for COVID-19

காந்தி ஜெயந்தி முதல் அமேசானில்.. மாதவன் & அனுஷ்கா மீண்டும் இணைந்த ‘நிசப்தம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டி.ஜி. விஷ்வா பிரசாத் தயாரிப்பில் ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் மற்றும் மலையாளத்தில் சைலன்ஸ் என்ற பெயரில் வெளியாகும் பன்மொழி த்ரில்லர் திரைப்படத்தின் டிரெய்லர் பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது.

இந்தியாவிலும், 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள ப்ரைம் உறுப்பினர்கள் அக்டோபர் 2, 2020 முதல் நிஷப்தம் திரைப்படத்தை தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் பிரத்யேகமாக ஸ்டிரீம் செய்யலாம்.

படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு ஒரு ஆர்வத்தை உருவாக்கிய அமேசான் ப்ரைம் வீடியோ இன்று அனுஷ்கா ஷெட்டி மற்றும் ஆர். மாதவனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் நிஷப்தத்தின் டிரெய்லரை வெளியிட்டது.

சைலன்ஸ் என்ற தலைப்பில், தமிழ் மற்றும் மலையாள மொழியில் வெளியாகும் இந்த படம் மைக்கேல் மேட்சனின் இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது,

மேலும் அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பராஜு மற்றும் சீனிவாஸ் அவசரலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்தியாவிலும், 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள ப்ரைம் உறுப்பினர்கள் அக்டோபர் 2, 2020 முதல் அமேசான் ப்ரைமில் படத்தை ஸ்டிரீம் செய்யலாம்.

டிரெய்லரை இங்கே பாருங்கள்: https://www.youtube.com/watch?v=Gun6uT6buDc&feature=youtu.be

கதைச் சுருக்கம்:

செவித்திறன் குறைந்த மற்றும் வாய்பேசமுடியாத திறைமையான கலைஞரான சாக்ஷி, எதிர்பாராத விதமாக பேய் இருப்பதாக நம்பப்படும் வில்லாவில் நிகழும் மோசமான சம்பவத்தை பார்த்ததால் அதன் குற்றவியல் விசாரணையில் சிக்கிக் கொள்கிறாள்.

துப்பறியும் போலீஸ் குழுவினர் இந்த வழக்கை முழுவதுமாக ஆராய்ந்து, பேய் முதல் காணாமல் போன இளம்பெண் வரையிலான சந்தேக நபர்களின் பட்டியலை தாயார்செய்கின்றனர்.

கடைசிவரை யூகிக்க முடியாத திருப்பங்களுடன், உங்களை இருக்கையின் நுணிக்கே வரைவழைக்கும் ஒரு த்ரில்லர் படமாக நிஷப்தம் இருக்கும்.

suspense thriller nisabdham to hit OTT on october 2nd

ஐ.பி.எல். ஆட்டம்..; சென்னை அணி வெற்றிக்கு ரஜினி பன்ச் டயலாக் சொன்ன இம்ரான் தாஹிர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செப். 19 நேற்றிரவு அபுதாபியில் நடந்த ஐ.பி.எல். 2020 தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி & நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

அண்மையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு அறிவித்த பின், முதன் முறையாக டோனி நேற்று ஐபிஎல் போட்டியில் களம் கண்டார்.

அதில் சென்னை அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 166 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்த வெற்றியைக் குறிப்பிடும் வகையில் சென்னை அணியின் சுழற்பந்துவீச்சாளரும், தென் ஆப்பிரிக்க வீரருமான இம்ரான் தாஹிர் தனது ட்விட்டரில்…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ பட வசனத்தைப் பதிவிட்டுள்ளார்.

அதில், “திரும்பவும் நீ எங்களை(சென்னை சூப்பர் கிங்ஸ்) தொட்டிருக்கக் கூடாது. தொட்டுட்டா தொட்டவன நாங்க விட்டதே இல்லை.

இப்ப தானே காளியோட ஆட்டமே ஆரம்பமாகி இருக்கு. இன்னும் நிறைய சிறப்பான தரமான சம்பவங்கள் காத்துகிட்டு இருக்கு #எடுடா வண்டிய போடுடா விசில்” என்று பதிவிட்டுள்ளார்.

இது CSK ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Thirumbavum nee yengala @ChennaiIPL thoturukka koodadu.Thotutey thottavana nanga vittadey illai.Ippa thane kaliyoda attame arambamagi irukku.

innum neraya sirappana tharamana sambhavangal kathukittu irukku #eduda vandiya poduda whistle — Imran Tahir (@ImranTahirSA) September 19, 2020

Imran Tahir tweets on CSKs first victory

மது மற்றும் இலவசங்களால் சோம்பேறியான தமிழர்கள்.. ; நீதிபதி கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த மே மாதம் 16 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அவர்கள்… “புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் இறப்பு எண்ணிக்கை குறித்த விவரங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு இருந்தார்.

இது தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இதில் ஆஜரான கூடுதல் வழக்கறிஞர் சங்கர நாரயணன் வழக்கு குறித்தான விவரங்களை சமர்பிக்க கூடுதலாக இரண்டு வாரங்கள் கால அவகாசம் வேண்டும் எனத் தெரிவித்தார்.

அப்போது பேசிய நீதிபதி…

“மத்திய அரசு புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் இறப்பு மற்றும் வேலை இழப்பு குறித்த விவரங்கள் இல்லை என நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு மாநில அரசுகளிடம் இருந்தும் தகவல்களைப் பெற்று மத்திய அரசு அந்த விவரங்கறை கூறியிருக்க வேண்டாமா? என்றார்.

இதன்பின்னர் பேசிய வழக்கறிஞர்…

“தமிழ்நாட்டில் பணியாற்றும் தொழிலாளர்களில் 52 சதவிகிதத்தினர் வெளிமாநிலத்தவர்கள் தான்.

தஞ்சாவூர் பகுதிகளில், விவசாயப் பணிகளில் ஏராளமான மேற்கு வங்க மாநில பெண்கள் தான் ஈடுபட்டு வருகின்றனர்” என்றார்.

இதனைதொடர்ந்து மீண்டும் பேசிய நீதிபதி, “தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் மது மற்றும் இலவசங்களால் சோம்பேறிகளாக உள்ளனர். என தெரிவித்தார்.

Data on migrant worker deaths Madras High Court questions Central govt

நடிக்கிற வேலையை மட்டும் பாருடா..; சூர்யா போட்டோவை மிதித்து இந்து இளைஞர் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நீட் தேர்வு அச்சத்தால் தமிழக மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்தனர்.

இதனால் நீட் தேர்வு எதிர்ப்பு தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

எனவே நடிகர் சூர்யா நீட் தேர்வுவை கண்டித்து கடுமையான அறிக்கையை வெளியிட்டார்.

இதனால் நீட் தேர்வை ஆதரிக்கும் பாஜக & இந்து அமைப்புகள் சூர்யாவுக்கு எதிராக திரும்பினர்.

இதனை தொடர்ந்து… திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய இந்து மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் தர்மா என்பவர், நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ1 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்தார்.

இந்த நிலையில் கோவை காந்திப்பார்க் பகுதியில் சூர்யாவை கண்டித்து இந்து இளைஞர் முன்னணியினர் இன்று போராட்டம் நடத்தினர்.

“இயலாமையில் இருக்கும் சில மாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் விதமாக சூர்யா பேட்டிகள் அறிக்கைகள் உள்ளன.

சூர்யா மாதிரியான ஆட்கள் நீட் வந்து மாணவர்களுக்கு ஆகாது நீட் ங்கிற மாதிரி பேசி வருகின்றனர்” என்றார் இந்து இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் சண்முகம்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சூர்யாவின் படத்தை கிழித்தும் காலில் மிதித்தும் அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

நடிப்பை மட்டும் பாருடா சூர்யா…. வேலையை மட்டும் பாருடா சூர்யா… என கோஷங்கள் எழுப்பினர்.

coimbatore hindu munnani youth protest against suriya

ஆண்ட்ரியா நடிக்கும் ‘பிசாசு-2’..; இளையராஜா இல்லாமல் மிஷ்கின் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதயநிதி நடித்த சைக்கோ படத்திற்கு பிறகு துப்பறிவாளன் 2 படத்தை மிஷ்கின் இயக்கி வந்தார்.

ஆனால் அந்த பட தயாரிப்பாளரும் நடிகருமான விஷாலுடன் ஏற்பட்ட மோதலால் அப்படத்திலிருந்து விலகினார்.

இதனையடுத்து தனது அடுத்த படம் தொடர்பான அறிவிப்பை வருகிற 20ம் தேதி அவரின் பிறந்தநாளில் வெளியிடுவதாக தெரிவித்தார் மிஷ்கின்.

தன் அடுத்த படமாக ‘பிசாசு 2’ படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஆண்ட்ரியா நாயகியாக நடிக்க கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.

பெரும்பாலும் மிஷ்கின் படங்களுக்கு இளையராஜா தான் இசையமைப்பார்.

ஆனாலும் இளையராஜாவின் மூத்த மகன்தான் கார்த்திக் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

Mysskins Pisasu 2 cast and crew details

More Articles
Follows