பாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனரான அனுராக் காஷ்யப் பல வெற்றி படங்களை கொடுத்தவர். இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இவர் கேங்ஸ் ஆஃப் வசிப்பூர் என்ற படத்தை 2 பாகங்களாக இயக்கினார். அது மாபெரும் வெற்றி அடைந்தது . இந்த படத்தை இவர் இயக்க காரணம் தமிழில் 2008ஆம் ஆண்டு இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமார் இயக்கத்தில் வெளிவந்த சுப்ரமணியபுரம் படம்தான். அந்த படத்தால் ஈர்க்கப்பட்ட இவர் கேங்ஸ் ஆஃப் வசிப்பூர் படத்தை இயக்கியுள்ளார் என தெரிவித்திருந்தார்.
தற்போது சுப்ரமணியபுரம் படம் மும்பை பாந்த்ரா பகுதியிலுள்ள குளோபஸ் மாலில் நாளை மாலை 7.30 மணிக்கு சிறப்பு காட்சியாக திரையிடப்பட இருக்கிறது. இந்த சிறப்பு காட்சியை இயக்குனர் அனுராக் காஷ்யப் காண இருக்கிறார்.
எஸ் 3 பிக்ச்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார் இனைந்து தயாரிக்கும் திரைப்படம் ஜாம்பி. இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி தற்போது இரண்டாம் கட்ட பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இது தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும் அத்தோடு படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெறும்.
தற்போது யோகிபாபு , யாஷிகா ஆனந்த் , கோபி, சுதாகர், T.M.கார்த்திக், மனோபாலா, அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர், லொள்ளு சபா மனோகர், சித்ரா அக்கா உள்ளிட்ட இன்டர்நெட் பிரபலங்கள் பலர் பங்கேற்கும் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இரவு நேரத்தில் ரிசார்ட்டில் நடைபெறுவது போல தான் படத்தில் அதிமாக காட்சிகள் இடம்பெறுகிறது. ஆதலால் படப்பிடிப்பு தொடர்ந்து இரவு நேரத்தில் பிரபல வி.ஜி.பி போன்ற ரிசார்ட்களில் வைத்து தொடர்ந்து வேகமாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் வி.ஜி.பி ரிசார்ட்டில் 200 இளம் பெண்கள் மற்றும் யோகிபாபு , யாஷிகா ஆனந்த் , கோபி , சுதாகர் , கார்த்திக் , பிஜிலி ரமேஷ் , சித்ரா அக்கா உள்ளிட்ட இன்டர்நெட் பிரபலங்கள் ஒன்றாக பங்கேற்ற பிரமாண்டமான காட்சி படமாக்கப்பட்டது. ஜாம்பிகள் மற்றும் முக்கிய நட்சத்திரங்கள் சந்திக்கும் ப்ரீ கிளைமாக்ஸ் காட்சி அது. இந்த படத்தின் ஹைலைட்டான காட்சியும் கூட அதை இயக்குனர் ஹீலியம் விளக்கொளியில் மிகவும் சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார்.
சென்னை முதல் பாண்டிச்சேரி வரை உள்ள ஈசியார் சாலையில் பயணிக்கும் இப்படத்தின் கதை ஒரு நாள் , ஓர் இரவில் நடப்பது போல் உருவாகியுள்ளது.
வேகமாக உருவாகிவரும் ஜாம்பி படத்தை படக்குழுவினர் சம்மர் ரிலீசாக வெளியிடவுள்ளனர்.
புவன் நல்லன் இயக்கும் இப்படத்துக்கு இசை பிரேம்ஜி.
நயன்தாராவின் வில்லன் நடிகர் ஷான் ” இயக்கி ” படம் மூலம் இயக்குனரானார்
நயன்தாரா நடித்து சூப்பர் ஹிட்டடித்த படம் “டோரா” இந்த படத்தில் வில்லனாக நடித்தவர் ஷான். படம் மாபெரும் வெற்றி பெற்றதால் ஷான் பரபரப்பாக பேசப்பட்டார்..
இப்போது “ இயக்கி “ என்கிற குறும்படத்தின் மூலம் மீண்டும் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறார்…
கால் டாக்சி ஓட்டுபவர்களின் நெகடிவான பக்கங்களை மட்டுமே இது வரை நமக்கு காட்டி அவர்களின் மேல் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறார்கள்..
ஆனால் ஷானின் இயக்கி குறும்படம் அதை தகர்த்து அவர்களும் நம்மில் ஒருவர் தான்.. அவர்களுக்கும் சோகமான பக்கங்கள் இருக்கிறது என்கிற நிதர்சனமான உண்மையை உரக்க சொல்லி இருக்கிறார் ஷான்..
26 நிமிடத்துக்குள் ஒரு ஓட்டுனரின் வலி மிகுந்த வாழ்க்கையை உரசிப் பார்த்திருக்கிற இயக்கி -யின் இயக்குனர் ஷான் என்ன சொல்கிறார்..
இந்த கதையை படமாக்குவது என்று முடிவெடுத்தவுடன் கால் டாக்சி ஓட்டுனரானேன்…500 க்கும் மேல் டிரிப் அடித்து அனுபவத்தை கற்றுக் கொண்டு அதற்கு மேல் படமாக்கினேன்.பட்டம் படித்து விட்டு உணவு உறக்கம் எல்லாவற்றையும் இழந்து குடும்பத்திற்காக அடிமை வாழ்க்கையை ஏற்றுக் கொண்டிருக்கும் அவர்களது வலியை சொல்லி மாளாது..கார்ப்பரேட் கம்பெனிகள் அவர்களுக்கான வருமானத்தை மட்டுமே கருத்தில் கொண்டு..மனிதாபிமானம் என்ற ஒன்றையே மறந்து போய் விட்டார்கள். இப்படியே போனால் அடுத்த தலை முறை அடிமை வாழ்க்கைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தானே உண்மை…உண்மையை ஊரறிய சொல்லி இருக்கிறேன். இயக்கி மாதிரி இன்னும் நிறைய இருக்கு..இப்போதைக்கு நல்ல நல்ல படங்களில் நடிக்கனும் …நல்ல நடிகன்னு பேர் எடுக்க வேண்டும் இது தான் என் ஆசை என்கிறார் ஷான்.
வாழ்க …வளர்க..வரவேற்போம்..
‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதியின் நட்பே துணை ட்ரைலர் நாளை முதல்…
பெரும்பாலானோரால் எதிர்பாக்கப்பட்ட ஹிப்ஹாப் தமிழா நடிக்கும் நட்பே துணை படத்தின் ட்ரைலர் நாளை (பிப்.28) வெளியாகும். இப்படத்தின் அறிவிப்பு வெளியானத்திலிருந்தே அனைவரின் கவனத்தையும் பெருமளவில் ஈர்த்தது. இப்படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி இசை உலகிலும், இணையதளங்களிலும் மக்களைத் தன் வசப்படுத்தியது. இப்போது ட்ரைலரும் மகிழ்விக்க வருகிறது. இப்படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டி. பார்த்திபன் தேசிங்கு. ஹிப்ஹாப் தமிழா ஆதியின் காதலியாக அனகா நடிக்கிறார். இப்படம் அடிப்படையாகக் கொண்டு உருவானாலும் குடும்பம், நட்பு, காதல், நகைச்சுவை மற்றும் சென்டிமென்ட் என அனைத்தும் கலந்து இருக்கிறது.
விக்னேஷ் காந்த், பாண்டியராஜன், கௌசல்யா, ‘எரும சாணி’ புகழ் விஜய், ஹரிஷ் உத்தமன், ஷாரா, ‘பழைய ஜோக்’ தங்கதுரை, அஜய் கோஷ், சுட்டி அரவிந்த், வினோத், புட் சட்னி (Put Chutney) புகழ் ராஜ்மோகன், பிஜிலி ரமேஷ் மற்றும் அஸ்வின் ஜெரோமி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
தொழில்நுட்ப கலைஞர்கள் – ஒளிப்பதிவு – டிமாண்டி காலனி மற்றும் இரவுக்கு ஆயிரம் கண்கள் புகழ் அரவிந்த் சிங், படத்தொகுப்பு – பென்னி ஆலிவர், கலை – பொன்ராஜ், நடனம் – சந்தோஷ் மற்றும் சிவராக் ஷங்கர், சண்டை பயிற்சி – பிரதீப் தினேஷ், தயாரிப்பு – சுந்தர்.சி -ன் அவ்னி மூவிஸ்.
தீபாவளிக்கு முன்பே ரிலீஸாகிறதா தளபதி 63.?; விஜய் ரசிகர்கள் குழப்பம்