இதான் அமலா பாலின் பெஸ்ட்… அடித்துச் சொல்லும் தனுஷ்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் தயாரித்து அமலா பால் நடித்துள்ள படம் ‘அம்மா கணக்கு’.

வருகிற ஜீன் 17ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது தனுஷ் பேசியதாவது….

“நான் விருதுக்காக திட்டமிட்டு படங்களை எடுப்பத்தில்லை. ஆனால், கடவுள் அருளால் அது தானாக அமைகிறது.

அம்மா கணக்கு படம் சமுதாயத்துக்கு தேவையான படம்.

பள்ளிப் படிப்பில் மிகவும் கடினமான பாடம் கணக்குதான். நான் கூட ப்ளஸ்டூவில் கணக்கு பாடத்தில் ஃபெயில் ஆனவன்தான்.

இப்படம் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக இருக்கும்.

அமலாபாலின் க்ளோஸ்அப் காட்சிகளுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இதைவிட என்ன சிறப்பு வேண்டும்?

அமலாபால் இதன் பிறகு இப்படி நடிப்பாரா? என்று தெரியவில்லை. அவர் நடித்த படங்களிலேயே இதான் பெஸ்ட்.

அவருக்கும் அவரது மகளாக நடித்துள்ள யுவாவுக்கும் தேசியவிருது கிடைக்கும் என நம்புகிறேன்”

இவ்வாறு தனுஷ் பேசினார்.

ஜுன் 18ஆம் ரிசல்ட்…. கமலுடன் மோதும் அஜித்-ஜெயம் ரவி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய தென்னிந்திய சினிமாவை கௌரவிக்கும் வகையில் ஃபிலிம்ஃபேர் விருதுகள் கடந்த 62 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது 63வது ஆண்டிற்கான விருது பட்டியல் தயாராகி வருகிறது.

இதற்கான விழா ஜுன் 18ம் தேதி ஐதராபாத்தில் நடைபெறவுள்ளது.

இந்த விருதுகளுக்கு ரசிகர்களின் பேராதரவை பெற்ற தமிழ் படங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

கமலின் ‘பாபநாசம்’, அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ மற்றும் ஜெயம் ரவியின் தனி ஒருவன் உள்ளிட்ட படங்கள் தலா ஐந்து பிரிவுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

மேலும் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘ஐ’ படம் 8 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

த்ரிஷாவுடன் இணையும் ஜாங்கிரி மதுமிதா-யோகி பாபு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாயகி படத்தை தொடர்ந்து மீண்டும் த்ரில்லர் படத்தில் நடிக்கிறார் த்ரிஷா.

மாதேஷ் இயக்கும் இப்படத்திற்கு மோகினி என பெயரிட்டுள்ளனர்.

இதன் கிராபிக்ஸ் பணிகளை ஹாரி பாட்டர் படத்தில் பணியாற்றிய குழு செய்கிறது. ப்ரின்ஸ் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

ஜூன் 2ஆம் தேதி தொடங்கிய இதன் முதற்கட்டப் படப்பிடிப்பில் தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது.

இதன் படப்பிடிப்பில் த்ரிஷாவுடன் ஜாங்கிரி மதுமிதா மற்றும் யோகிபாபு ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனர்.

புதுப்புது அர்த்தங்கள் சொல்லும் சூர்யா-தனுஷ்-ஜெயம் ரவி படங்கள்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் பெயர் வைத்தால் தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்கும் என்பதால், தமிழக இயக்குனர்கள் புதிய பெயர்களை தேடி வருகின்றனர்.

ஒரு பக்கம் ரசிகர்களை கவருவதற்காக நீண்ட தலைப்புகளை வைத்து வருகின்றனர்.

மற்றொரு புறம் இதுவரை நாம் கேள்விபடாத வார்த்தைகளை படத் தலைப்பாக வைத்து விடுகின்றனர்.

ஜெயம் ரவியின் படத்திற்கு மிருதன் என பெயரிட்டனர். மிருகமும் மனிதனும் கலந்த கலவைதான் இது என கூறப்பட்டது.

எஸ் ஜே சூர்யா, விஜய்சேதுபதி நடித்த படத்திற்கு இறைவி என பெயரிட்டனர். இறைவி என்பது பெண் கடவுளை குறிக்கும் என்றனர்.

இவர்களைத் தொடர்ந்து தனுஷ் படத்திற்கு தொடரி எனப் பெயரிட்டுள்ளனர். இதற்குமுன் நாம் புகைவண்டி என்பதை கூற கேட்டிருக்கிறோம்.

இதுபோல் தெகிடி, ஆகம் என்ற தலைப்புகளிலும் படங்கள் வெளியாகியுள்ளது.

இதனால் தமிழ் அகராதியே படிக்காத தமிழர்களுக்கு தற்போது புதுப்புது அர்த்தங்கள் கிடைத்து வருகிறது என்பதே நிதர்சன உண்மை.

மீண்டும் மீண்டும் ரசிகர்களை ஏமாற்றும் சூப்பர் ஸ்டார்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெரும் எதிர்பார்க்குள்ளான கபாலி படத்தின் பாடல்கள் ஜூன் 12ஆம் தேதி வெளியாகிறது.

ஆனால் இதற்கான இசை விழாவை ரத்து செய்து விட்டு ஆன்லைனில் வெளியிடவுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தற்போது மீண்டும் ஒரு ஏமாற்றமளிக்கும் செய்தி கிடைத்துள்ளது.

கபாலி படமும் ஜூலை 1ஆம் தேதி வெளியாகாது என கூறப்படுகிறது.

படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாலும், இதன் இறுதிக்கட்ட பணிகள் தாமதமாகி வருவதாலும் படம் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்படம் ஜூலை 15 ஆம் தேதி வெளியாகலாம் எனத் தெரிகிறது.

‘பாகுபலி’ க்ளைமாக்ஸீக்கு மட்டும் 10 வாரங்கள்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த வருடம் வெளியாகி ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்த படம் ‘பாகுபலி’.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி.

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வருகிற 13ஆம் தேதி முதல் இதன் க்ளைமாக்ஸ் காட்சியை படமாக்க இருக்கிறார்களாம்.

இத்தகவலை இப்படத்தின் தயாரிப்பாளர் Shobu Yaralagada உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த க்ளைமாக்ஸ் காட்சியை மட்டும் 10 வாரங்கள் படமாக்கவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

க்ளைமாக்ஸ் சூட்டிங்கே இப்படி என்றால் திரையில் இதன் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும் என்பதை நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.

More Articles
Follows