தனுஷ்-கார்த்தியுடன் மோதும் நதியா-மா.கா.பா. ஆனந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வருகிற 2016 தீபாவளிக்கு பல படங்களில் போட்டியில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தனுஷ் நடித்துள்ள கொடி மற்றும் கார்த்தி நடித்துள்ள காஷ்மோரா ஆகிய படங்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டு இருந்தன.

இந்நிலையில் தற்போது, மேலும் இரு படங்கள் களத்தில் குதிக்கின்றன.

மலையாள சினிமாவின் முன்னனி இயக்குநர் துளசிதாஸ் இயக்கிய “திரைக்கு வராத கதை” படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

ஆண்களே நடிக்காத இப்படத்தில் நதியா, இனியா, ஈடன், கோவைசரளா, ஆர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை MJD புரொடக்‌ஷன்ஸ் சார்பாக K.மணிகண்டன் தயாரித்துள்ளார்.

இத்துடன் மாகாபா. ஆனந்த் நடித்துள்ள கடலை படமும் வெளியாகிறது.

சகாய சுரேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஜான்பாபு, பொன்வண்ணன், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

உதயம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

 

சூர்யா பட தயாரிப்பாளருடன் இணையும் விக்ரம்-ஆனந்த் சங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யாவின் சிங்கம், கார்த்தியின் பருத்தி வீரன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் ஞானவேல் ராஜா.

இவர் தற்போது, விக்ரம் நடிக்கவுள்ள படத்தை தயாரிக்கவிருக்கிறாராம்.

இப்படத்தை இருமுகன் இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்குகிறார்.

இதன் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது பெரும் வெற்றிப் பெற்ற ஹாலிவுட் படமான ‘டோன்ட் ப்ரீத்’ படத்தின் ரீமேக் என்றும் கூறப்படுகிறது.

பிரபல இயக்குனர் படத்தில் சந்தானம் ஜோடியாக சாய்பல்லவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் தமிழக ரசிகர்களையும் சேர்த்து வளைத்து போட்டவர் சாய்பல்லவி.

எனவே, இந்த மலர் டீச்சர் தமிழ் படங்களில் எப்போது நடிப்பார் என ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர்.

இந்நிலையில், இயக்குனர் செல்வராகவன் இயக்கும் படத்தில் சந்தானத்துடன் சாய்பல்லவி நடிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம்.

ஓரிரு தினங்களுக்கு முன், விடிவி புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் சந்தானம்.

மேலும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளில் செல்வராகவன் பிஸியாக உள்ளார்.

இவர்கள் இருவரும் இப்படங்களை முடித்துவிட்டு இணையக்கூடும் என சொல்லப்படுகிறது.

சைத்தான் இயக்குனரின் படத்தில் சிபிராஜ்-சதீஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் ஆண்டனி நடித்துள்ள சைத்தான் படத்தை பிரதீப் இயக்கியிருக்கிறார்.

இப்படம் வெளிவரும் முன்னரே, தன் படத்தை இயக்க தயாராகி விட்டார்.

இதில் சிபிராஜ் நாயகனாக நடிக்கிறார்.

இவருடன் பிரபல காமெடி நடிகர் சதீஷும் தற்போது இணைந்துள்ளார்.

இப்படத்தை நாதம்பாள் பிலிம்ஸ் சார்பாக சிபிராஜே தயாரிக்கிறார்.

சூர்யா பட சான்ஸ்; கீர்த்திக்கு கிடைத்த பர்த் டே கிப்ட்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹரி இயக்கும் எஸ் 3 படத்தை தொடர்ந்து, விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சூர்யா.

ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் இப்படத்திற்கு தானா சேர்ந்த கூட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இது சூப்பர் ஹிட் ஹிந்திப்படமான ஸ்பெஷல் 26 என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் நாயகி யார் என்ற உறுதியான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

கீர்த்தி சுரேஷ் இதில் நாயகியாக நடிக்கிறார்.

நாளை கீர்த்தி சுரேஷ் தனது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில், இது அவருக்கு கிடைத்த பிறந்தநாள் பரிசாக கருதப்படுகிறது.

நவம்பர் முதல் வாரம் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.

ஜெயலலிதா உடல்நிலை குறித்து விசாரித்த ரஜினி-ஐஸ்வர்யா தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு லண்டன் டாக்டர் மற்றும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர்கள் நேரில் வந்து ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ராகுல்காந்தி, அமித்ஷா உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் அப்பல்லோ மருத்துவமனை சென்று ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரஜினிகாந்த் அவரது மகள் ஐஸ்வர்யாவுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

ஜெயலலிதா உடல்நலம் குறித்து அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களிடம் கேட்டறிந்துள்ளனர்.

More Articles
Follows