அதிகாலையிலேயே அம்மாவுக்கு அஞ்சலி செலுத்திய அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக மக்களால் அம்மா என்று அழைக்கப்பட்டவர் முதல்வர் ஜெயலலிதா.

இவர் நேற்று முன்தினம் (டிச. 5, 2016) அன்று இரவு காலமானார்.

இவரது மறைவுக்கு இந்தியாவே அஞ்சலி செலுத்தியது எனலாம்.

அதன்பின்னர் நேற்று மாலை எம்ஜிஆர் சமாதி அருகே, இவரது உடல் புதைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று அதிகாலையிலேயே தனது மனைவி ஷாலினி மற்றும் மச்சான் ரிச்சர்ட் ஆகியோருடன் உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்த இடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர் சோ ராமசாமி மரணச் செய்தி கேட்டதும், அவரது உடலை பார்க்க அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.

‘அம்மா’ ஜெயலலிதாவுக்காக சென்னை திரும்பிய அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கத்தில் தல 57 படப்பிடிப்பில் அஜித் நடித்து வருகிறார்.

இதன் சூட்டிங் கடந்த சில நாட்களாகவே பல்கேரியா நாட்டில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்கட்கிழமை இரவு சுமார் 11.30 மணிக்கு காலமானார் என்பதை அஜித் அறிந்துள்ளார்.

இதனால் மிகவும் வருந்நிய அவர் நிச்சயம் நேரில் அஞ்சலி செலுத்தியாக வேண்டும் என்று சென்னைக்கு புறப்பட்டுள்ளார்.

ஆனால் இறுதிச் சடங்கு மாலை 6 மணிக்குள் முடிந்துவிடும் என்று தெரியப்படுத்துவதற்குள், ப்ளைட்டில் ஏறிவிட்டாராம் அஜித்.

அதற்குள் இங்கே ஜெயலலிதாவின் இறுதிச் சடங்குகள் முடிந்துவிட்டது.

தற்போது தமிழகம் திரும்பியிருக்கும் அஜித், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அஜித் வெளியிட்ட இரங்கல் கடிதம் இதோ…

அம்மாவுக்கு அஞ்சலி: உங்கள் ஹீரோவை போன்ற ‘போராளி’யின் குரல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கண்ணீரில் தவிக்கிறோம்.

அம்மாவின் தன்னம்பிக்கை ஆளுமை,
வாழ்வை வெற்றிகான என்னும் ஒவ்வொருத்தனுக்கும்
ஓர் உதாரணம்.

தந்தை இழப்பு இரு வயதில்.
தாயின் இழப்பு இருபது வயதில்.
பின் சகோதரனின் இழப்பு.

எல்லாரையும் இழந்த பின்பும்,
எல்லோரையும் பெற்றார்.
மரண ஊர்வலத்தின்
மனித கூட்டம்,
வாழ்ந்த வாழ்க்கையின் சாட்சி்.

டீ கடையை வைத்து,
உண்மையாய் உழைத்த கட்சிகாரனையும், அமைச்சராக்கி வாழ்வித்தவர்.

இன்றைய அதிமுகவின்
பல கவுன்ஸிலர்கள், எம்.எல்.ஏக்கள்,
அமைச்சரகளின்
நேற்றைய வரலாற்றை, தெருவோரங்களில்தான் தேட முடியும்.

அம்மா என்ற
ஒற்றை வார்த்தையால் வாழ்வை வென்றவர்கள் இவர்கள்.
வேறு எந்த கட்சியிலும்
இன்று இது சாத்தியமில்லை.

யாரையம் நம்பி
என் வாழ்வோ, செயலோ,
வெற்றியோ இல்லை என்று
வாழ்ந்து காட்டியவர்.

அது ஆட்சியானாலும் சரி,
வழக்கானாலும் சரி
முடிவெடுத்து விட்டால்,
கடைசி நுனிவரை போராடி பார்த்தவர்.

அவரின் வெற்றியை மட்டுமே
உலகம் பார்க்க அனுமதித்தார்.
மரணத்திலும் அப்படியே.

அவரின்
ஒவ்வொரு போராட்டத்தின் நுணுக்கம், வழி
யாவும் அவர் மட்டுமே அறிந்தது.

வாழ நினைக்கும்,
வெல்ல நினைக்கும் எவருக்கும்
இவர் ஓர் ஆதர்சன உதாரணம்.

எவருமேயின்றி
வெல்ல துடிக்கும்
மனிதர்களில் ஒருவனின் மன அஞ்சலி இது.

கண்ணீர்களின்றி….
மற்றுமொரு போராளி…

‘பார்க்க தோணுதே’ ஹீரோவுக்கு செல்போனால் பிரச்சினை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வாசவி பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக வி.கே.மாதவன் தயாரித்துள்ள படம் “பார்க்க தோணுதே“

ஜெய் செந்தில்குமார் இயக்கியுள்ள இப்படத்திற்கு மணீஷ் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை ஜி ரமேஷ் கவனிக்க, படத்தொகுப்பை லெனின் சந்திரசேகர் செய்துள்ளார்.

இதில் அர்ஷா மற்றும் சாரா ஜோடியாக நடிக்கின்றனர். இவர்களுடன் அமர், பாண்டு, உசிலம்பட்டி கார்த்தி, வெளுத்துக்கட்டு அப்பு, பாத்திமா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படம் குறித்து, படக்குழுவினர் கூறியதாவது…

கிராமத்து பின்னணியில் நடக்கும் திரில்லர் கதையை காமெடியுடன் தெரிவித்துள்ளோம்.

எங்கள் பட நாயகனுக்கு எதிர்பாராத விதமாக கீழே கிடந்த ஒரு செல்போன் கிடைகிறது.

அதன்பின்னர் அவருக்கு பிரச்சினை மேல் பிரச்சினை வருகிறது.

அதிலிருந்து எப்படி தன்னை காப்பாற்றிக் கொண்டான் என்பதுதான் இதன் திரைக்கதை என்றனர்.

இதன் படப்பிடிப்பு கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும், ஏற்காடு போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.

எம்ஜிஆர் சமாதி அருகே ஜெயலலிதா நினைவிடம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை மோசமானதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று (டிசம்பர் 5ஆம் தேதி) நள்ளிரவு 11.30 மணிக்கு அவரது பிரிந்தது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் கல்லறைக்கு அருகாமையிலேயே புதைக்கப்படவிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

அங்கு அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

ஜெயலலிதாவின் மறைவை கேட்ட கட்சித் தொண்டர்கள் தற்போது சென்னையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

இதனால் அனைத்து வாகனங்களும் டோல் பிளாசாவை கடந்து செல்ல இலவச ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Jayalalitha funeral at MGR memorial at Marina beach

‘இந்தியாவே வீரப்புதல்வியை இழந்து தவிக்கிறது..’ ஜெயலலிதாவுக்கு ரஜினி இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று டிசம்பர் 5, 2016 நள்ளிரவு 11.30 மணிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்.

இதனையறிந்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், முக ஸ்டாலின், கனிமொழி, விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் தொண்டர்களை வரை தங்களை இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

சிறந்த இரும்பு பெண்மணியை இழந்த விட்டதாக பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தன் இரங்கலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது…

“தமிழ்நாடு மட்டுமல்ல… இந்திய நாடே தன்னுடைய வீரப்புதல்வியை இழந்து தவிக்கிறது. மரியாதைக்குரிய நம் முதல்வரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்..” என்று பதிவிட்டுள்ளார்.

rajinikanth Condolence to chief minister jayalalithaa

More Articles
Follows