தீபாவளிக்கு தளபதியுடன் தல ரசிகர் மோதல்; பொங்கலுக்கு அஜித்துடன் விஜய் ரசிகர் மோதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாளை தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் நாளை வெளியாகிறது.

இதற்கு போட்டியாக அஜித் ரசிகராக ஆர்.கே. சுரேஷ் நடித்துள்ள பில்லா பாண்டி திரைப்படமும் வெளியாகிறது.

இத்துடன் விமல் நடித்துள்ள களவாணி மாப்பிள்ளை படமும் வெளியாகிறது.

அடுத்த வருடம் 2019 பொங்கல் தினத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் வெளியாகிறது.

அதற்கு போட்டியாக விஜய்யின் தீவிர ரசிகரான ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள வாட்ச்மேன் திரைப்படம் வெளியாகும் என இன்று அறிவித்துள்ளனர்.

இன்று காலை இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். மாலை டீசர் வெளியாகவுள்ளது.

விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடித்துள்ளார்.

கடவுளின் குழந்தை என ரஜினி பாராட்டிய ஏஆர். ரஹ்மான் தற்கொலைக்கு முயன்றது ஏன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மையில் நடைபெற்ற 2.0 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் அப்படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானை கடவுளின் குழந்தை என பாராட்டினார் ரஜினிகாந்த்.

இரண்டு ஆஸ்கர் விருதுகளை ஒரே நேரத்தில் வென்று சாதித்த ஏஆர். ரஹ்மான் அவர்கள் தன் வாழ்க்கையில் 25வது வயதில் தற்கொலைக்கு முயன்றாராம். அது பற்றிய விவரம் வருமாறு….

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை என்றால் ஒரு புத்துணர்ச்சி, ஒரு உத்வேகம், ஒரு ஊக்கம். இப்படிப்பட்ட‌ இசையையும் தந்து, இனிமேல் ஏதேனும் வேண்டுமா என்றளவுக்கு வெற்றிகளையும் குவித்து உச்சத்தில் இருக்கும் ஏ.ஆர். ரஹ்மானுக்கும், வாழ்க்கையில் ஒரு இருண்ட காலம் இருந்திருக்கிறது.

“எனது 25வது வயது வரை தற்கொலை செய்வது பற்றி அடிக்கடி சிந்தித்திருக்கிறேன்.

என்னால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை அப்போது இருந்ததில்லை. என் தந்தை இறந்ததும், வேறு சில நிகழ்வுகளும், ஒரு வெறுமை நிலைக்கு என்னை அழைத்துச் சென்றது.

ஆனால், அந்த தருணங்கள், ஒருவகையில் என் அச்சத்தை போக்கின. நான் வேறு ஒருவனாக மாற வேண்டும் என விரும்பினேன்.” என்று Notes of a Dream என்ற தனது சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் மனம் திறந்தார் ஏ.ஆர். இந்த புத்தகத்தை எழுத்தாளர் கிருஷ்ணா திரிலோக் எழுதியுள்ளார்.

மேலும், ” நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ள முதலில், உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்ய வேண்டும். உங்கள் உள் மனம் சொல்வதை ஆழ்ந்து கவனிக்க வேண்டும். அது கொஞ்சம் கடினமான விஷயம். எனக்கு என் அசல் பெயரான திலிப் குமார் என்ற பெயர் பிடிக்கவில்லை…

ஏன் அந்தப் பெயரை வெறுத்தேன் என்றும் எனக்குத் தெரியவில்லை.என் ஆளுமைக்கு அந்தப் பெயர் சரிப்பட்டு வரவில்லை என்பதை உணர்ந்தேன்…

நான் வேறொருவனாக மாற ஆசைப்பட்டேன், அந்தப் பெயர் என் முழு இருப்பையும் விளக்குவதாக அமைய வேண்டும் என்று நினைத்தேன்.

கடந்தகாலச் சுமைகளை இறக்கி விட்டு வர விரும்பினேன். பெயர் உட்பட.

நீங்கள் யார் என்பதை தோன்றச் செய்து அதனை வெளியே விட வேண்டும்.

ஆகவே உங்கள் மன ஓவியப் புத்தகத்தில் நீங்கல் கருத்துச் சித்திரம் வரையும் போது உங்களைப் பற்றி நிறைய சுயபரிசீலனைகள் தேவை.

உங்களில் நீங்கள் ஆழமாக இறங்கிச் செல்ல வேண்டிய தேவை உள்ளது. உங்கள் அகத்தின் குரலை நீங்கள் கேட்க வேண்டும், அது கடினமானது.

ஒருமுறை இதைச் செய்துவிட்டால் நாம் தொலைந்து போய் நம்மையே மறந்து விடுவோம்.

நான் என்னுள் ஆழமாக இறங்கும் போது கதவு தட்டப்படும் சத்தம் கேட்கும், நான் எதார்த்தத்துக்கு திரும்புவேன், ஆனால் நான் மீண்டும் என்னுள் ஆழமாகச் செல்ல முடியாமல் போகும்.

அதனால்தான் நான் அதிகாலை 5 அல்லது 6 மணி அல்லது நள்ளிரவுகளில் பணியாற்றுகிறேன். செய்ததையே செய்து கொண்டிருந்தால் சோர்வே ஏற்படும். பல்வேறு விஷயங்களை நாம் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை பயணம் செய்வது, அதிக நேரம் செலவழிக்க முடியாவிட்டாலும் என் குடும்பத்துடன் நேரத்தைச் செலவழிப்பது அழகானது, எனக்கு அது மிகவும் உதவுகிறது” …என்று சொல்லி இருக்கிறார்.

®Notes of a Dream: The Authorized Biography of AR Rahman”

Music composer AR Rahman contemplated suicide till he was 25

மொபைல் ஆப்-பில் படத்தை ரிலீஸ் செய்யும் ட்ரீம் சினிமாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படம் எடுத்து அதை வெளியிட்டு போட்ட பணத்தை எடுப்பதற்குள் தயாரிப்பாளர்களின் நிலைமை அதோகதிதான்.

அதற்கான புதிய முயற்சிதான் இந்த Dream Cinemas செயலி, இந்த டிஜிட்டல் யுகத்தில் இனி மொபைல் தான் எல்லாம் என்பதை கருத்தில் கொண்டு நல்ல திரைப்படங்களை அவர்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் விதமாக இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பதிவு செய்பவர்களுக்கு இலவசமாக பிராண்டட் சட்டை தரப்படுகிறது.

இந்த செயலியின் முதல் திரைப்படமாக தக்கர் திரைப்படம் தீபாவளி அன்று வெளியிடப்படுகிறது. மேலும் இந்த செயலியில் மாத சந்தா குறைவு என்பதால் திரையரங்கிற்கு சென்று செலவு செய்யும் செலவு கம்மி என்கிறார்கள்.

இந்த Dream Cinemas செயலி ஆண்ட்ராய்டு மொபைல்களில் இப்பொழுது கிடைக்கிறது வெகு விரைவில் IOS லும் கிடைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இதன் மூலம் குறைந்த செலவில் படம் எடுத்து திரையரங்கில் வெளியிட முடியாமல் இருக்கும் தயாரிப்பாளர்கள் இந்த செயலியை பயன்படுத்தி தங்கள் படத்தை வெளியிட்டு தாங்கள் போட்ட பணத்தையும் எடுத்துவிடலாம் என்கிறது Dream Cinemas நிறுவனம்.

மேலும் Dream Cinemas Appஐ டவுன்லோட் செய்து Subscribe செய்வதன் மூலம் 499 மதிப்புள்ள பிராண்டட் சட்டையை இலவசமாக பெறுங்கள்.

Dream Cinemas plans to release their movies in Mobile App

App Download செய்ய இந்த linkஐ க்ளிக் செய்யவும்

https://play.google.com/store/apps/details?id=com.dreamcinemas.app

பிள்ளைன்னா தேஜஸ் போல இருக்கனும்.; குட்டீஸ்-க்கு ஜோதிகா அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜோதிகா நடித்துள்ள காற்றின் மொழி திரைப்படம் நவம்பர் 16ஆம் தேதி வெMளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது ஜோதிகா பேசியதாவது…

ரீமேக் படத்தில் நடிப்பது எப்போதும் சவாலாகத் தான் இருக்கும். ஆனால் அந்த படத்தை பார்த்ததே கிடையாது. கதையோடு சேர்ந்து பயணித்து நடித்தேன். ஆனால் இப்படம் ஒரிஜினல் படத்தை போல இருக்காது.

‘மொழி’ படம் வெளியாகி 10 வருடங்கள் ஆகிறது. 10 வருட இடைவெளிக்குப் பிறகு ராதாமோகனுடன் சேர்ந்து பணியாற்றுவதில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை.

அதே நேர்மறையான உணர்வு. அந்தப் படத்தில் நடித்த முதல் காட்சி போலவே இந்த படத்திலும் முதல் காட்சியும் நீளமாக அமைந்தது. முக்கியமான காட்சிகள் அனைத்தும் ஒரு மணி நேரத்திலேயே முடிந்தது.

லட்சுமி மஞ்சு கூறியது போலவே, இந்த படத்தில் நடித்த அனுபவமே இல்லை. கமல் நடிக்கும்போது தான் மெய்மறந்து பார்த்துக் கொண்டிருப்பேன். அதேபோல எம்.எஸ்.பாஸ்கரையும் வியந்து பார்த்தேன். ஒரே ‘டேக்’கில் நடித்துவிடுவார். கிளிசரின் இல்லாமலே அழுவார்.

விதார்த் எனக்குப் போட்டியாக சிறப்பாக நடித்திருக்கிறார். மனோபாலாவுடன் நடிக்கும் காட்சிகளில் சிரித்து சிரித்து வயிறு வலியே எடுத்தது. குமரவேல் மிகவும் இயல்பாக நடிப்பார்.

தேஜஸ் உடனான காட்சிகளில் மிகவும் ரசித்து நடித்தேன். குழந்தைகள் என்றாலே மொபைல் போனில் விளையாடுவார்கள். ஆனால் தேஜஸ் ஒருமுறை கூட விளையாடி நான் பார்த்ததே இல்லை.

எல்லோருடனும் பேசிக் கொண்டிருப்பான். பிறந்த நாள் என்றாலே SMS மூலம் வாழ்த்து தெரிவிக்கும் இந்த காலத்தில், எல்லோருடனும் இணைந்து பேசுவான்.

இவனைப் பார்த்த பிறகு என் பிள்ளைகளுக்கும் இவற்றை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது.

என் அம்மாவும், நான் அம்மாவாக அழைக்கும் என் மாமியாரையும் தான் நான் மாதிரியாக கருதுவேன். என் மாமா சிவகுமார் என்னுடைய எல்லா படங்களையும் திரை அரங்கத்திற்கு சென்று தான் பார்ப்பார். நான் நடித்த எல்லா படங்களுமே அவருக்கு பிடிக்கும்.

இப்படத்தில் கணவன், மனைவி உறவு அருமையாக அமைந்திருக்கிறது. இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

சூர்யா, அஜித் மற்றும் மாதவன் இவர்களுக்கு பிறகு விதார்த்துடன் நடித்தது சுலபமாக, இருந்தது.

இசையமைப்பாளர் A.H.காஷிப் பேசும்போது

சுமார் நான்கு வருட போராட்டத்திற்கு பிறகு இப்போது தான் இந்தத் துறைக்கு வந்துள்ளேன். தனி ஆல்பம் மூலம் பிரபலமானேன். அதைக் கேட்டுத்தான் இந்த வாய்ப்பை தனஞ்செயன் கொடுத்தார். பின்னணி இசை சில நாட்களுக்கு முன்பு தான் முடிந்தது. இப்படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் நன்றாக வந்திருக்கிறது.

இயக்குநர் ராதாமோகன் பேசும்போது:-

‘காற்றின் மொழி’ படம் குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படமாக இருக்கும். இந்தப் படத்தில் என்னுடைய வேலையை அனைவரும் சுலபமாக்கிக் கொடுத்தார்கள்.

அனைவரும் அவர்களுடைய முதல் படத்தில் நடித்தது போல நடித்துக் கொடுத்தார்கள். இப்படத்திற்கு A.H.காஷிப் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இவர் ஏ.ஆர்.ரகுமான் குடும்பத்தில் இருந்து வந்தவர். பார்த்திபன் நன்றாக வசனம் எழுதியிருக்கிறார்.

My kids must learn from Tejas says Jyothika in Kaatrin Mozhi press meet

இருட்டில் சுந்தர் சி.யுடன் இணைந்த ஷாக்ஷி பர்விந்தர்-தன்ஷிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இருட்டு என்ற படத்தை இயக்குகிறார் இயக்குனர் VZ துரை. அவர் இப்படத்தைப் பற்றி கூறியதாவது :-

‘இருட்டு’, ஏற்கனவே வெளியான பேய் படம், திகில், த்ரில்லர் போன்றில்லாமல் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். அதாவது கற்பனையாக நமது நிஜ வாழ்வில் ஒரு பேயோ, பிசாசோ இருந்தால் எப்படி இருக்கும் என்பது பற்றி வந்திருக்கும். அல்லது யாரோ ஒருவரால் கொல்லப்பட்டு, இன்னொருவரின் உடம்பில் புகுந்து தன்னைக் கொன்றவர்களை பழி வாங்கும்படியாக அமைந்திருக்கும்.

ஆனால், இப்படம் முற்றிலும் வித்தியாசமாக இதுவரை வந்த எந்த கதையம்சங்களோடும் ஒப்பிட்டு பார்க்க முடியாத வகையில் இருக்கும்.

மேலும், வித்தியாசமான கதை என்றில்லாமல் வித்தியாசமான கருத்தைத் தாங்கி கொண்டு வரவிருப்பதால் இப்படத்தைப் பார்ப்பவர்களுக்கு அவரவர் தங்கள் நிஜ வாழ்க்கையோடு தொடர்பு ஏற்படுத்தியோ, ஒப்பீடு செய்தோ பார்க்கும் வகையில் இருக்கும்.

பேய் இருக்கிறதா? இல்லையா? என்றொரு விவாதம் நடந்துக் கொண்டிருந்தாலும், அதைவிட பயங்கரமான சம்பவங்கள் நடந்திருக்கிறது என்று ஒரு சாரரும், அது எப்படி நடந்திருக்க முடியும்? என்று ஒரு சாரரும் விவாதம் நடத்தும் அளவிற்கு இப்படமாக இருப்பதே இதன் சிறப்பம்சம்.

வித்தியாசமான படம் தோன்றிய விதத்தைப் பற்றிக் கூறும்போது

முதலில் நானும் சுந்தர்.சி-யும் ஒரு படம் எடுக்கலாம் என்று முடிவு செய்தவுடனேயே சுந்தர்.சி. நீங்கள் ஒரு திகில் படம் தான் இயக்க வேண்டும் என்று கூறினார்.

ஆனால், எனக்கு அது ஒரு பெரிய பிரச்னையாக இருந்தது. ஏனென்றால், எனக்கு திகில் படம் என்றால் பயம். ஆகையால் நான் இதுவரை ஒரு பேய் படம் கூட பார்த்தது கிடையாது. இருப்பினும், சுந்தர்.சி. உங்களுக்கு இயக்கும் திறமை நன்றாக இருக்கிறது.

நீங்கள் திகில் படம் இயக்கினால் நிச்சயம் வெற்றிபெறும் என்று ஊக்கப்படுத்தினார். அவர் கொடுத்த ஊக்கத்தினால் தான் நான் ‘இருட்டு’ இயக்க சம்மதித்தேன்.

அதன்பிறகு, எல்லா நாடுகளிலும், எல்லா மொழிகளிலும் உள்ள நிறைய பேய் படங்கள் பார்க்க ஆரம்பித்தேன். அனைத்துப் படங்களுமே மக்களை சந்தோஷப்படுத்தும் வகையில்தான் எடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், இதிலிருந்து சற்று வித்தியாசமாகவும், முற்றிலும் வேறுபாடு உள்ளதாகவும் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதன் காரணமாக யோசிக்கும்போதுதான் இப்படத்தின் கருத்து உதித்தது. அந்தக் கருத்து எல்லோருடைய வாழ்விலும் ஒன்றி போகும் விதமாகவும் இருக்கவே, சுந்தர்.சி-யிடம் கூறினேன்.

அவருக்கும் மிகவும் பிடித்து போகவே, ரொம்ப நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார். அதன்பின் படப்பிடிப்பை ஆரம்பித்தோம்.

சுந்தர்.சி இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக வருகிறார். இயக்குநராக இருந்தாலும், இப்படத்தின் கதாபாத்திரத்திற்கேற்ப தன்னுடைய நடை, உடை, உடல்மொழி அனைத்தையும் மாற்றிக் கொள்ள பயிற்சி மேற்கொண்டார்.

இவருடைய மனைவியாக ஷாக்ஷி பர்விந்தர் நடிக்கிறார். தன்ஷிகா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தனது சினிமா வாழ்க்கையிலே இப்படமும், இப்படத்தில் வரும் தனது கதாபாத்திரமும் யாராலும் மறக்க முடியாததாக அமையும் என்றும் கூறியிருக்கிறார்.

முழுக்க முழுக்க திகில் படம் என்றாலும் நகைச்சுவையைத் தாண்டி முக்கிய கதாபாத்திரத்தில் யோகிபாபுவும், VTV கணேஷும் பயணிப்பார்கள்.

படத்தின் பெரும்பங்கு காட்சிகள் ஊட்டியில் படபிடிப்பு முடிந்த நிலையில், தன்ஷிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் சூரத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சில காட்சிகளே மீதம் உள்ளது. அதையும் ஊட்டியிலேயே படமாக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

இப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள்: இசை – கிரிஷ் கோபாலகிருஷ்ணன், ஒளிப்பதிவு – E.கிருஷ்ணசாமி, படத்தொகுப்பு – R.சுதர்சன், வசனம் – இந்திரா சௌந்திரராஜன், கலை – A.K.முத்து, புகைப்படம் – சாரதி, வடிவம் – PK விருமாண்டி மற்றும் நிர்வாக தயாரிப்பு – APV மாறன்.

இவ்வாறு ‘இருட்டு’ படத்தைப் பற்றி இயக்குநர் துரை VZ கூறினார்.

Dhanshika and Sakshi Parvinder team up with Sundar C for Iruttu

பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்திய ஜிப்ரானுக்கு *தாதா 87* பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “தாதா 87”.

சிறு குழுந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி எடுக்கப்படும் இப்படத்தின் தொடக்கத்தில் “பெண்களை அனுமதியின்றி தொடுவது சட்டப்படி குற்றமாகும்” என்ற வாசகத்தை தணிக்கை குழுவினர் சேர்க்க அனுமதியளிக்க வேண்டும் என்று தாதா 87 படக்குழுவினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் திரு இயக்கத்தில் உருவான “மோதி விளையாடு பாப்பா” எனும் குறும்படத்தில் நடித்திருந்தார்.

இப்படம் குழந்தைகளிடையே பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வைத் தூண்டும் விதமாக எடுக்கப்பட்டிருந்தது.

இந்த குறும்படத்தை எடுத்த படக்குழுவினரை தாதா 87 படக்குழு வெகுவாக பாராட்டினர்.

தற்போது இசையமைப்பாளர் ஜிப்ரான் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை சித்தரிக்கும் பாடலை உருவாக்கியுள்ளார். இப்பாடலை அவரே இசையமைத்து இயக்கியுள்ளார்.

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கான பாதுகாப்பை முன்னிருத்தும் பாடலை உருவாக்கிய இசையமைப்பாளர் ஜிப்ரான் அவர்களுக்கு தாதா 87 படக்குழு தனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டது.

DhaDha 87 team praises Sivakarthikeyan and Ghibran

More Articles
Follows