தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்தவர் சரஸ்வதி. இவருக்கு தற்போது 72 வயதாகிறது.
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் இருந்து தமிழகம் வந்துள்ளார்.
சரஸ்வதிக்கு, திருமணம் ஆகி மூன்று மகன்கள் உள்ளனர்.
இவரின் கணவர் இறந்துவிட்டதால் கடந்த 15 ஆண்டுகளாக மோகனூரில் உள்ள வாடகை வீட்டில் தனிமையில் வசித்து வருகிறார்.
தற்போது மகன்களின் முழுமையான உதவி இல்லாமல் வறுமையில் வாடி வருகிறார் சரஸ்வதி.
இந்த சூழலில் மூத்த பேரன் சதீஷ்குமார் பாட்டியை பார்க்க வந்துள்ளார்.
அப்போது நடிகர் விஜய்யிடம் உதவி கேட்டு பாட்டி எழுதிய கடிதம் அவரது கண்ணில் பட்டிருக்கிறது.
3 ஆண்டுகளுக்கு முன்பு, தான் எழுதிய கடிதத்தை விஜய்யின் முகவரி தெரியாததால் இன்று வரை அனுப்பாமல் தன்னிடமே பத்திரமாக வைத்திருக்கிறாராம் சரஸ்வதி.
இவரது பேரன் அந்த கடிதத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
நடிகர் விஜய்க்கு சரஸ்வதி எழுதிய இந்த கடிதம் இணையதளத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
இந்த கடிதம், விஜய் கவனத்திற்கு போகுமா.? என்பதை காத்திருந்து பார்ப்போம்.
Aged woman writes a letter to Beast actor Vijay