காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தமிழக அரசு ராஜினாமா செய்யனும்…: கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காவிரி மேலாண்மைவாரியத்திற்காக தமிழக அரசு ராஜினாமா செய்ய முன்வர வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நாளை நடைபெற உள்ள ஒரு சினிமா நிகழ்ச்சிக்காக மும்பை செல்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.

அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் பேசியதாவது… காவிரி மேலாண்மை வாரியம் கோரி அ.தி.மு.க ஏப்ரல் 2ஆம் தேதி உண்ணாவிரதம் அறிவித்திருப்பது தாமதமான முடிவு என்று கூறினார்.

மேலும் காவிரி நீரைப் பெறுவதற்காக தமிழக எம்.பிக்கள் தியாகம் செய்ய வேண்டும்.

மேலும் அந்த தியாகம் தமிழக அரசில் இருந்து தொடங்க வேண்டும்” எனவும் கமல் பேசினார்.

ADMK Govt must resign for Cauvery Management Board issue says Kamal

சீனுராமசாமி கொடுத்த மக்கள் அன்பன் பட்டத்தை மறுத்தார் உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதயநிதி மற்றும் தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள ‘கண்ணே கலைமானே’ என்ற படத்தை இயக்கியுள்ளார் சீனு ராமசாமி.

வைரமுத்து பாடல்கள் எழுத, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

மதுரை மற்றும் வாடிப்பட்டி பகுதியின் வாழ்க்கை முறைகளை பின்னணியாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் “கண்ணே கலைமானே படம் முழுவதும் பார்த்து முடித்த கணத்தில், என் மனதில் உதயநிதி ஸ்டாலினை ‘மக்கள் அன்பன்’ என்றே அழைக்கத் தோன்றியது” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சீனு ராமசாமி.

இதற்கு பதிலளித்துள்ள உதயநிதி ஸ்டாலின், “உங்கள் அன்புக்கு நன்றி சார். அந்த அளவிற்குத் தகுதி எனக்கு இப்பொழுது இருப்பதாக நான் நம்பவில்லை. படம் வெற்றி பெற்றால் மகிழ்ச்சி” எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே விஜய்சேதுபதிக்கு ‘மக்கள் செல்வன்’ என்ற பட்டத்தைக் கொடுத்திருந்தார் சீனு ராமசாமி என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

அந்த பட்டத்தை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன் என விஜய்சேதுபதி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Udhayanidhi refuses Makkal Anban title given by Seenu Ramasamy

ரஜினிக்கும் சல்மான்கானுக்கும் இருக்கும் ஒற்றுமைகள்…: பிரபுதேவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பல அவதாரங்களை எடுத்த பிரபுதேவா தற்போது தயாரிப்பாளராகவும் பிஸியாகிவிட்டார்.

கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலமான இவர் சல்மான்கான் நடிப்பில் வெளியான ‘வான்டட்’ படத்தை இயக்கியிருந்தார்.

தற்போது ‘தபாங்3’ படத்திற்காக மீண்டும் சல்மான்கானை இயக்கவிருக்கிறார்.

மீண்டும சல்மான்கானுடன் பணியாற்றுவது குறித்து அவர் பேசியதாவது..

முதலில் நாங்கள் வேலை பார்த்த போது அவ்வளவாக பேசியது இல்லை. பின்னர் பேச ஆரம்பித்தோம். இப்போது நல்ல நண்பர்களாக ஆகிவிட்டோம்.

அவரைப் போன்று திரை உலகில் உண்மையாக இருப்பவர்களை பார்ப்பது அரிது.
அவர் அன்பானவர். கடின உழைப்பாளி. பல வி‌ஷயங்களில் ரஜினி சார் போன்றவர்.

அவர்கள் இருவருக்கும் தனி தனி ஸ்டைல் உள்ளது. யாரையும் கவர வேண்டும் என முயற்சிக்கமாட்டார்.

ஆனால் பார்ப்பவர்களுக்கு பிடித்து போகும்.” என்று பேசினார்.

Rajini and Salman Khan have same characters says Prabu Deva.jpg

மன்னிச்சுடுங்க கார்த்திக் நரேன்; நான் விலகி விடவா?.: கௌதம் மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில தினங்களாக முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கௌதம் மேனன் மற்றும் இளம் இயக்குனர் கார்த்திக் நரேனுக்கும் மோதல் கருத்துக்கள் இருந்து வருகிறது.

தான் இயக்கிய நரகாசூரன் படத்தை தயாரித்த கெளதம் மேனன் தன்னை ஏமாற்றி விட்டதாக ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த மோதல் குறித்து வெளிப்படையாக கௌதம் மேனன் கருத்து தெரிவித்துள்ளார்.

என்னை பற்றி கார்த்திக் நரேன் அப்படி ட்வீட் செய்துவிட்டதால், நான் அப்செட் ஆகிவிட்டேன். அதனால் தான் பதில் டுவீட் ஒன்றை பதிவு செய்தேன்.

நான் அவ்வாறு செய்திருக்கக் கூடாது. எனவே நான் கார்த்திக் நரேனிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

நரகாசூரன் திரைக்கதை விஷயத்தில் நான் தலையிட்டதே கிடையாது. அதுமட்டுமின்றி அவர் கேட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்குமாறு நான் முதலீட்டாளர்களிடம் கூறினேன்.

அவருக்கு முழு சுதந்திரம் அளித்தேன். அவர் கேட்ட நடிகர்களை அதிகம் சம்பளம் கொடுத்து நடிக்க வைத்தோம். இந்த படத்தின் டீஸர், ட்ரெய்லர் எல்லாமே அவருடைய உழைப்புதான்.

பின்னணி இசையை மேசிடோனியாவில் உருவாக்கினார் கார்த்திக். அதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த படத்திற்காக நிறைய செலவு செய்துள்ளோம்.

துருவ நட்சத்திரம் போன்ற பெரிய படத்திற்கு நிதியை திருப்பிவிடும் அளவுக்கு இந்த படத்தின் பிசினஸ் பெரியது அல்ல.
நரகாசூரன் லாபத்தில் 50 சதவீதம் நான் கேட்கவில்லை. படத்தில் எனக்கு பங்கு இல்லை என்று தெரியும்.

நான் படத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கார்த்திக் விரும்பினால் நான் மகிழ்ச்சியுடன் வெளியேற தயார்.

ஒரு வேளை நான் வெளியேறிவிட்டால் அந்த படம் என் பொறுப்பு அல்ல. சினிமா மார்க்கெட் தற்போது எப்படி உள்ளது என்பதை தெரியாமலும், சிலர் பேச்சை கேட்டும் நரேனுற்கு கோபம் வந்துள்ளது என நினைக்கின்றேன்” என தெரிவித்துள்ளார் கௌதம்.

Gautham Menon apologises to Karthick Naren

மீண்டும் ஜிவி.பிரகாஷுடன் இணையும் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் விஜய் இயக்கிய முதல் படம் ‘கிரீடம்’.

அஜித், த்ரிஷா ஜோடியாக நடித்திருந்த இப்படத்திற்கு இசையமைத்திருந்தார் ஜி.வி.பிரகாஷ்.

இதனையடுத்து பல படங்களில் விஜய்யுடன் இணைந்திருந்தார் ஜிவி.பிரகாஷ்.

தற்போது ஜிவி பிரகாஷ் நடிகராக பிசியாகிவிட்டதால் அண்மைக்காலமாக விஜய் இயக்கிய படங்களுக்கு அவர் இசையமைக்கவில்லை.

தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது.

விஜய் அடுத்து இயக்கவுள்ள படத்தின் நாயகனாக ஜிவி பிரகாஷ் நடிக்கிறார்.

இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என கூறப்படுகிறது.

Actor GV Prakash teams up with Director Vijay

விஜய்யின் 63வது படத்தை வெற்றிமாறன் இயக்குகிறாரா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் தன் 62வது படத்தில் நடித்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைக்க, கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது சினிமா ஸ்டிரைக் காரணமாக எல்லா பணிகளும் நிறுத்து வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையில் விஜய்யின் 63வது படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது.

நம் தளத்தில் அப்படியொரு செய்தியை பதிவிடவில்லை.

இதுகுறித்து விசாரித்த போது, விஜய் தன் படத்தை முடிவு செய்யவில்லை என்றும் அப்புறம் எப்படி வெற்றிமாறன் இயக்குவார்? என்ற செய்தி வெளியாகும் என தெரிவித்தனர்.

More Articles
Follows