தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
சிந்தித்தேன் எழுதுகிறேன்…
தலைப்பே சும்மா அதிருதில்ல அப்படின்னு நினைக்கும்போதே பக்கத்துல இருந்து ஒரு குரல் எல்லாரும் சிந்திச்சுதான் எழுதுவார்கள் அப்படின்னு சொல்ல..
ஆமால்ல மொக்க வாங்கிட்டோமே அப்படின்னு தோணிச்சு. சரி விஷயத்துக்கு வருவோம். அது இதுன்னு எந்த வரைமுறையும் இல்லை.
சம கால நிகழ்வுகள், மனிதர்கள், சினிமா, அரசியல் உள்ளிட்ட அனைத்து துறைகள் சார்ந்த ஒரு அலசல்.
சரி முதல் பதிவு எதைப் பத்தி எழுதலாம்னு சிந்திக்கும்போதே (அப்பாடி தலைப்பை justify பண்ணியாச்சு) எல்லா மீடியாலயும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் கல்யாணம்தான் ஹைலைட்… தமிழ் கூறு நல்லுலகம் நம்மள கைவிடாதுங்கற நம்பிக்கையோட ஆரம்பிக்கிறேன்.
சரி நயன்தாரா பேருக்கு என்ன அர்த்தம்ன்னு கூகுள் ஆண்டவர்கிட்ட search பண்ணினால் 2 மீனிங் அந்தம்மாவுக்கு எப்படி சூட் ஆகுது பாருங்க… ஒண்ணு அழகிய தேவதை இன்னொன்னு a light for one’s life…
மொதல் விஷயம் தெரிஞ்சது தான் ரெண்டாவது விஷயம் ஒருவரது வாழ்க்கையில் வெளிச்சம் கொடுப்பவர் அவருக்கு பொருந்துதா என்பதை விரிவாக பார்ப்போம்..
நயன்தாராவுக்கு சொந்த ஊர் கேரளா மாநிலம் திருவல்லா… இந்திராகாந்தியின் பிறந்த தேதியை ஒட்டி பிறந்தவர் நயன் (நவம்பர் 18.)
திருப்பதியில் விதிகளை மீறிய புதுமண தம்பதி நயன்தாரா – விக்னேஷ்சிவன்
அப்ப மனவலிமையும், மனிதத்தன்மையும் கலந்துதானே இருக்கும். அது ரெண்டும் தான் நயன்தாராவை வாழ்க்கை பூரா வழிநடத்துது.
நாம இவங்கள பத்தி பேசுறதுக்கு காரணம் சினிமா நடிகைன்றதால மட்டுமில்ல. தன் வாழ்வின் முக்கிய தருணங்களில் மிக திடமாக முடிவெடுத்து வெற்றி கண்டவர்.
மிக மென்மையான மனதுக்கு சொந்தக்காரர்… எளிதில் உணர்ச்சிவசப்பட கூடியவர் காதல் வயப்படுதல் உட்பட….
முதல் காதல் சிம்புவுடன் சரியான வயதில்… நயன்தாரா சிம்பு மீது உயிரையே வைத்திருந்தார். ‘வல்லவன்’ படத்துக்கு அவர் கொடுத்த முழுமையான ஒத்துழைப்பே அவர் சிம்பு மீது வைத்திருந்த காதலுக்கு சாட்சி.
ஆனால் இவர்களின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியானதும் நொருங்கிவிட்டார். சிம்பு மேல் எழுந்த சந்தேகம் அந்த காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
ஆனால் காதலியாக இருந்தவரை சிம்பு தன் திரை வாழ்வில் உயர்வதற்கு தனது பங்களிப்பை ஒரு காதலியாக நேர்மையாக கொடுத்தார். அவர் வாழ்விற்கு ஒளியாக இருப்பதற்கான முயற்சி எடுத்தார். ஆனால் அது கைகூடவில்லை.
இளகிய மனதிற்கு சொந்தக்காரியான நயன்தாராவை மிக எளிதாக தனது காதல் வலையில் வீழ்த்தி விடுகிறார் பிரபுதேவா.
இந்த காதலிலும் காதலன் உயர்வுக்கு பக்கபலமாக இருக்கிறார். நயன்தாராவால் பிரபுதேவாவுக்கு சில பட வாய்ப்புகள் இயக்குவதற்கு கிடைக்கின்றன.
காதலில் நேர்மை என்பது நயன்தாராவின் கொள்கை. அது போல் தன் காதலன் தன்னிடம் மட்டுமே அன்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பதும் நியாயம் தானே.
பிரபுதேவா மேல் தான் கொண்ட காதலுக்காக இந்துவாக மதம் மாறினார். பிரபுதேவா பெயரை கையில் பச்சை குத்திக்கொண்டார்.
காதலிக்க தொடங்கும்போதே முதல் மனைவி மற்றும் குழந்தைகளுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள மாட்டேன் என்று உறுதி அளித்திருந்த பிரபுதேவா அதை மீறும்போது அவரால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஏமாற்றப்பட்டதாக நம்பினார்.
அந்தக் காதலும் முடிவுக்கு வந்தது. காதலித்த வரை அவருக்கும் வெளிச்சமாக திகழ்ந்தார்.
எந்த பெரிய பின்புலமும் இல்லாத கதை சொல்ல வந்த விக்னேஷ் சிவனுடன் மூன்றாவது காதல். அதே அன்பு, அதே உயர்வு, அதே வெளிச்சம் விக்னேஷ் சிவனுக்கும் கிடைத்தது.
இருவரும் காதலில் காட்டிய நேர்மை திருமணமாக உயர்ந்தது. இருவரும் சீரோடும், சிறப்போடும் வாழ நாமும் வாழ்த்துவோம்.
மேற்கண்ட அனைத்து காதலிலும் நயன்தாரா சாதாரண பெண்ணாக நேர்மையுடன் நடந்து கொண்டார். அந்த நேர்மை அவரது காதலை வெற்றி பெற செய்தது.
இனியும் தொடரும்… மீண்டும் சந்திப்போம்.
(நன்றி : ராமராஜன்)
Actress Nayantharas love and life review