பாடல் எழுதி பாடி நடித்து அசத்திய *ஹானஸ்ட்லி* ஆண்ட்ரியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல நடிகையும் பின்னணி பாடகியுமான ஆண்ட்ரியாவின் (Honestly) “ஹானஸ்ட்லி” ஆல்பம் சாங் கடந்த வாரம் வெளியானது.

இந்த வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த பாடலை ஆண்ட்ரியாவே எழுதி பாடி நடித்தும் இருந்தார்.

இசையமைப்பாளர் லியான் ஜேம்ஸ் மற்றும் கெபா ஜெரிமியா (guitarist ) ஆகியோரும் இப்பாடலில் ஆண்ட்ரியாவுடன் இணைந்து பணியாற்றினர்.

யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற இசையமைப்பாளர்கள் இசையில் பல ஹிட் பாடல்களை ஆண்ட்ரியா பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Actress Andreas single Honestly Music Video Released

https://www.filmistreet.com/video/honestly-music-video-the-jeremiah-project/

இந்தியன்2-க்கு பிறகு தேவர்மகன்2 படத்தை தொடங்க கமல் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவில் தற்போது சீசன் 2 காலம் தொடங்கிவிட்டது.

அதிலும் முக்கியமாக தமிழ் சினிமாவில் இரண்டாம் பாக படங்கள் அதிகளவில் தயாராகி வருகிறது.

இதில் ஒரு சில 2ஆம் பாக படங்கள் வெற்றிப் பெறவில்லை என்றாலும் அந்த முயற்சியை சம்பந்தப்பட்டவர்கள் விடுவதாக தெரியவில்லை.

இந்நிலையில் கமலும் 2ஆம் பாக முயற்சியில் தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

விரைவில் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடிக்கவுள்ளார் கமல்.

கீர்த்தியிடம் காதலை சொன்ன சதீஷ்; விஷால்-25 விழா சதீஷ்-25 ஆனது

இப்படத்தை முடித்துவிட்டு மாபெரும் வெற்றிப் பெற்ற தேவர் மகன் இரண்டாம் பாகம் படத்தை தொடங்கவுள்ளாராம்.

1992ல் வெளியான இந்த படத்துக்கு அப்போது தேசிய விருது கிடைத்தது. மேலும் இது ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இவையில்லாமல் இந்தி, கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

கமல் தற்போது தீவிர அரசியலில் ஈடுப்பட்டு வருவதால் தேர்தலுக்கு முன்பே தன் கைவம் உள்ள படங்களை முடிக்க திட்டமிட்டுள்ளாராம்.

After Indian2 Kamal Haasan planning to make Thevar Magan2

கீர்த்தியிடம் காதலை சொன்ன சதீஷ்; விஷால்-25 விழா சதீஷ்-25 ஆனது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லிங்குசாமி இயக்கத்தில் உருவான சண்டக்கோழி2 படம் விஷாலின் 25வது படமாகும்.

எனவே விஷாலை வாழ்த்த அவருடன் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் மோகன்லால், ஷங்கர், குஷ்பூ உள்ளிட்ட பல பிரபலங்கள் வந்திருந்தனர்.

அப்போது விஷால், கீர்த்தி, வரலட்சுமி, சதீஷ், ஹிப் ஹாப் ஆதி ஆகியோர் மேடையேறினர்.

அப்போது விஷால் மேடையில் இருந்த அனைவரையும் கலாய்த்து பேசினார்.

ஒவ்வொரு முறையும் எப்படியாவது கீர்த்தியிடம் காதலை புரபோஸ் செய்துவிட்டார் சதீஷ். இது கிட்டதட்ட 25வது முறையாகும்.

இது விஷால் 25 விழா அல்ல. இது சதீஷ் 25 விழா என்றாகிவிட்டது” என்று கலாய்த்து பேசினார் விஷால்.

நயன்தாரா பட இயக்குனருடன் இணையும் ஜெய்-பிக்பாஸ் டேனியல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நயன்தாரா நடித்த அறம் படத்தை கோபி நயினார் இயக்கியிருந்தார்.

கடந்த ஆண்டு வெளியான அறம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனையடுத்து அறம் 2 படத்தை இயக்குவார் கோபி நயினார் என எதிர்பார்க்கப்பட்டது.

இதனிடையில் தனது அடுத்த படத்தை துவங்கியிருக்கிறார் டைரக்டர்.

இதில் நாயகனாக ஜெய் நடிக்கிறாராம்.

இது வடசென்னையில் நடக்கும் குத்துச் சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளதாம்.

பிக்பாஸ் 2-வது சீசனில் பங்கேற்ற காமெடி நடிகர் டேனியல் அனி போப் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு நேற்று துவங்கியது.

இம்சை அரசன் பிரச்சினை தீரல; வெங்கட் பிரபுடன் இணையும் சிம்புதேவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வடிவேலு இரண்டு வேடங்களில் நடித்து சிம்புதேவன் இயக்கத்தில் உருவான ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தை ஷங்கர் தயாரித்து இருந்தார்.

2006ஆம் ஆண்டு வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெறவே, இதன் இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டது.

ஆனால், வடிவேலு சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல காரணங்களால் படம் நிறுத்தப்பட்டது.

இதனால் வெறுத்துப் போன டைரக்டர் சிம்புதேவன் வேறொரு படத்தை இயக்கப் போகிறாராம்.

இப்படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு தயாரிக்கவுள்ளார்.

இப்படம் 6 முக்கியக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகிறதாம்.

சிவா, ஜெய், வைபவ், வெங்கட் பிரபு, பிரேம்ஜி, ஜனனி, அஜய் மாஸ்டர் ஆகியோர் இப்படத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

அடுத்த அக்டோபர் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

மதுக்கலாச்சாரத்திற்கு எதிராக பாடல் இயற்றிய கபிலன் வைரமுத்துவுக்கு சிறந்த சமூக சிந்தனையாளருக்கான விருது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மருத்துவர் பொன்னம்பல நமச்சிவாயம், எட்டுத் தோட்டாக்கள் திரைப்பட தயாரிப்பாளர் வெள்ளபாண்டியன், காவல்துறை ஆய்வாளர் காஞ்சனா ஆகியோரும் விருது பெறுகிறார்கள்.

கடந்த 20 வருடங்களாக பல்வேறு சமூக சேவை மற்றும் விழிப்புணர்வு பணிகளை ஆற்றிவரும் DVM சேவா பாலம் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வெறு துறைகளில் சிறந்த பங்களிப்புக்கான விருதுகளை வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு விருது பெறுவோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

எளிய மக்களுக்கான மருத்துவ சேவைக்காக ஸ்டேன்லி அரசு மருத்துவமனையின் முதன்மையர் மருத்துவர் பொன்னம்பல நமச்சிவாயம், சிறந்த அறுவை சிகிச்சைக்காக மருத்துவர் ரமாதேவி, மகளிர்க்கு பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் காவல்துறையின் சிலை தடுப்புப் பிரிவு ஆய்வாளர் காஞ்சனா ஆகியோருக்கு விருது வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் நிலவும் மதுக் கலாச்சாரத்திற்கு எதிராக ஏந்திரு அஞ்சலி ஏந்திரு என்ற தனிப்பாடலை உருவாக்கிய கவிஞர் கபிலன் வைரமுத்துவுக்கு சிறந்த சமூக சிந்தனையாளருக்கான விருது வழங்கப்படுகிறது.

எழுத்தாளர் அய்யாசாமி, ஒளிப்பதிவாளர் செல்லத்துரை, எட்டுத் தோட்டாக்கள் திரைப்பட தயாரிப்பாளர் வெள்ளபாண்டியன் ஆகியோரும் விருது பெறுகிறார்கள்.

இதற்கான விழா வருகிற அக்டோபர் 2ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறுகிறது.

விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி திருமதி R.ஹேமலதா தலைமை விருந்தினராக பங்கேற்கிறார்.

அயர்லாந்து தூதர் ராஜீவ் மேச்சேரி மேச்சேரி, மனித நேயர் வரதராஜன், ஊடகவியலாளர் சுமந்த்.சி.ராமன், போன்ற முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள்.

பத்திரிகை உலகில் பாலம் என்ற மலரும் வெளியிடப்படுகிறது. விழா ஏற்பாடுகளை DVM சேவா பால நிறுவனர் இருளப்பன் மற்றும் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

DVM Seva Paalam announces 2018 awards Big recognition for Kabilan Vairamuthus Yenthiru Anjali Yenthiru

More Articles
Follows