விஜய்சேதுபதி கதையில்தான் சூர்யா நடிக்கிறாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நானும் ரௌடிதான் படத்தை தொடர்ந்து, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார் என செய்திகள் வந்தன.

இதில் விஜய்சேதுபதியுடன் இரண்டு நாயகிகள் நடிப்பார்கள் எனவும் கூறப்பட்டது.

திடீரென சூர்யா படத்தை இயக்க ஒப்புக் கொண்டார் விக்னேஷ் சிவன்.

இந்நிலையில் விஜய்சேதுபதிக்காக எழுதப்பட்ட கதையில்மாற்றம் செய்துதான், சூர்யா நடிக்கிறார் என்ற செய்திகள் வெளியாகின.

ஆனால் இதை மறுத்துள்ள படக்குழுவினர் சூர்யா 35 படத்தின் கதை முற்றிலும் புதியது. என தெரிவித்துள்ளனர்.

இதன் சூட்டிங் செப்டம்பர் இறுதியில் தொடங்கப்பட உள்ளது.

போக்கிரிக்கு அப்புறம் அதே ஸ்டைலில் பைரவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்யின் நடனத்தை போலவே, அவரது டிரெஸ் ஸ்டைலுக்கும் தனி கூட்டம் உள்ளது.

ஷாஜகான் படத்தில் அவரது உடைகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

அதன்பின்னர் திருமலை, போக்கிரி உள்ளிட்ட படங்களில் சட்டையை திறந்து விட்டு நடித்திருப்பார்.

இதில் போக்கிரியில் உள்ளே ஒரு சட்டை அணிந்திருப்பார்.

தற்போது பைரவா படத்திலும், இதுபோன்ற ஸ்டைலில் உடை அணிந்து நடித்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

பரதன் இயக்கும் பைரவா படப்பிடிப்பு தற்போது ராஜமுந்திரியில் நடைபெற்று வருகிறது.

சரித்திர நாயகி ஜெயலலிதா படத்துடன் த்ரிஷாவின் ‘நாயகி’யும் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாளை செப்டம்பர் 16ஆம் தேதி ஐந்து தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகிறது. இதில் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் படமும் வெளியாகிறது.

புரட்சித் தலைவியின் நடிப்பில், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் ஜெயலலிதா சொந்தக்குரலில் பாடியிருக்கும் படம் சூரிய காந்தி.

கடந்த 1973 ஜூலையில் இப்படம் ரிலீஸானது. இதில் ஜெயலலிதாவுடன் முத்துராமன், மேஜர் சுந்தர்ராஜன், மனோரமா, சோ ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் நாளை டிஜிட்டல் பிரிண்டில் ரிலீஸ் ஆகிறது.

இத்துடன் வெளியாக உள்ள மற்ற படங்களின் பற்றி ஒரு பார்வை….

த்ரிஷாவின் மிரட்டலான நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள படம் நாயகி. இதில் இரண்டு வேடம் ஏற்றுள்ளார்.

ஒரு கேரக்டரில் 20 வயது பெண்ணாக நடித்துள்ளார். தமிழகத்தில் மொத்தம் 200 திரையரங்குகளில் இப்படத்தை வெளியிடுகிறது ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்.

இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சமூக அக்கறையுடன் உருவாகியுள்ள படம் பகிரி. நிறைய புதுமுகங்கள் இதில் அறிமுகமாகின்றனர்.

பிரபு ரணவீரன் மற்றும் ஷ்ரவியா ஜோடியாக நடித்துள்ளனர்.

நீண்ட இடைவேளைக்கு பின்னர் கரண் நடிப்பில் வெளியாகவுள்ள படம் உச்சத்துல சிவா. இவருடன் நேகா, ஆடுகளம் நரேன், இளவரசு, கும்கி அஸ்வின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசை வித்யாசாகர்.

இத்துடன் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள சதுரம் 2 படமும் ரிலீஸ் ஆகிறது. இதில் சௌந்தர்யா ரஜினியின் நண்பர் ரியாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் முதல்பாகம் இன்னும் வரவில்லையே என்று கேட்பவர்களுக்கு நாங்க என்ன சொல்றது தெரிலையே பாஸ்.?

கமலை தொடர்ந்து டாப் ஹீரோவுக்கு ஜோடியாகும் கோவை சரளா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் காமெடி செய்ய, ஏராளமான நடிகர்கள் இருந்தாலும் நடிகைகளில் ஒரு சிலரே உள்ளனர்.

அதில் முக்கியமானவர் கோவை சரளா.

பல படங்களில் காமெடி வேடம் செய்திருந்தாலும், சதிலீலாவதி படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் இவர்.

தற்போது மீண்டும் ஒரு படத்தில்  நாயகியாக  நடிக்கவிருக்கிறாராம். (ஒருவேளை இரண்டாவது நாயகியோ?)

பாலாவின் உதவி இயக்குனர் பிரகாஷ் இயக்கவுள்ள இப்படத்தின் நாயகன் சசிகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிடாரி இசையமைப்பாளர் தர்புகா சிவாவே இப்படத்திற்கும் இசையமைக்கவுள்ளார்.

இதில் சங்கிலி முருகனின் ஜோடியாக சரளா நடிப்பார் என தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் 21ஆம் தேதி முதல் இதன் படப்பிடிப்பு துவங்குகிறது.

‘ஹீரோயின் அம்மாவை சைட் அடிக்க சொன்னார் டைரக்டர்’ – ரவிமரியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காமெடி கலந்த வில்லன் வேடமா? கூப்பிடுங்கள் ரவிமரியாவை என்கிற அளவுக்கு முத்திரை பதித்து இருக்கிறார்.

தொடர் வெற்றி கனிகளை சுவைத்து வரும் இவரது நடிப்பில் நாளை பகிரி என்ற திரைப்படம் வெளியாகவுள்ளது.

இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ள இப்படம் குறித்து ரவிமரியா தெரிவித்துள்ளதாவது….

‘’இசக்கி கார்வண்ணன் ஏற்கெனவே இரண்டு படங்களை தயாரித்தவர். ஒரு அனுபவம் வாய்ந்த இயக்குனராக படத்தை எழுதி இயக்கியிருக்கிறார்.

முக்கியமாக கலைஞர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து வேலை வாங்கினார்.

இதில் எனக்கு கவுன்சிலராவதற்காக காத்திருக்கும் கேரக்டர். எப்படியாவது அந்த வார்டு கவுன்சிலராகிவிட வேண்டும் என்று ஆசைப்படுவேன்.

ஆனால் அது இறுதிவரை நடக்காது. அதற்கான காரணத்தை படத்தில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

இது தவிர ஹீரோயினின் அம்மாவை சைட் அடிக்கும் கேரக்டர். ஹீரோயின்னா சைட் அடிக்கலாம். ஹீரோயின் அம்மாவா? என்று தயக்கத்துடன் தான் ஸ்பாட் போனேன்.

ஆனால் ஹீரோயின் அம்மாவாக ஹீரோயினுக்கு சமமான அழகான ஆர்ட்டிஸ்டை தேர்வு செய்திருந்தார் இயக்குனர்.

ஸ்பாட்டிலும் ஹீரோயினுக்கும் ஹீரோயின் அம்மாவுக்கும் யார் அதிக அழகு என்ற போட்டி நடக்கும். அதனாலேயே நான் படப்பிடிப்பு முடிந்தவுடன் நமக்கெதுக்கு வம்பு என்று வீட்டுக்கு கிளம்பிவிடுவேன்.

இந்த படத்தில் நான் வரும் காட்சிகள் எல்லாமே சிரிக்க வைக்கும். ஒரு பார் காட்சி எடுக்கும்போதே எல்லோரும் கைதட்டினார்கள்.

இந்த படத்துக்கு பகிரி என்று டைட்டில் வைத்தார் இயக்குனர். எங்கு படப்பிடிப்பு போனாலும் அங்கு வரும் புதிய மனிதர்களிடம் பகிரிக்கு விளக்கம் கேட்போம். எல்லோருமே முழிப்பார்கள்.

நம் தமிழ் மொழியின் நிலை இப்படித்தான் இருக்கிறது. பகிரி என்பதற்கு வாட்ஸ் அப் என்று அர்த்தம் என்பது படம் வந்தபின்பு எல்லோருமே அறிந்துகொள்வார்கள். தமிழ் சினிமாவில் இதுபோன்ற தூய தமிழ் வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தப்பட வேண்டும்’’.

இவ்வாறு தெரிவித்தார் ரவிமரியா

‘காவிரி பிரச்சினையை ரஜினி பேசி தீர்க்கலாம்’ – பார்த்திபன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காவிரி தண்ணீர் பிரச்சினை தொடர்பாக, தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கு பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது.

தற்போதும் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து, கர்நாடகாவில் வன்முறை நடந்து வருகிறது.

இதனை கண்டிக்கும் வகையில் நாளை தமிழகத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில், இப்பிரச்சினை குறித்து நடிகர் பார்த்திபன் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது…

‘பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஜினி நெருங்கிய நண்பர். எனவே பிரதமரிடம் ரஜினி பேசி இந்த பிரச்சனைக்கு தீர்வு காண சொல்லலாம்’ என தெரிவித்துள்ளார்.

More Articles
Follows